Deep Talks Tamil

விமானத்தில் தேங்காய் எடுத்துச் செல்வது ஏன் ஆபத்தானது? அறிவியல் காரணம் உங்களுக்குத் தெரியுமா?

விமானப் பயணத்தின் போது கூரான பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் தேங்காய் எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் ஒரு முக்கியமான அறிவியல் காரணம் உள்ளது. அது என்ன என்று பார்ப்போம்.

இயற்கையின் அற்புதப் படைப்பு தேங்காய்!

தேங்காய் என்பது ஒரு அற்புதமான இயற்கை அமைப்பைக் கொண்டது. இளநீராக இருந்து தேங்காயாக மாறும் வரை அதன் உள்ளே குறிப்பிட்ட அளவு வளிமண்டல அழுத்தம் இருக்கும். இந்த அழுத்தத்தை சமாளிக்க இயற்கையே அதற்கு ஒரு வலுவான கவசத்தை (சிரட்டை) வழங்கியுள்ளது. சில தேங்காய்களின் ஓடு வலிமை குறைவாக இருந்தால், அந்த ஓடு உடைந்து விடுவதும், கீறல் விழுவதும் உண்டு. இது வளிமண்டல அழுத்தம் தேங்காயின் உள்ளே செல்ல முயற்சிப்பதால் நிகழும் வினையாகும்.

வளிமண்டல அழுத்தமும் விமானப் பயணமும்

பூமியிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டல அழுத்தம் குறைந்து கொண்டே வரும். இதை சமன் செய்யும் விதமாக விமானங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருக்கும். விமானத்தின் உள்ளே அழுத்தத்தை சமன் செய்ய கம்ப்ரசர் இயங்கிக் கொண்டிருக்கும். விமானத்தின் இயந்திரத்தின் விசையிலிருந்தே தேவைப்படும் அளவு காற்று அழுத்தத்துடன் விமானத்தின் உள்ளே செலுத்தப்பட்டு குளிர்விக்கப்பட்டு பயணிகளுக்கு சுவாசத்தடையின்றி வழங்கப்படும்.

தேங்காயால் ஏற்படும் ஆபத்து

விமானம் மேலே செல்லும் சமயம் வளிமண்டல அழுத்தம் குறைந்து கொண்டே இருக்கும். இதே போன்ற தேங்காயை உயரே செல்லும் விமானத்தில் எடுத்து செல்லும்போது வளிமண்டல அழுத்த குறைபாட்டை சமன் செய்வதற்காக தேங்காய் பட்டீரென்று வெடித்துச் சிதறிவிடும் அபாயம் உண்டு. அதன் காரணமாக பயணிகள் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்படலாம் அல்லது பதட்டமும் உண்டாக்கிவிடலாம் என்பதற்காக விமானங்களில் தேங்காய் பெரும்பாலும் ஏற்ற அனுமதி பெறவில்லை.

தேங்காயின் சிறப்பு அம்சங்கள்

தேங்காயை நன்கு கவனித்தால் அதில் மூன்று பக்கங்கள் இருக்கும். அதில் ஒரு பக்கம் மட்டும் மற்ற இரு பக்கங்களை விட பெரியதாக இருக்கும். அந்த பக்கத்தில் மிக சரியாக அடித்தால் தேங்காய் எளிதில் உடைந்துவிடும். பெரும்பாலும் நேர்ச்சைக்காக தேங்காய் உடைக்கும்போது இந்த பக்கமே தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மற்ற தடை செய்யப்பட்ட பொருட்கள்

மை நிரப்பப்பட்ட பேனாக்களும் விமானத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் அதிலிருந்து மசி பொங்கி வெளிவந்து பயணிகளின் உடைகளை நனைத்துவிடும் அபாயம் உள்ளது. அதேபோல பாதரசமும் விமானத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பாதரசம் அலுமினியத்துடன் உடனடியாக தீவிர வினை புரிந்து, விமானத்தின் உடல் பகுதியை சேதப்படுத்தக்கூடிய ஆபத்து உள்ளது.

பாதுகாப்பே முதன்மை

விமானப் பயணத்தில் பல்வேறு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அனைத்துமே பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே செய்யப்பட்டுள்ளது. அறிவியல் காரணங்களை அறிந்து, விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வது நம் அனைவரின் கடமையாகும்.

Exit mobile version