• April 20, 2024

Tags :தமிழ் மொழி

தமிழனும், தமிழ் மொழியின் தொன்மையும்…!

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே ஞானம் கைக்குழந்தையாய் இருந்த வேளையிலே முன் தோன்றிய மூத்த குடி என்று புகழப்படும் தமிழனின் பாரம்பரியம்,தமிழ் மொழியின் தொன்மையும் பன்னெடும் காலம் முதற்கொண்டு தோன்றின் புகழோடு தோன்றி இன்று வரை இளமையோடு இருக்கிறது. இப்படிப்பட்ட தெய்வ ஒன்டமிழ் மொழியானது இன்று இந்திய அரசியல் சாசனத்தால் ஏற்று கொள்ளப்பட்ட 14 மொழிகளில் ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உயர் தனிச் செம்மொழியாக விளங்குகிறது. தமிழ் மொழியை பொறுத்தவரை உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து என […]Read More

“ண”, “ன” மற்றும் “ந” எங்கெல்லாம் வரும்?

ஒரு எளிய விளக்கம் தமிழ் எழுத்துகளில் இரண்டு சுழி “ன” என்பதும், மூன்று சுழி “ண” என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.“ண” இதன் பெயர் டண்ணகரம்,“ன” இதன் பெயர் றன்னகரம்,“ந” இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி. டண்ணகரம் மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி “ணகர” ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து ‘ட‘ வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு “டண்ணகரம்” என்று பெயர். றன்னகரம் தென்றல், சென்றான் […]Read More

பிறப்பொன்றே எம்தமிழ்

தனிப் பெருமையோடெம் தமிழ்தரணியாளும் தங்கத்தமிழ்உயர்வினும் உயர்த் தமிழ்உடலல்ல எம்முயிர்த் தமிழ் ஊமையும் உரக்கப் பேசசிறக்கச் செய்ததெம் தமிழ்மொழியையும் விழிகளாய்உற்றுப் பார்க்கச் செய்ததெம் தமிழ் பூமித்தாயையே சேயாய்பெற்றெடுத்ததெம் தமிழ்பூமிக்கே ஓர் உணர்வடிவம்முதலாய் தந்ததெம் தமிழ் கற்காலம் கடந்து வந்தேபொற்காலம் செய்ததெம் தமிழ்கர்ப்பினை பொற்கொடை என்றேபோற்றி பறைசாற்றியதெம் தமிழ் நரம்பினில் இரும்புக் குழம்பெனகொதித் தோடியதெம் தமிழ்புறம் கூறி புலம்பு வார்க்கெல்லாம்செம்மையை உரைத்ததெம் தமிழ் தெய்வமே திருவருளியதெம் தமிழ்அசரீரியாய் ஒலியெழுந்ததெம் தமிழ்அன்பின் ஆழமதில் அடையாளமாய்அர்த்தம் தந்ததெம் தமிழ் பிறக்கும் குழந்தையாய்பிறந்தோங்குவதும் எம்தமிழ்யாதழிந்த […]Read More

மூத்த தேவி, இன்று நாம் திட்டும் மூதேவி ஆனது எப்படி?

தவ்வை என்பவள் யார் என்பதை பாகம் 1-ல் பதிவில் பார்த்தோம். சங்ககாலத்தின் மூத்த தெய்வம், இன்று அமங்கலத்தின், அழுக்கின் உருவமாக பார்க்கப்படுகிறது. வரலாற்றில் தெய்வமாக வணக்கப்பட்டவள், இன்று எப்படி ஒரு திட்டும் வார்த்தையாக மாறிப்போனால் என்பது இன்றுவரை பதில் கிடைக்காத ஒரு கேள்வி. இருப்பினும் இந்த கேள்விக்குள் இருக்கும் ஒரு சூழ்ச்சியை இந்த பதிவின் இறுதியில் பார்ப்போம். தமிழர்களின் தாய் தெய்வமான தவ்வையின் சிலையை சுற்றி, கழுதை, தொடப்பம், காக்கை ஆகிய மூன்றும் எப்பொழுதும் இருக்கும். இவை […]Read More

தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில்?

உலகில் எம்மொழிக்கும் இல்லாத தனித்துவமான சிறப்புகள் நம் தமிழ் மொழிக்கு இருக்கிறது. பொதுவாக மருத்துவ குறிப்புக்கள் என்பது பல மொழிகளில் இருக்கும், ஆனால் ஒரு மொழியே மருத்துவமாக இருக்கிறது என்றால், அந்த பெருமை நம் செம்மொழி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. நீங்கள் என்றாவது தமிழ் மொழிக்கு ஏன் குறில், நெடில் இருக்கிறது என்றும், அதன் அவசியம் மிக முக்கியமானதா என்றும் என்றாவது எண்ணியதுண்டா! a, e, i, o, u என ஆங்கிலத்தில் ஐந்தே ஐந்து […]Read More

சித்தி என்ற சொல் எப்படி வந்தது ?

இ என்பது பெண்பால் விகுதி.அழகு + இ = அழகிகண் + இ = கண்ணி ஆண்பால் பெண்பால் விகுதிகளைக்கொண்டு பண்புப் பெயர்ச்சொல்லை முன்னொட்டாய்ச் சேர்த்து அப்பண்புக்குரிய உயர்திணைப் பெயரை உருவாக்கலாம். சிறுமை + அப்பா = சிற்றப்பாசிறுமை + அன் = சிறியன் சிறு என்பதனை முற்றியலுகரமாய்க் கொண்டு ‘வ்’ உடம்படுமெய் தோன்றச் செய்தால் சிறு வ் அன் = சிறுவன் ஆகும். அன் என்பது ஆண்பால் விகுதியாய் வந்ததுபோல, இ என்பது பெண்பால் விகுதியாய் […]Read More

தமிழில் மனைவிக்கு 59 பெயர்கள்

ஏய்.. இங்கு இப்படிதான் சிலபேர் தன் மனைவியை மரியாதை இல்லாமல் பொதுவாக அழைக்கிறார்கள். ஆணுக்கு பெண் சரிசமம் என்பதை அர்த்தநாரீஸ்வரராக இருந்து இறைவனே உணர்த்தியுள்ளார். நம்மில் பாதியாக உள்ள மனைவிக்கு ஆங்கிலத்தில் Wife, Spouse என ஒரு சில மாற்று பெயர்களே உள்ளன. ஆனால் நம் தாய்தமிழில் மனைவிக்கு59 பெயர்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இனி உங்கள் மனைவியை, வாய்க்கு வந்தவாறு கூப்பிடாமல், இதில் ஏதாவது ஒரு பெயரை தேர்ந்தெடுத்து, அதில் தமிழோடு அழையுங்கள். […]Read More

அழகுத் தமிழாம்!

அன்பும் தமிழாம்!அழகும் தமிழாம்!! ஆதியும் தமிழாம்!ஆக்கமும் தமிழாம்!! இன்பமும் தமிழாம்!இயற்கையும் தமிழாம்!! ஈரமும் தமிழாம்!ஈர்ப்பும் தமிழாம்!! உண்மையும் தமிழாம்!உயர்வும் தமிழாம்!! ஊனும் தமிழாம்!ஊக்கமும் தமிழாம்!! எண்ணமும் தமிழாம்!எழுச்சியும் தமிழாம்!! ஏகனும் தமிழாம்!ஏற்றமும் தமிழாம்!! ஐயமும் தமிழாம்!ஐம்புலனும் தமிழாம்!! ஒழுக்கமும் தமிழாம்!ஒற்றுமையும் தமிழாம்!! ஓங்கும் தமிழாம்!ஓர்மையும் தமிழாம்!! ஒளதசியமும் தமிழாம்!அதுவே, ஒளவை போற்றிய அழகுத் தமிழாம்!! சனோஃபர் எழுத்தாளர் ஏகன் – இறைவன் ஓர்மை – துணிவு ஒளதசியம் – அமிர்தம்Read More