Deep Talks Tamil

மௌரியர் பேரரசர் அசோகரால் ஏன் தென்பகுதியை ஆள முடியவில்லை – காரணம் தெரிந்தால் அரண்டு விடுவீர்கள்..!

ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு மௌரிய பேரரசில் அசோகர் இந்தியாவின் பெரும் பகுதியான வடபகுதியை மட்டுமல்லாமல் இன்று இருக்கும் பாகிஸ்தான், நேபாள், பங்களாதேஷ்  போன்ற பல பகுதியையும் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்திருக்கிறார். இவரது ஆட்சி காலத்தில் அசோகரை எவராலும் வெல்ல முடியவில்லை என்று கூறலாம்.

 

இது மட்டுமல்லாமல் அசோகரின் போர்படையைப் பற்றி சொல்லும் போது வீரம் மிக்க படை என்று கூறலாம். அதோடு ஆக்ரோஷமாக போரிடக்கூடிய படை வீரர்கள் இவரது படையில் இருந்தது. இவருக்கு கூடுதல் பலத்தை அழித்தது என கூறலாம். மேலும் போரிடும் போது பலவிதமான யுக்திகளை கையாண்டு பல்வேறு போர்களில் வெற்றி வாகையை சூடியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து அசோகரது படை எந்த திக்கு சென்றாலும் வெற்றி பெற்றதோடு, மிகப்பெரிய ரத்த ஆற்றை உண்டு பண்ணியது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கடுமையான முறையில் நடந்து கொண்டாலும் அசோகரின் ஆட்சியில் மக்கள் அனைவரும் சுபிக்கமாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

 

இவர் ஆட்சி காலத்தில் மக்கள் பயனடையும் வகையில் பலவிதமான நல திட்டங்களை கொண்டு வந்திருக்கக்கூடிய இவர் மக்களால் விரும்பப்பட்ட அரசர்களில் ஒருவராக திகழ்ந்தார். இப்படி இந்தியாவில் பல பகுதிகளை சிறப்பான முறையில் ஆட்சி செய்த இவர் இந்தியாவின் தென்பகுதியை ஏன் ஆளவில்லை என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

 

இதற்குக் காரணம் இராஜேந்திரசோழன் என்ற சோழ மன்னன் தான். இந்த சோழ மன்னன் ராஜராஜ சோழனின் மகன் இவர் வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேசியா, கம்போடியா, மலேசியா என அனைத்து தென் கிழக்கு ஆசிய நாடுகளை தன் வீரத்தால் தன் காலடி கீழ் கொண்டு வந்தவர்.

அதுமட்டுமா.. இமயமலை வரை தனது படையை வழி நடத்தி வடக்கே ஆண்ட மன்னர்களை வென்று கங்கையிலிருந்து நீர் கொண்டு வந்து அந்த நீரை தனது கோட்டை அருகே  சோழேசுவர ஏரி என்ற பெயரில் ஒரு ஏரியையே உருவாக்கி கங்கைகொண்ட சோழன் என்ற பெயரைப் பெற்றான்.

 

இவர் படையில் 11 லட்சம் வீரர்கள் தரைப்படையிலும் 60,000 யானைகளை கொண்ட யானை படையும், வலிமையான கடற்படையும் இருந்ததாக கூறுகிறார்கள். இந்த இராஜேந்திர சோழன் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய பரப்பளவை ஆண்ட மன்னர் என்பது அனைவருமே அறிந்த விஷயம் தான்.

தனது மிகப் பெரிய கப்பற்படையை பயன்படுத்தி கடல் கடந்து சென்று போரில் வெற்றி பெற்ற முதல் தமிழ் மன்னனும் இவனே.

 

வீரம் பொருந்திய சோழ மன்னர்கள் தமிழகத்தை ஆண்டு வந்ததின் காரணத்தால் தான் அசோகரால் தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை. அசோகரையே அலறவிட்ட தனி பெரும்பான்மையோடு இராசராசன் திகழ்ந்தான் எனக் கூறலாம்.

Exit mobile version