• October 22, 2024

இந்திரா விழா பற்றி இதுவரை உங்களுக்கு தெரியாத ஆச்சரியமான தகவல்கள் இதோ!

அது ஒரு சித்திரை மாதத்தின் பௌர்ணமி நாள். அன்றைய காலை பொழுதில் தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே பரபரப்பாக இருக்க, பல்வேறு வீடுகள் அலங்கரிக்கப்பட்டு இருக்க, ஒருபக்கம் தெருக்களும்  தூய்மைப்படுத்தபட்டு, மிக பெரிய கோலங்கள் போடப்படுகிறது. தூரத்தில் கோவில் மணி ஒன்று ஒலிக்க, அர்ச்சகர்கள் பூசாரிகள் தங்கள் கடமைகளை செய்ய தொடங்குகிறார்கள். அதேசமயம் உழவர்கள் தங்கள் வயல்களை நோக்கி வேகமாக செல்கிறார்கள். ஒவ்வொரு விவசாயின் கண்களிலும் ஆழ்ந்த நம்பிக்கையின் ஒளி தெரிகிறது. மற்றொரு பக்கம் பெண்கள் ஆற்றங்கரையில் கூடி, […]Read More

வாகை மலரா? அல்லது போஹுடுகாவா மலரா? விஜய் கட்சிக்கொடியில் இருக்கும் இந்த மலர்

நியூசிலாந்தின் கடற்கரைகளை அலங்கரிக்கும் போஹுடுகாவா மரம், அதன் அற்புதமான சிவப்பு மலர்களால் உலகம் முழுவதும் பிரபலமானது. “கிறிஸ்துமஸ் மரம்” என்று அழைக்கப்படும் இந்த மரம், டிசம்பர் மாதத்தில் பூக்கும் தனது அழகிய மலர்களால் கிறிஸ்துமஸ் காலத்தை அறிவிக்கிறது. ஆனால், இந்த அழகிய மரத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இந்த கட்டுரையில், போஹுடுகாவா மரத்தின் சுவாரஸ்யமான தகவல்களையும், எதிர்பாராத விதமாக தமிழ்நாட்டுடன் அதற்குள்ள தொடர்பையும் விரிவாக ஆராய்வோம். போஹுடுகாவா: ஒரு அறிமுகம் பெயரின் பொருள் மற்றும் […]Read More

வேள்பாரி கதை – Velpari Tamil Audiobook

நீங்கள் பல மாதங்களாக கேட்டுக்கொண்டே இருந்த வேள்பாரி கதை, மிகுந்த சிரமத்தோடு தயார் செய்து இருக்கிறேன், கேட்டு மகிழுங்கள். ஆனால் இந்த வீடியோ எந்நேரத்திலும் நீக்கப்படலாம். ஆகவே அதற்கு முன் இதை கேட்டு விடுங்கள். கட்டாயம் இந்த புத்தகத்தை வாங்கி ஒரு முறையாவது படித்துவிடுங்கள். ஆடியோ வடிவில் கேட்பதை விட, புத்தகமாக படிக்கும் போது, இன்னும் பல விஷயங்களை உங்களால் புரிந்துக்கொள்ள முடியும்.Read More

கருங்கோழி: இந்தியாவின் அதிசய நாட்டுக்கோழி – அதன் சிறப்புகள், நன்மைகள் மற்றும் வளர்ப்பு

Table of Contents இந்தியாவின் கருப்பு அழகி கருங்கோழியின் பிறப்பிடமும் பரவலும் கருங்கோழியின் தனித்துவமான அம்சங்கள் கருமை நிறத்தின் ரகசியம் அடைகாக்கும் பழக்கத்தின் வித்தியாசம் கருங்கோழி வளர்ப்பு: சவால்களும் வாய்ப்புகளும் வளர்ப்பு முறைகள் இடவசதி மற்றும் வளர்ச்சிக் காலம் கருங்கோழியின் ஊட்டச்சத்து மதிப்புகள் குறைந்த கொழுப்பு, அதிக புரதம் மெலனின் மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் கருங்கோழியின் தனித்துவமான பண்புகள் தீவிர காலநிலைகளில் உயிர்வாழும் திறன் குறைந்த பராமரிப்பு தேவை வளர்ச்சி வேகம் மற்றும் உடல் அளவு […]Read More

பழந்தமிழரின் அறிவியல் சிந்தனை: இயற்கையோடு இணைந்த வாழ்வு

மனித குல வரலாற்றில் நீண்ட தேடலும் நவீன அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்பும் இவ்வுலகை இன்று அறிவியல் யுகமாய் மாற்றியிருக்கிறது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்வதற்குக் கூட பெரும் சவாலான சூழலே இருந்தது. அந்த காலகட்டத்தில், தமிழ் மக்கள் இயற்கையை எவ்வாறு புரிந்து கொண்டனர்? அவர்களின் அறிவியல் சிந்தனைகள் என்னவாக இருந்தன? இக்கட்டுரை இந்த கேள்விகளுக்கு விடையளிக்க முயல்கிறது. இயற்கை புரிதலும் வாழ்வியலும் பழங்கால தமிழர்கள் இயற்கையை ஆராய்ந்து, அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். […]Read More

எந்தச் சூழ்நிலையிலும், மனிதர்கள் தங்கள் விதியை மாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாக இருந்த

உலக வரலாற்றின் மிகப்பெரும் சாம்ராஜ்யங்களில் ஒன்று ஓட்டோமான் பேரரசு. அதன் ஆட்சி 600 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது. ஆனால் இந்த பேரரசின் உள்ளே, அரண்மனையின் சுவர்களுக்குள், ஒரு வித்தியாசமான உலகம் இருந்தது. அது அந்தப்புரம் – பெண்களின் உலகம். நமது கதை தொடங்குகிறது ஒரு சிறு பெண்ணுடன். அவள் பெயர் ரோக்செலானா. யுக்ரேனில் பிறந்த அவள், ஒரு நாள் திடீரென கடத்தப்பட்டு, இஸ்தான்புலின் அடிமைச் சந்தையில் விற்கப்பட்டாள். அவளது வாழ்க்கை முடிந்துவிட்டதாக நினைத்திருக்கலாம். ஆனால், அது தொடங்கியதுதான். […]Read More

இந்தியா மறந்த ஒரு பெண் வீராங்கனை: இந்திய விடுதலைப் போரின் மறைக்கப்பட்ட உதா

நமது பாரத தேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில், பல கதைகள் பேசப்படுகின்றன. ஆனால் சில கதைகள் மௌனமாக்கப்பட்டுள்ளன. இன்று நாம் அத்தகைய ஒரு மௌனமாக்கப்பட்ட கதையை பார்க்கப் போகிறோம் – உதா தேவியின் கதை. உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரம். 1857 ஆம் ஆண்டு. இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் தொடங்கியிருந்தது. இந்த சூழலில் தான் உதா தேவி என்ற ஒரு சாதாரண தலித் பெண்ணின் வீரக்கதை தொடங்குகிறது. உதா தேவி யார்? இவர் லக்னோவின் நவாப் […]Read More

நீங்கள் ஒரு பீர் ரசிகரா? அப்படியானால், உங்களுக்கான புதிய உலகம் ஒன்று காத்திருக்கிறது!

பீர் அருந்துவது ஒரு பழக்கம்; ஆனால் பீரில் குளிப்பது? அது ஒரு புதிய அனுபவம்! ‘பீர் ஸ்பா’ என்ற இந்த புதுமையான யோசனை உலகெங்கும் பரவி வருகிறது. ஐஸ்லாந்து முதல் ஸ்பெயின் வரை, அமெரிக்காவின் பால்டிமோர் முதல் பிரிட்டனின் நோர்போக் வரை, இந்த அசாதாரண ஸ்பாக்கள் மலர்ந்து வருகின்றன. பீர் ஸ்பாவின் பிறப்பிடம் இந்த யோசனையின் வேர்கள் ‘பீர் தேசம்’ என அழைக்கப்படும் செக் குடியரசில் உள்ளது. 1980-களில் அங்கு தொடங்கிய இந்த வழக்கம், இப்போது உலகளாவிய […]Read More

மலையமான் திருமுடிக்காரியின் மறைக்கப்பட்ட ரகசியங்கள்!

தமிழக வீர வரலாற்றில், தவிர்க்க முடியாதவர்கள் மூவேந்தர்கள். சேர சோழ பாண்டியர்களை பற்றிய பல்வேறு வரலாற்று குறிப்புகள் நம்மிடையே இன்று ஆழமாக இருக்கிறது.  ஆனால் ‘இந்த மூவர் மட்டும்தான் அந்த காலகட்டத்தில் வீரத்தோடும் விவேகத்தோடும் இருந்தார்களா?’ என்றால் அதுதான் இல்லை.  இவர்களையும் தாண்டி பல்வேறு குறு மன்னர்களும் முக்கியமாக வேளிர் குலத்தை சேர்ந்த பல மன்னர்கள், வீரத்தில் சிறந்திருந்தார்கள். அவர்களைப் பற்றிய குறிப்புகள், பல்வேறு புலவர்கள் வழியாக நமக்கு கிடைத்திருக்கிறது. ஆனால் சேர சோழ பாண்டியர்களுக்கு கொடுக்கும் […]Read More

உங்களை மிரளவைக்கும் உலகின் முதல் சிவன் கோயில் ரகசியங்கள்!

நம் தமிழ்நாட்டின் மீது முகலாய மன்னர்கள், மற்றும் ஆங்கிலேயர்கள் என அந்நிய நாட்டவர் வேறு வேறு காலகட்டங்களில் படையெடுத்து வந்துள்ளனர். அந்த படையெடுப்பின்போது அவர்கள் நமது பழம்பெரும் கோயில்களையும், அரண்மனைகளையும் சேதப்படுத்தியும், தமிழ்நாட்டின் உள்ள நிறைய செல்வங்களையும் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இப்படி நம் வளங்களை எல்லாம் சூறையாடியவர்களால், அதே தமிழகத்தில் உள்ள விலைமதிக்க முடியாத “ஒரு சிலையை” மட்டும் அவர்களால் கொள்ளையடிக்கவே முடியவில்லை. குறிப்பாக முகலாய பேரரசரான அலவுதின் கில்ஜிகூட அந்த சிலையை […]Read More