• April 20, 2024

பூட்டி வைத்த நினைவுகள்

 பூட்டி வைத்த நினைவுகள்

தேக்கி வைத்த வார்த்தைகள் தவித்துக் கொண்டிருக்கிறது விழிகளில்,
பூட்டி வைத்த நினைவுகள் பொங்கிக்கொண்டிருக்கிறது நெஞ்சினில்,
சாத்திவைத்த கதவுகளாய் கவிதைப் பாடுது இதழ்ளில்,
தோண்டிப் புதைத்த நியாபகம் யாவும் தாளம்போடுது உயிரினில்,

பார்த்துப் பார்த்துப் பழகிய காலம்
மீண்டும் பிறந்தது நொடியினில்!


– இரா. கார்த்திகா