• March 27, 2024

விடைதேடி உயிர்வாழும் ஜீவன்!

 விடைதேடி உயிர்வாழும் ஜீவன்!

கனவே நீ கைகூட நான் என்ன செய்வேனோ!
கண்ணீரும் கதைச் சொல்ல நீ என் கையில் சேர்வாயோ!!

உடல் மட்டும் உயிர் வாழ, உன்னைத் தேடி திரிந்தேனே!
கனவே நீ சூரியனா!
உன் ஒளிக்காக தவிக்கின்ற
கண்மணி நானும் தாமரையா!!

நம்பிக்கை ஒன்றைத் தவிர
என்னிடமும் ஒன்றும் இல்லை..
என் கையில் சேர்வாயோ
என்னைத் தாங்கிச் செல்வாய்யோ!!


– இரா. கார்த்திகா