
Happy life
உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் இலட்சியங்கள் இருக்கும். இவற்றை கூறிக் கோள்கள் என்று கூறுவது வழக்கம். இந்த குறிக்கோள்களை சிறப்பான முறையில் அடைந்து வாழ்க்கையில் வெற்றி அடைவார்கள்.
இந்த வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமாக இருப்பது அவர்கள் வாழ்க்கையில் கொண்டிருக்கின்ற தன்னம்பிக்கை. அந்த தன்னம்பிக்கை நிறைந்த எண்ணங்களை பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நெப்போலியன் கில் சில கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த கருத்துக்களை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஃபாலோ செய்வதின் மூலம் வளமான மகிழ்ச்சிகரமான தன்னம்பிக்கை நிறைந்த வாழ்க்கையை மிகச் சிறப்பான முறையில் வாழ முடியும்.
அந்த வகையில் உங்களுக்கு எப்படிப்பட்ட பணிகளை கொடுத்திருந்தாலும், அதை உங்களால் திறமையாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பது மிகவும் அவசியமாகும்.
உங்களுடைய எண்ணங்கள் வலிமை பெற்று அவை விருச்சமாக எழும் பொழுது இந்த உலகில் செயல்களை மாற்றி அமைக்க உதவும் என்பதை நம்புங்கள்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
எல்லா மக்களிடமும் நீங்கள் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் உங்கள் இதயத்தில் இருந்து புன்னகை செய்ய கற்றுக் கொள்ளுங்கள். இது ஒரு மிகப்பெரிய சக்தியாக உங்களுக்கு இருக்கும்.
உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்யலாம் என்பது பற்றிய தெளிவான திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும். அத்தோடு அதை சிறப்பாக செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை நீங்கள் நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.
உங்களிடம் மண்டி கிடக்கும் எதிர்மறை எண்ணங்களை அகற்றி விட்டாலே வெற்றி இலக்கை எளிதில் அடைந்துவிடலாம். உங்கள் மனதில் இருக்கும் அச்சத்தை விளக்கி விட்டு துணிச்சலையும், நம்பிக்கையும் வைத்தால் கட்டாயம் உங்களால் எதையும் சாதிக்க முடியும்.

நீங்கள் உங்கள் எண்ணங்களை தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள். சொந்த காலில் சுயமாக நிற்க பழகுங்கள். இந்த ஏழு வகையான எண்ணங்களை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி இலக்கை நோக்கி எளிதாக பயணம் செய்வதோடு, உங்கள் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றி அமைத்து விடலாம்.
உங்கள் லட்சியத்தை அடைவதற்கு உங்கள் மனதுக்குள் உறுதிமொழிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் இலக்குகளை தெளிவாக காகிதத்தில் எழுதி வைத்து எண்ணங்களுக்கு உயிர் கொடுங்கள்.
இதற்காக உங்களது இலக்கை முதலில் வடிவமைத்து மனக்கண்ணால் அவற்றை வரிசைப்படுத்துங்கள்.மேற்கூறிய முறைகளையும் விதிகளையும் நீங்கள் உங்கள் வாழ்வில் செயல்படுத்துவதின் மூலம் கட்டாய வெற்றி கிடைக்கும் என்று பல விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.