நினைவுகள் வற்றாத உன் கண்களில்நிறைந்திருப்பது எனக்கான நேசமா? நெருக்கம் உணர்ந்த பொழுதுகள்!நெருஞ்சி முள்ளான காலங்கள்!! விருப்பத்திற்கும் விலகலுக்குமானஉணர்வின் ஊசலாட்டங்கள்!!! வெப்பத்தணலாய்… நான்!வேட்கைக்கான அக்னிப்பிழம்பாய்…நீ! அகலாத நினைவுகளின்கொழுந்திட்ட தீயாக…நான்!! என் சுவாசித்தலின்சுடராய்…நீ!!விலகாத…விலக்காத நின்நுதல்; சுட்டெரிக்கும் சூரியன்!கானலான நம் நேசங்கள்;குளிர் நிலவு!! நித்தம் நெருடிடும் என் மனதின்நிஜம் நீ என்பதை அறிவிப்பாயா?Read More
Tags :காதல் கவிதைகள்
அன்பே! நீ காற்றாய் மாறிடு!எனைத் தொட்டுத் தழுவி கிறக்கிடு!தலை கோதி வருடி மயக்கிடு!சுவாசக் காற்றில் கலந்து எந்தன்மூச்சாய் மாறி வாழ்ந்திடு! அன்பே! நீ நீராய் மாறிடு!மழைத் துளியாய் முத்தமிடு!இடி மின்னி முழங்கிப் பொழிந்திடு!அதிரடி அன்பில் நனையவிட்டுமேனி நடுங்கச் செய்திடு! அன்பே! நீ நெருப்பாய் மாறிடு!காதல் நெய்யில் நனைத்திடு!மோக நெருப்பில் கொளுத்திடு!செந்நீரும் வற்றிப் போகுமளவுக்குதாகத்தில் என்னைத் தவிக்கவிடு! அன்பே! நீ நிலமாய் மாறிடு!எங்கிருந்தாலும் ஏந்திடு!சலிப்பின்றி வளங்களை ஈந்திடு!தாயைப் போல என்னைத் தாங்கிஎனக்கே எனக்காய் வாழ்ந்திடு! அன்பே! நீ வானாய் […]Read More
மோனத்தின் வலிமைமெல்லிசையின் இனிமைஆன்மாவின் அடியாழத்தில்பேரொலியை எழுப்புகிறது! உயிரளவான என் நேசிப்பை;வாழ்தலுக்கான இருத்தலை;தொலைதூரம் சென்று தேடவில்லை… !களிப்பூட்டும் உன்குரலின்;மாயாஜாலத்தில் வாழ்கிறேன்!! பருகிப் தீர்ந்துவிடநினைக்கும் வாழ்க்கையில்,தீராத காதலைநினைவில் நிறுத்திவிடும்மாயவித்தைக்காரனே!!! இன்று நான்அருகில் வர நினைத்தாலும்சூழலின் கைதியாய்எட்டவே நிற்கிறாய்….!அதனாலென்ன…? மனங்களின் இடைவெளியைத்தகர்த்து நெருக்கிஇணைத்துவிட்ட இதயங்களுக்குதூரமும் தூறல்போலத்தான்வா காதல் பெருமழையில் நனையலாம்!!Read More
எனக்கான உன் நினைவுகள்;வேதாளம் போல முதுகு மீதேறிஅமர்ந்து இறங்க மறுக்கின்றன…! நினைத்து புதைந்து போவதற்கானவரிகள்… எழுத்துக்கள்,லாவகமாக விரல் பிடித்துமார்பின் மீது தலை வைத்துசில்லென்ற ஸ்பரிசம் தொடுக்கின்றன…!! கண்ணீர் துளிகள்…பெருமூச்சுகள்,வாழாத வாழ்க்கையின் தேடல்கள்;யாருமற்ற தனிமையின் உணர்வுகள்;எல்லாவற்றிலும் எனதாகிப்போனவனேதூரத்தில் நின்று ஏன்வேடிக்கை பார்க்கிறாய்…?! என் பொழுதுகளைஆக்கிரமித்துக் கொள்ளும்,மறந்திருந்த…மறைந்திருந்தஉணர்வின் நினைவுகளைதட்டி எழுப்பும்… நீநீயே என் ஓளடதம்!!!Read More
என் கவிதையின் கவியே,காதல் அழகே!கதிரவன் கண் விழிக்கும் முன்உன் கண் முன்னால் – உன்னைக் காண,விழி மூடா விண்மீன்களாய் – வந்தேனடி! என் வருகை உணராமல் உறங்கிய காலங்கள் பல,உன்னை எழுப்ப முடியாமல் தவித்த நேரங்கள்,நாட்களை விழுங்கியது.அறிவில் மூத்தவள் நீ,அதனால் ஏனோ!அழகைக் கொண்டு, அழுகையை தருகிறாய்.சந்தோக்ஷங்கள் சில தந்து,சங்கடங்கள் பல தருவாய்! சொல் ஒன்று சொல்லி, செயல் ஒன்று செய்கையில்,என்னை உயிரோடு உருக்கினாய்!அடி மேல் அடி விழுந்தும்,அறிவில்லாமால் உன் அருகில்ஆசையோடு வந்தேனடி! விடைத்தெரியாமல், வெளிச்சம் இல்லாமல்,வாழ்க்கை பயணத்தின் […]Read More
அன்பும் தமிழாம்!அழகும் தமிழாம்!! ஆதியும் தமிழாம்!ஆக்கமும் தமிழாம்!! இன்பமும் தமிழாம்!இயற்கையும் தமிழாம்!! ஈரமும் தமிழாம்!ஈர்ப்பும் தமிழாம்!! உண்மையும் தமிழாம்!உயர்வும் தமிழாம்!! ஊனும் தமிழாம்!ஊக்கமும் தமிழாம்!! எண்ணமும் தமிழாம்!எழுச்சியும் தமிழாம்!! ஏகனும் தமிழாம்!ஏற்றமும் தமிழாம்!! ஐயமும் தமிழாம்!ஐம்புலனும் தமிழாம்!! ஒழுக்கமும் தமிழாம்!ஒற்றுமையும் தமிழாம்!! ஓங்கும் தமிழாம்!ஓர்மையும் தமிழாம்!! ஒளதசியமும் தமிழாம்!அதுவே, ஒளவை போற்றிய அழகுத் தமிழாம்!! சனோஃபர் எழுத்தாளர் ஏகன் – இறைவன் ஓர்மை – துணிவு ஒளதசியம் – அமிர்தம்Read More
அழகு மெய்பேசும் விழி அழகு,கவிபாடும் குயில் அழகு,அழியாத தமிழ் அழகு,அறிவான பெண் அழகு! பேரழகு மெய்யாக வாழ வழிச்செய்வது பேரழகு,குயில் பாட மரம் வளர்தல் மெய்யாக பேரழகு,உயிராக தமிழ் காத்தல் பேரழகில் பேரழகு,அறிவான பெண்களுக்கு அனுபவமே பேரழகு! – இரா.கார்த்திகாRead More
இரவின் மடியில் உன்னை நினைத்தேன்என்னைத் தேடி கண்களை விழித்தேன்நிலவின் ஒளியில் பனி வீசும் பொழுதில்ஓர் நதியாய் நாளும் மிதந்தேன்மழைவீசி மலராட சிறு துளியாக என் கைகளில் சேர்ந்தாய்!Read More
கட்டி இழுத்திடும்,காற்றினில் கரையாமல்…மின்சாரமாய் தாக்கும்,மின்னலில் மிரளாமல்…இருதயமுறைய இடிக்கும்,இடியினில் இடியாமல்…உயிரே…உறவாய்…உன்னைக் கண்டேனடி!மழைத்துளிகளின் நடுவே!! சனோஃபர் எழுத்தாளர்Read More
கல்லையே கரைக்கும் நமதுபேச்சால் கரைப்போம்,உன் தாய், தந்தை, அண்ணனை! காத்திருப்போம்கல்யாணம் செய்வோம்,கண்ணாடி வீடு கட்டிஅண்ணாந்து நிலா பார்ப்போம்! நாம் நிலா மூவர் மட்டும்தினம்தோறும் விழித்திருப்போம்! பைக்கில் பயணம் செய்துதாஜ்மஹாலில் இளைப்பாறுவோம்! விடுமுறைக்கு சுற்றுலா செல்வார்கள்,நாம் உலகம் சுற்றிவிட்டுவிடுமுறைக்கு மட்டும் வீடு வருவோம்! தப்பில்லாமல் சமையல் செய்ய,சில மாதம் எடுத்துக்கொள்வோம்! கதவு இல்லா வாசல் வைத்து,வந்தவர்க்கெல்லாம் உணவளிப்போம்!வாடி நிற்கும் அனைவருக்கும்தேடிச்சென்று உதவி செய்வோம்!! காலையில் இயற்கையோடு ஓட்டம் ஓடுவோம்,மாலையில் கால்பந்துஆடுவோம்! மழை பெய்தால் நனைந்துகொண்டேகாகிதக் கப்பல் விடுவோம்!கை கோர்த்து […]Read More