• April 13, 2024

உன் கற்பனை உலகில் கணவனாக!

 உன் கற்பனை உலகில் கணவனாக!

என் அருமை காதலே!
ஆசை பைங்கிளியே!

அலையாய் வந்து – என்னுள்
அன்பினை அளித்தாய்!
புயலாய் மாறி – பின்
பாச மழைப் பொழிந்தாய்!
கடலாய் சென்று – என்
கவலைகளைக் கறைத்தாய்!
மணிக்கணக்காய் பேசி – எந்தன்
மனத்தினைப் பிடித்தாய்!

மலையாய் நின்றாய் – பின்
மாயமாய் சென்றாய்!
ஏனோ! புரியவில்லை – உன்
ஆசை உணரவில்லை…

என் ஆருயிரே!
உன் கரம் பிடிக்க – ஏங்கியது
என் மனம் !
என்னை மறந்து…

என்றும் உன்னுடைய,
அழகனாக!
உன் அழகை ரசிக்கும்
கவிஞனாக!
உன் கற்பனை உலகில்
கணவனாக!
வாழ்க்கைச் சக்கரத்தில்,
வலம் வருவேன்,
ஓர் வழிக்காட்டியாய் !!!



K. கார்த்திக்

K. கார்த்திக்

செஞ்சிக் கோட்டை,
விழுப்புரம் மாவட்டம்.