Skip to content
July 30, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சிறப்பு கட்டுரை
  • உலகத் தாய்மொழிகள் தினம்: செந்தமிழை போற்றுவோம், காப்போம்!
  • சிறப்பு கட்டுரை

உலகத் தாய்மொழிகள் தினம்: செந்தமிழை போற்றுவோம், காப்போம்!

Vishnu February 21, 2025 1 min read
tamil
690

நமது அடையாளமே நம் தாய்மொழி!

நம் உணர்வுகளை மனதில் உதித்ததும் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்த நமக்கு உதவும் கருவிதான் தாய்மொழி. இது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல, நம் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றையும் தாங்கி நிற்கும் அடையாளச் சின்னம். “மலையிடைப் பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி இரண்டு மட்டுமே! ஒன்று செங்கதிர், மற்றது செந்தமிழ்!” என்று தண்டியலங்காரம் தமிழின் பெருமையை எடுத்துரைக்கிறது.

ஆனால் இன்றோ, உலகளவில் சுமார் 40% மக்கள், தாங்கள் பேசும் அல்லது புரிந்துகொள்ளும் மொழியில் கல்வியைப் பெறவில்லை என ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ தெரிவிக்கிறது. யுனெஸ்கோவின் அறிக்கை, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் அது தெரிவிக்கிறது.

தாய்மொழி தின தோற்றம் – ஓர் உணர்ச்சிகரமான வரலாறு

உலக தாய்மொழிகள் தினம் வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; இது மொழிக்காக உயிர்நீத்தவர்களின் தியாகத்தின் நினைவுச் சின்னம். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது, பாகிஸ்தான், மேற்கு, கிழக்கு என்று இரண்டு பகுதிகளாக இருந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தான், தற்போதைய வங்கதேசம். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானில் உருது மொழி திணிக்கப்படுவதை மக்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி ‘வங்க மொழி இயக்கம்’ உருவானது. தொடர் போராட்டத்திற்கு பின்னர், காவல் துறையின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. கடந்த 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானின் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். யுனெஸ்கோ 1999ம் ஆண்டு இதை அங்கீகரித்ததையடுத்து, 2000ம் ஆண்டு முதல் உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.

Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

See also  'விருந்தும் மருந்தும் 3 நாள்' பழமொழி இப்போது செத்துவிட்டதா? நம் முன்னோர்களின் ரகசியக் கணக்கு இதுதான்!
Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போர் – உயிர்த்தியாகங்களின் கதை

வங்கதேசத்தைப் போலவே, தமிழ்நாட்டிலும் மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் வரலாறு உண்டு. 1938ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவிவகித்த ராஜாஜி, பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி என்னும் ஆணையை ஏப்ரல் 21 அன்று பிறப்பித்தார்.

இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 1939ம் ஆண்டு நடராசன், தாளமுத்து இருவரும் உயிரிழந்தனர். இத்தகைய போராட்டத்தின் பயனாக சென்னை மாகாண அரசு 1940 பிப்ரவரி 21 அன்று பள்ளிகளில் இந்தி பயிற்றுமொழி என்னும் ஆணையைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து 1965ம் ஆண்டு இரண்டாம் கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்மொழி வழிக் கல்வியின் முக்கியத்துவம்

ஒரு மனிதனின் அறிவின் வளர்ச்சி என்பது அவனுடைய தாய்மொழியால் தான் சாத்தியப்படும். தாய் மொழியே பயிற்று மொழி, தாய் மொழியே ஆட்சி மொழி, தாய்மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என வாழ்வில் அனைத்து நிலையிலும் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டிய கடமை உள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் வழிக்கல்வியை கட்டாயமாக்கக் கோரி, 1999ம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழண்ணல் தலைமையில் 102 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இது தாய்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

இலங்கையின் மொழி பிரச்சினை – ஈழப் போரின் ஆரம்பம்

கால் நூற்றாண்டுகாலமாக தெற்காசியாவையே பதற்றப்பட வைத்த ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதி மூலமாக இருந்ததும் மொழி பிரச்சினைதான். 1965ஆம் ஆண்டு சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவிக்க இலங்கை அரசு எடுத்த முயற்சிகளை எதிர்த்து தந்தை செல்வா தொடங்கிய போராட்டமே பின்னர் ஆயுத புரட்சியாக பரிணாமம் பெற்றது.

“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” எனக்கூறி போராடி தம் உயிரை மாய்த்துக்கொண்ட எண்ணற்ற தமிழர்களின் தியாகம் வீணாகக் கூடாது. மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்துக்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் அடையாளம், உரிமைக்கான குறியீடு என்பதை இந்த வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன.

செம்மொழி தமிழின் சிறப்புகள்

மூவாயிரம் ஆண்டுகள் தொடர்ச்சி

தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மரபுடைய, அறுபடாத ஒரு தொடர்ச்சியைக் கொண்டுள்ள ஒரு மொழி. இந்த அளவிற்கு தொடர்ச்சியான மரபுடைய மொழிகள் உலகத்தில் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. “தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது,” என்பார் ஈழத்து தமிழறிஞர் கா. சிவத்தம்பி.

See also  தமிழ் மொழி பெருமைகள்

முதல் இலக்கண நூல் உருவான மொழி

உலக மொழிகளில் எழுந்த முதல் மொழி இலக்கண நூலான தொல்காப்பியம் 3000 ஆண்டு பழமையுடையது. இவற்றின் இலக்கணக் கோட்பாடுகளைக் கண்டு இன்றைய மொழியுலகம் வியப்பால் திகைக்கிறது. தமிழில் உள்ள ஒலிகளின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 500 என்று மொழியியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலகில் வேறு எந்த மொழியிலும் இந்த அளவுக்கு ஒலி எண்ணிக்கைகள் இல்லை என்கின்றனர்.

சொல்வளம் மிக்க மொழி

தமிழில் ஒவ்வொரு பொருளுக்கும் எத்தனையோ சொற்கள் உள்ளன. அதுபோல், ஒவ்வொரு சொல்லும் எத்தனையோ பொருட்களைக் குறித்துக் காட்டுவதாகவும் உள்ளது. ‘அரி’ என்னும் சொல்லுக்கு மட்டும் 59 அர்த்தங்கள் இருக்கின்றன. மலர் என்ற சொல்லை எடுத்துக்கொண்டோமானால், தமிழில் மலரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் நிலையையும் காட்டுவதாக பல சொற்கள் இருக்கின்றன.

தூய்மை மிக்க மொழி

இராபர்ட் கால்டுவெல் தமிழின் சிறப்புப் பற்றிக் கூறும்போது, ‘ஒரு விழுக்காட்டுக்கு குறைவாகவே தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன’ என எடுத்துரைத்து, “ஒலி அமைப்பிலும், பிறமொழிச் சொற்களைத் தன்னில் கலக்க விடாத தூய்மை பேணலிலும் நிலையாக இருப்பதால் தமிழ் கன்னித் தமிழாகும்” என பெருமைப்பட உரைப்பார்.

இந்தியாவின் முதல் செம்மொழி

இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான். 2004ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இந்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. அடுத்த சில ஆண்டுகளில்தான் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் ஒவ்வொன்றாக இந்தியாவின் செம்மொழி பட்டியலில் சேர்க்கப்பட்டன.

வேர்ச்சொற்கள் நிறைந்த மொழி

“தமிழ் தொன்மையின் மிகச் சிறப்பான விடயமாக நான் பார்ப்பது அது கொண்டிருக்கும் வேர்ச்சொல்கள். இன்று தெலுங்கு, கன்னடம் போன்ற எந்தவொரு இந்திய மொழியும் புதிதாக ஒரு சொல்லை உருவாக்க வேண்டுமென்றால் அது சமஸ்கிருதத்தை நோக்கித்தான் செல்லவேண்டும். ஆனால் தமிழில் மட்டும் அந்த நிலை இல்லை. தமிழுக்கு தேவையான வேர்ச் சொற்கள் அதனிடமே கொட்டிக்கிடக்கின்றன,” என்று குறிப்பிடுகிறார் உலக புகழ்பெற்ற மொழியியல் அறிஞரான ஜார்ஜ்.எல்.ஹார்ட்.

உலகெங்கும் தமிழின் தடம் – தொல்லியல் சான்றுகள்

பண்டைய நாகரிகங்களில் தமிழ்

ஹராப்பா, மொகஞ்சாதரோ ஆகிய நாகரிகத்தின் தொன்மையை அறியும் அகழ்வாய்வில் கிடைத்த புதைபொருட்களில் இடம்பெற்றுள்ள சில உருவ எழுத்துக்களில் தமிழும் உள்ளது. இது தமிழின் தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது.

எகிப்திலும், தாய்லாந்திலும் தமிழ்

எகிப்தில் லெக்குஸ் லிமன் என்ற இடத்தில் கி.மு. 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் “பானை ஒறி” என்று எழுதப்பட்டிருந்தது. கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்டத்தில் தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டன.

See also  தங்கத்தை ஏன் காலில் அணியக்கூடாது? மகாலட்சுமி என்பதாலா? - இல்லையெனில் உண்மை என்ன?

இலங்கை, ஓமன் உள்ளிட்ட நாடுகளில் தமிழ்

ஓமன் நாட்டில் தமிழ்-பிராமி பானை சிதில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கி.மு. 2ம் நூற்றாண்டு கால மட்பாண்ட துண்டுகள் பூநகரியில் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. 3ம் நூற்றாண்டின் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்பட்டன.

oppo_16

உலக மொழிகள் நிலைமை – அழியும் பாரம்பரியம்

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், உலகில் 2 வாரங்களுக்கு ஒரு மொழி வழக்கிழந்து போவதாக கூறப்படுகிறது. இன்றைக்கு உலகம் முழவதும் 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. ஒரு மொழி அழிந்து விட்டால், ஒரு கலாச்சாரமும், அறிவுசார் பாரம்பரியமும் அத்தோடு போய்விடுகின்றன.

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 19,500 வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவில் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் பேசுவது 121 மொழிகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 780 மொழிகள் பேசப்படுவதாக இந்தியாவின் மொழிகள் குறித்த 2012ன் அறிக்கை கூறுகிறது.

1961ஆம் ஆண்டு கணக்கெடுப்பை ஒப்பிடும் போது 220 மொழிகள் 50 ஆண்டுகளில் அழிவைச் சந்தித்திருக்கின்றன. அதே நேரத்தில் இந்தி பேசுகிற மக்கள் தொகை 14 கோடியிலிருந்து 40 கோடியாக உயர்ந்திருக்கிறது.

நமது கடமை என்ன?

“இந்தியாவின் அடையாளத்தை பன்முகத்தன்மையால்தான் வளர்த்தெடுக்க முடியுமே தவிர, ஒற்றை அடையாளத்தால் வளர்த்தெடுக்க முடியாது” என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் நாள் வரவேண்டும்.

தாய் மொழியே பயிற்று மொழி, தாய் மொழியே ஆட்சி மொழி, தாய்மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என வாழ்வில் அனைத்து நிலையிலும் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்க ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டிய கடமை உள்ளது.

ஒரு மனிதனின் அறிவின் வளர்ச்சி என்பது அவனுடைய தாய்மொழியால் தான் சாத்தியப்படும் என்பதை உணர்வோம். தாய்க்கு இணையான தாய்மொழியைக் காக்கும் கடமையை அறிவோம். மொழியை காப்பாற்றுவது என்பது நமது கலாச்சாரம், அடையாளம் மற்றும் வரலாற்றைக் காப்பாற்றுவதற்கு சமமாகும்.

உலகின் அனைத்து மொழிகளும் அவற்றின் தனித்துவத்துடன் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக தமிழ் போன்ற தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்ட மொழிகள் இன்னும் சிறப்பாகப் பேணப்பட வேண்டும்.

“மலையிடைப் பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தி இரண்டு மட்டுமே! ஒன்று செங்கதிர், மற்றது செந்தமிழ்!” என்ற வரிகள் தமிழின் பெருமையை உணர்த்துகின்றன. நாம் நம் தாய்மொழியை நேசிப்போம், பேணுவோம், பாதுகாப்போம்.

About the Author

Vishnu

Editor

Author's posts
Tags: Classical language Classical Tamil Language martyrs Language rights Mother tongue education tamil history Tamil Language World Mother Language Day உலக தாய்மொழி தினம் செந்தமிழ் செம்மொழி தமிழ் மொழி தமிழ் வரலாறு தமிழ் வழிக்கல்வி தொல்காப்பியம் மொழி உரிமை மொழிப்போர் மொழிப்போர் தியாகிகள்

Continue Reading

Previous: பள்ளிப்படிப்பே இல்லாமல் பல்கலைக்கழக பேராசிரியரான பண்டிதமணி கதிரேசனார் – அவரது வாழ்க்கை வரலாறு நமக்கு சொல்லும் பாடம் என்ன?
Next: காதல் வெறும் உணர்வல்ல – சங்ககால தமிழர்கள் கொண்டாடிய நாகரிகம் இது தான்!

Related Stories

mu
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்!

Vishnu July 29, 2025
gf
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா?

Vishnu July 29, 2025
man
1 min read
  • சிறப்பு கட்டுரை

கல்யாண பொண்ணு, மாப்பிள்ளைக்கு மஞ்சள் ஏன் பூசறாங்க? இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?

Vishnu July 29, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
1 min read
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
1 min read
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
1 min read
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

rg
1 min read
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
1 min read
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
1 min read
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
பயங்கர ரஷ்ய நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கு சுனாமி அபாயம் – என்ன நடந்தது, அடுத்து என்ன? t 1
  • Viral News

பயங்கர ரஷ்ய நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கு சுனாமி அபாயம் – என்ன நடந்தது, அடுத்து என்ன?

July 30, 2025
முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்! mu 2
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்!

July 29, 2025
தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா? gf 3
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா?

July 29, 2025
கல்யாண பொண்ணு, மாப்பிள்ளைக்கு மஞ்சள் ஏன் பூசறாங்க? இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா? man 4
  • சிறப்பு கட்டுரை

கல்யாண பொண்ணு, மாப்பிள்ளைக்கு மஞ்சள் ஏன் பூசறாங்க? இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?

July 29, 2025
ஜூலை 28 உலகக் கல்லீரல் அழற்சி நாள்: கல்லீரல் அழற்சி உயிருக்கே ஆபத்து! WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! fg 5
  • சிறப்பு கட்டுரை

ஜூலை 28 உலகக் கல்லீரல் அழற்சி நாள்: கல்லீரல் அழற்சி உயிருக்கே ஆபத்து! WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

July 28, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

t
1 min read
  • Viral News

பயங்கர ரஷ்ய நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கு சுனாமி அபாயம் – என்ன நடந்தது, அடுத்து என்ன?

Vishnu July 30, 2025
mu
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்!

Vishnu July 29, 2025
gf
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா?

Vishnu July 29, 2025
man
1 min read
  • சிறப்பு கட்டுரை

கல்யாண பொண்ணு, மாப்பிள்ளைக்கு மஞ்சள் ஏன் பூசறாங்க? இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?

Vishnu July 29, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version