காதல் என்பது இயற்கையின் அற்புதமான கொடை. மனித வாழ்வில் கற்றுக்கொள்ளாமலேயே நம் உள்ளத்தில் மலரும் அற்புதமான உணர்வு. இந்த கலியுகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை.

இன்றைய காலத்து காதல் – ஓர் பார்வை
தினம் தினம் நாம் பல பெண்களை நம் வாழ்வில் கடந்து செல்கிறோம். அவர்களில் அழகாக இருப்போர் அனைவரும் நம்மை திரும்பிப் பார்க்க வைப்பார்கள். திரும்பி இரண்டு நொடி பார்ப்பதோடு நமது பணி முடிந்துவிடும். முடிந்து விட வேண்டும். அந்த அழகான பெண்களில் சிலர் மட்டும் அன்றைய சில மணி நேரங்களுக்கு அவர்களைப் பற்றி நம்மை சிந்திக்க வைப்பர்.
அழகு மட்டுமே காதலா?
பெரும்பாலான இன்றைய காதல் அழகை நோக்கித் தான் செல்கிறது. நான் ஏன் அந்தப் பெண்ணை காதலிக்கிறேன் என விட்டத்தைப் பார்த்து கேள்விக் கேட்டால், ஆண்களின் மனசாட்சி சொல்லும் பதில், ‘அவள் அழகாக இருக்கிறாள்’ என்பதுதான். ஆனால், அதனை ஒப்புக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
காதலின் ஆழம் என்ன?
இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. நம்மை பெற்று, வளர்த்துவிடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும். அதற்குமேல் நமக்கு நம்பகத்தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை.
எப்போது காதல் வருவது நல்லது?
இது ஒரு முக்கியமான கேள்வி. சம்பாதித்தால் மட்டும் போதாது. குடும்பம் என்றால் என்ன? அதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது? திருமணம் செய்தால் மனைவியின் குடும்பம் மற்றும் தமது பெற்றோரை எப்படி அனுசரித்து செல்வது என்பது போன்ற பல உறவு சிக்கல்கள் குறித்து 25 வயது காலக்கட்டத்தில் தான் புரிய ஆரம்பிக்கும்.
இன்றைய இளைஞர்களுக்கு ஒரு செய்தி
காதலியை பின்னால் உட்காரவைத்து துப்பட்டாவை தலையில் சுற்றி மறைத்து அழைத்துச் செல்வது, ஓடாத படத்திற்கு கார்னர் சீட்டில் சென்று காதலியுடன் உட்காருவது போன்ற செயல்கள் காதல் அல்ல. உண்மையான காதல் என்பது இரு உள்ளங்களின் புரிதலும், மதிப்பும் ஆகும்.
காதல் – ஒரு வாழ்க்கைப் பயணம்
கடைசி வரை ஒரு உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை. இப்படி கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையோடு வாழவேண்டுமெனில், அந்தக் காதல் எவ்வளவு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என நினைத்துப் பாருங்கள்.
காதல் என்பது வாழ்க்கையின் அழகிய பரிமாணம். அது வெறும் உணர்ச்சிகளின் வெளிப்பாடு அல்ல, இரு உயிர்களின் புனிதமான பிணைப்பு. பொறுப்புணர்வுடன் காதலை அணுகும்போது, அது வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கும் அற்புதமான உறவாக மாறும்.