பொதுவாக நாம் தூங்கும்போது நம் தூக்கத்தை கெடுக்கும் படி யாராவது ஏதேனும் சத்தம் போட்டால் அதை சகித்துக் கொள்வது சற்று கடினமே. பெரும்பாலான தெருக்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் இரு குடும்பங்களுக்கு இடையே சண்டைகள் வருவதற்கு கூட வாய்ப்புகள் அதிகம்.
இதுபோன்ற ஒரு பிரச்சனையை சண்டை வரை எடுத்துச் செல்லாமல் Soup-ஐயும், மூன்று பேப்பர் மன்னிப்பு கடிதத்தையும் வைத்து சுலபமாக முடித்திருக்கிறார் ஒரு உத்தம வில்லன். கேஜி என்றவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேஜியின் வீட்டிற்கு மேலே குடியிருப்பவர்கள் இரவு 2 மணி வரை சத்தம்போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இது கேஜியின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. ஆனால் அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு மேல் வீட்டிலிருந்து ஒரு சூப் கேனும், மன்னிப்பு கடிதமும் வந்துள்ளது.
இதைப் பார்த்த கேஜி அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளார். அந்த கடிதத்தில், “கடந்த இரவு நாங்கள் மது அருந்தி விட்டு விளையாடி பயங்கரமான சலசலப்பை ஏற்படுத்தி உள்ளோம். அதற்கு எங்களது மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம். இவ்வளவு நடந்தும் அதை சகித்துக் கொண்டதற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் இந்தக் கடிதத்துடன் சேர்த்து இட்டாலியன் ஸ்டைல் meatball soup ஒன்றையும் உங்களுக்கு கொடுக்கிறோம். இதனை Apology சூப் என்று கருதிக் கொள்ளுங்கள்.”, என குறிப்பிட்டு இருந்தனர்.
கேஜி பதிவிட்ட இந்த ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவத்தை பார்க்கும்போது மேல் வீட்டில் குடி இருந்தவர்களிடம் நீங்கள் நல்லவரா? இல்ல கெட்டவரா ?என்றுதான் கேட்கத் தோனுகிறது.
- கண்ணதாசன் எனும் பெருங்கடல்: ஒரு மாபெரும் கலைஞனின் பிறந்தநாள் சிறப்புப் பார்வை
- மரணம் ஒரு தற்காலிக நிறுத்தமா? சாகா வரம் தரும் ‘கிரையோனிக்ஸ்’ தொழில்நுட்பத்தின் மர்மங்கள்!
- விண்வெளியில் இருந்து தெரியும் நட்சத்திர மீன்! 6 லட்சம் பேருக்கு வேலை தரும் உலகின் மிகப்பெரிய விமான நிலையம்!
- ‘கீச் கீச்’ சத்தம் நியாபகம் இருக்கா? ஒரு காலத்தின் வாட்ஸ்அப் ‘ஃபேக்ஸ்’ இயந்திரத்தின் கதை!
- வானத்தின் ராஜாக்கள்: உலகின் 5 அதிநவீன போர் விமானங்களின் திகைப்பூட்டும் தொழில்நுட்பம்!
கேஜி பதிவிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற பதிவுகளுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.