• April 8, 2024

தமிழ்நாட்டிற்குள் நுழைந்த Omicron வகை கொரோனா !

கொரோனா வைரஸ்-ன் புதிய பரிமானமான ஓமிக்ரான் வைரஸ் தமிழகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டது. நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய 47 வயதான சென்னை நபர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு ஓமிக்ரான் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸுக்கான முதல் பதிவு இதுவே என சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக டிசம்பர் 10ஆம் தேதி வந்த பயணிக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆறு பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. […]Read More

100% காகிதம் இல்லாத டிஜிட்டல் அரசாக மாறிய துபாய் அரசாங்கம் !!!

எமிரேட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான், 100% காகிதம் இல்லாத உலகின் முதல் அரசாங்கமாக துபாய் அரசு மாறியுள்ளது என அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த துபாயும் இனி டிஜிட்டல் துபாயாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் மூலம் வருடத்திற்கு 1.3 பில்லியன் திர்ஹாம் அரசாங்கத்திற்கு சேமிக்கப்படும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 2650 கோடி ரூபாய் அரசுக்கு சேமிப்பாக இருக்குமாம். துபாய் முழுமையாக டிஜிட்டல் மயமானதற்கு உலக நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். துபாய் அரசாங்கத்திற்கு […]Read More

தந்தையை போல நாட்டிற்கு சேவை செய்ய துடிக்கும் சிறுமி !!!

சமீபத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை பிபின் ராவத்தை நாடு இழந்தது. இந்நிலையில் இறந்துபோன விங் கமாண்டர் பிரித்திவி சிங் சவுகானின் 12 வயது மகள் ஆரத்யா தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்திய விமானப்படையில் பைலட்டாக மாற விரும்புவதாக கூறியுள்ளார். விங் கமாண்டர் சவுகானின் மகள் ஆரத்யா அவரது தம்பியுடன் சேர்ந்து தாஜ்கஞ்ச் சுடுகாட்டில் […]Read More

விலை குறைந்ததால் 50 Kg வெங்காயத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய விவசாயி !!!

வெங்காயத்தை விளைய வைத்து அதற்கான பொருட்செலவு கூட லாபமாக கிடைக்காததால் ஆந்திர மாநிலம் கர்னூல் வேளாண் சந்தையில் ஒரு வெங்காய விவசாயி விளைந்த வெங்காயங்களை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இச்சம்பவம் கேள்விப்படுவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சமீபத்தில் பெய்த கன மழையால் ஆந்திர மாநிலத்தில் வெங்காயம் ஒழுங்கான முறையில் விளையவில்லை. குறைவான தரத்தில் அதிக வெங்காயங்கள் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் அதன் விலை மிகவும் சரிந்துள்ளது. கர்னூல் வேளாண்மை சந்தையில் வெங்காயத்தின் விலை குவிண்டால் ரூபாய் 400 ஆக […]Read More

கொரியன் மொழியில் இருக்கும் தமிழ் வார்த்தைகள் ! விசித்திர வரலாறு !

உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி என ஒவ்வொரு தமிழரும் கர்வத்துடன் சொல்கிறோம். தமிழ் மொழியில் பேசப்படும் சில வார்த்தைகள் கொரியன் மொழியிலும் பேசப்படுகிறது என்று சொன்னால், அது நம்பும்படியாக இருக்கிறதா???… ஆம் கொரியன் மொழிகளில் சில வார்த்தைகள் தமிழ் மொழியின் வார்த்தைகளை போலவே இருப்பதுடன், ஒரே அர்த்தத்தையும் கொடுக்கிறது. இந்த இரு மொழிகளுக்கும் இணையான வார்த்தைகளை மொழியியல் வல்லுனர்கள் திராவிட கொரியன் மொழிகள் என குறிப்பிடுகின்றனர். திராவிட மொழிகளுக்கும் கொரியன் மொழிக்கும் இருக்கும் தொடர்பை மையப்படுத்தி […]Read More

வேகமாக பரவும் ஓமிக்ரான் வகை கொரோனா ! 144 தடை உத்தரவு !

கொரோனா வைரஸின் புதிய பரிமாணமான ஓமிக்ரான் வகை கொரோனா மும்பை மாநகரில் அதிகம் பரவும் காரணத்தினால் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு நகர் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுகளில் மக்கள் அதிகம் வெளியே நடமாட வாய்ப்புள்ள காரணத்தினால் இந்த 144 தடையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் ஆனது, இதற்கு முன்பு வந்த கொரோனா மற்றும் டெல்டா வகை கொரோனாவை விட பல மடங்கு வீரியம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற […]Read More

5 வினாடிகள் உலகம் சுழல்வது நின்றுவிட்டால் என்ன ஆகும் ??

ஒரு மணி நேரத்திற்கு 1600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும் பூமி திடீரென ஒரு ஐந்து வினாடிகளுக்கு சுற்றுவதை நிறுத்தி விட்டால் என்னவாகும் என கற்பனை செய்து இருக்கிறீர்களா. ஒரு வேளை உலகம் சுழல்வது ஐந்து வினாடிகள் நின்று விட்டால் என்னவெல்லாம் ஆகும் என்பதை பற்றிய பதிவுதான் இது. இந்த உலகமானது அண்டத்திற்கு வெளியே ஏற்பட்ட பல்வேறு மூலப்பொருட்களின் மோதலால் சுழற தொடங்கியது. ஒரு நாளைக்கு ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் இந்த பூமி பல்வேறு உயிரினங்களின் […]Read More

வலியின்றி தற்கொலை செய்து கொள்ள உதவும் நவீன கருவி !!!

தற்கொலை செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு எந்தவித வலியும் இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான பிரத்தியேக மிஷின் ஒன்றை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நவீன தற்கொலை இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து மருத்துவ வாரியமும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பிரத்தியேக கருவியானது 3d பிரின்டர் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த கருவிக்கு சார்கோ Suicide pods என பெயர் சூட்டியுள்ளனர். தற்கொலை செய்து கொள்ள விரும்புவார்கள் இந்த சாக்கோ சூசைட் பாடிற்குள் சென்று படுத்துக் கொண்டால் போதும். சிறிது […]Read More

கொரோனா வைரஸ் பட்டால் பச்சை வண்ணத்தில் மாறும் அதிசய மாஸ்க் !!

2019ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை கொரோனா ஒட்டு மொத்த உலகத்தையே ஆட்டிப் படைக்கிறது. இந்த நோய்க்கு தீர்வு காண பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்களும், வல்லுனர்களும் மக்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முகக்கவசத்தில் படர்ந்த உடன் அந்த முக கவசம் ஒளிரும் படியான ஒரு அரிய கண்டுபிடிப்பை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கியோட்டோ பெர்பெக்டுவரல் ( Kyoto Perfectural ) பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே இந்த அரியவகை கண்டுபிடிப்பை சாத்திய படுத்தியுள்ளனர். இவர்கள் […]Read More

மது அருந்தியவுடன் நமக்கு என்னவெல்லாம் ஆகும் ??

மது அருந்தி விட்டால் ஒரு மனிதன் தடுமாற்றம் இல்லாமல் நிலையாக இருப்பது கடினம். மதுவை அருந்தியவுடன் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு தான் இது. முதலில் மதுவை அருந்திய பின் அது சாதாரண குளிர்பானங்களை போலவோ, உணவுப்பொருட்களை போலவோ நமக்கு ஜீரணமாகாது. அதற்கு பதில் நாம் அருந்திய மதுவானது நமது ரத்த ஓட்டத்தில் கலந்துவிடும். இப்படி ரத்த ஓட்டத்தில் கலக்கும் மது முதலில் நமது மூளையை சென்றடையும். […]Read More