
victory
ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையில் பல விதமான வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கும். அப்படிப்பட்ட வெற்றியை நாம் அடைவதற்கு பல வழிகளை கையாளுவோம். எனினும் சிலர் வாழ்க்கையில் வெற்றி கிட்டும் என்று நினைக்கும் சமயத்தில் வெற்றி கை நழுவி சென்று விடும்.
இந்த வெற்றியை தவற விட்ட நண்பர்கள் வாழ்க்கையில் துவண்டு போவது இயல்பான விஷயமே. எனினும் மீண்டும் வெற்றியடைய என்ன வழி என்பதை ஆராய வேண்டுமே, ஒழிய அதை விடுத்து எல்லாம் முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் ஓய்ந்து போகக்கூடாது.

நீங்கள் வெற்றியடைய ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்த வேண்டும். அந்த ஒவ்வொரு நிமிடத்திலும், நீங்கள் விழித்திருந்து, விழிப்போடு செயல்பட்டால் கட்டாயம் வெற்றி இலக்குகளை எளிதாக அடைந்து விடலாம்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowநீங்கள் செய்யும் கற்பனைகளுக்கும், கனவுகளுக்கும் எல்லைகளை வகுக்காதீர்கள். எவ்வளவு தான் உங்களால் முடியுமோ, அவ்வளவும் நீங்கள் செய்து பார்க்க முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால் கட்டாயம் வெற்றி உங்களுக்கு.
நீங்கள் எந்த செயலை செய்தாலும், அந்த செயலை தனி முத்திரையோடு செய்யுங்கள். உங்களிடம் எதிர்பார்த்ததை விட அதிகமாக உங்களுடைய திறமையை காட்டுங்கள்.

எத்தகைய சூழ்நிலைகளிலும், நீங்கள் உங்கள் நன்றி உணர்வை மறக்காமல் வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நன்றியை வெளிப்படுத்த தயங்க கூடாது.
எந்த ஒரு விஷயத்தையும் உங்கள் கோணத்தில் இருந்து யோசிப்பதை போலவே, மற்றவர்களின் கோணத்தில் இருந்தும் யோசித்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு உண்மை விரைவாக விளங்கும்.
நீங்கள் எதிலும் ஆழ்ந்த கவனமும், தீவிரமான மன உறுதியும் கொண்டு இருந்தால் வெற்றி உங்களுக்கு சாத்தியமாகும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து கேள்விகளை கேட்பதற்கு முன்னால் நீங்கள் உங்களுக்குள் கேள்விகளை கேட்டு உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் எந்த விஷயத்தையும் இலவசமாக பெற்றுக் கொள்ளாதீர்கள். விலை கொடுத்து வாங்கும் போது தான் தேவை, தரம் இவை இரண்டும் உங்களுக்கு புரியும்.

உங்கள் லட்சியங்களை எந்த காரணங்களுக்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள். அவற்றை உங்கள் உயிராய் மதியுங்கள். வெற்றியை எட்டிப் பிடிப்பதற்கு எத்தகைய போராட்டங்கள் ஏற்பட்டாலும், அதை உற்சாகத்தோடு எதிர்கொள்ளுங்கள். சோம்பல், சலிப்பு மற்றும் அவநம்பிக்கையால் நீங்கள் பின் வாங்க கூடாது.
உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்றால் சற்றும் சமரசம் செய்து கொள்ள வேண்டாம். அச்சமில்லாமல் வாதாடி உங்கள் உரிமையை நிலை நாட்ட போராடுங்கள். இந்த போர்க்குணம் உங்களுக்கு will power யை அதிகரிக்கச் செய்யும்.
அது மட்டுமா? நீங்கள் தரமான மனிதர்களோடு பரஸ்பர நம்பிக்கையோடு இணைந்து செயல்படும்போது நிச்சியம் வெற்றி சாத்தியம் என்பதை புரிந்து கொள்வீர்கள்.