Skip to content
September 14, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சிறப்பு கட்டுரை
  • “சங்க இலக்கியங்களில் கடவுள்..!” – ஓர் அலசல்..!
  • சிறப்பு கட்டுரை

“சங்க இலக்கியங்களில் கடவுள்..!” – ஓர் அலசல்..!

Brindha July 12, 2023 1 min read
sangam literature God 1
638

தமிழ் மொழியின் தோற்றமானது ஆய்வாளர்களின் கணிப்புப்படி கிட்டத்தட்ட கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. மேலும் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதன் பிறகு தான் சங்க இலக்கியங்கள் அனைத்தும் தோன்றி உள்ளது. இந்த சங்க இலக்கியங்களில் 473 புலவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இதில் 2381 பாடல்கள் அடங்கியுள்ளது.

 

இச்சங்க இலக்கிய நூல்களானது தமிழர்களின் வாழ்க்கை, காதல், போர், வீரம், ஆட்சி அமைப்பு, வணிகம் போன்றவற்றை மிக அழகான முறையில் எடுத்து இயம்புகிறது.

 

தமிழ் இலக்கியங்களில் இறை பாடல்கள்

 

பழமையான தமிழ் நூல்களை எடுத்துக் கொண்டால், அதில் இறைவனுக்காக பாடப்பட்ட பாடல்கள் பல உள்ளது. இதனை கொண்டு எந்தெந்த கடவுள்களை தமிழர்கள் வணங்கி வந்தார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

 

அந்த வகையில் முதலில் தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தை எடுத்துக் கொள்ளுவோம்.

sangam literature God
sangam literature God

இந்த தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் காப்பு செய்யுளாக ஒரு பாடலை எழுதி இருக்கிறார். அந்தப் பாடல்

 

“மாயோன் மேய காடுறை உலகமும் 

சேயோன் மேய மைவரை உலகமும் 

வேந்தன் மேய தீம் புனல் உலகமும் 

வருணன் மேய பெருமணல் உலகமும்”

 

இந்த பாடல் வரிகளில் “மாயோன்” என்பது திருமாலையும் “சேயோன்” என்பது முருகப்பெருமானையும் “வேந்தன்” என்பது இந்திரணையும் “வருணன்” என்பது வருண பகவானையும் குறிக்கிறது.

 

இது மட்டுமல்லாமல் தொல்காப்பியத்தில் பலராமனை பற்றிய குறிப்புக்களையும், சில பாடல்களில் காண முடியும்.

 

இரண்டாவதாக நற்றிணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த நற்றிணையானது எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 41 பாடல்களைக் கொண்ட இது, 2000 வருடங்களுக்கு முன்பே இயற்றப்பட்டது.

sangam literature God
sangam literature God

பெருந்தேவனாரால் எழுதிய வாழ்த்து பாடலில் சங்க காலங்களில் அவர்கள் வழிபட்ட கடவுள் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பாடல் வரிகள்

 

“மாநிலஞ் சேவடி யாக தூநீர்

வளைநரல் பௌவம் உடுக்கை யாக

விசும்புமெய் யாக திசை கையாக…”

 

இந்தப் பாடல் வரிகளில் திருமாலின் உருவம்,  சூரிய, சந்திரன், பஞ்ச பூதங்கள் ஆகியவற்றை வணங்கி இருக்கிறார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது.

 

மேலும் தமிழ் கடவுளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் முருகப்பெருமானை பரி பாடல் ஒன்றில் குறிப்பிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பரிபாடலும் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றுதான்.

sangam literature God
sangam literature God

பொதுவாக பரிபாடலில் பெருமாளுக்கு 8 பாடல், முருகனுக்கு 31 பாடல், பெண் தெய்வமான கொற்றவைக்கு ஒரு பாடல், வையைக்கு 26 பாடல், மதுரைக்கு நான்கு பாடல் என மொத்தம் 70 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.

See also  பிரபஞ்சத்தைப் படைத்தது யார்? கடவுளா, இயற்கையா, அறிவியலா? - ஒரு முழுமையான அலசல்

 

“புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து, 

சுருதியும் பூவும் சுடரும் கூடி,

எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும், 

செரு வேற் தானைச் செல்வ!

 

இது போலவே புறநானூறில் இருக்கும் 400 பாடல்களும் புறத்திணையைச் சார்ந்த எட்டுத்தொகை நூலாகும். இந்த நூலில் சங்க காலத்தை ஆண்ட அரசர்கள் பற்றியும், மக்களின் வாழ்க்கை முறை பற்றியும் தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும் புறநானூற்றுப் பாடல்களில் சிவபெருமான் பற்றிய குறிப்புகள் உள்ளது. குறிப்பாக புறநானூற்று ஆசிரியர் பெருந்தேவனார் சிவனை “அருந்தவத்தோன்” என குறிப்பிடுகிறார்.

sangam literature God
sangam literature God

சமண கோட்பாடுகளை உள்ளடக்கிய நூலாகிய சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோ அடிகள். இவர் எழுதிய நூலில் “கொற்றவை” பற்றிய தகவல்கள் உள்ளது. முதலில் கண்ணகியும், கோவலனும் கொற்றவையின் கோவில் தான் மதுரைக்கு வந்த பின் தங்கி இருக்கிறார்கள்.

 

இந்தக் கொற்றவையை ஐயை, கார்த்திகை என்ற பெயர்களிலும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் சிலப்பதிகாரம் 133 – 138 பாடல் வரிகளான

 

“மற்றவை நினையாது மலைமிசை 

நின்றோம் பொற்றாமரைத்தாள் உள்ளம்…

sangam literature God
sangam literature God

என்ற பாடலில் மதுரைக்கு கோவலன் செல்ல முயலும் போது அங்கிருந்த “திருமாலிருஞ்சோலை மலை” அதாவது அழகர் கோயில் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட, அவன் இடப்பக்கம் திரும்பி ஒரு சிறு மலையைக் கடந்து, பின்னர் ஆறு தோட்டங்களை கடந்தால் அழகர் மலையை அடையலாம் என்பதை அழகாக விளக்கி இருப்பார்.

 

திருமால் நின்ற கோலத்தில் இருப்பதால் திருமாலை வழிபட்டு பின்னர் கருடனை வழிபட வேண்டும். அதன் பிறகு தாமரைப் போன்ற அவரது பாதங்களை சரணடைந்தால் எல்லா பாவமும் நீங்கும் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

 

இப்படி சங்க நூல்களை ஆராய்ந்து பார்த்தால் சங்ககாலத்தில் தமிழர்கள் சாதன தர்மத்தையும் கடைபிடித்து இருந்ததால் தான் அதில் இருக்கக் கூடிய கடவுள்களான திருமால், சிவன் போன்ற தெய்வங்களின் குறிப்புக்கள் உள்ளது.

 

அது மட்டுமல்லாமல் அந்த காலகட்டங்களில் தெய்வங்களுக்கு இடையே எந்த வேற்றுமையையும் அவர்கள் காட்டவில்லை என்பதால் தான் அனைத்தையும் சமமாக பாவித்து இருக்கிறார்கள் என்று கூறலாம்.

 

அதுமட்டுமல்லாமல்  சங்க கால இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் தெய்வங்களை இன்று வரை நாம் தொடர்ந்து வணங்கி வருகிறோம். அத்தோடு பஞ்சபூத வழிபாடு என்பது தொன்று தொட்டு தமிழர்களின் பாரம்பரியத்தில் இருக்கக்கூடிய ஒரு நிகழ்வாகவே உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

எனவே தான் அன்று முதல் இன்று வரை இந்து சமயத்தை எவராலும் அழிக்க முடியவில்லை. அது எப்படிப்பட்ட காலகட்டமாக இருந்தாலும் தன் கிளை பரப்பி வளர்ந்து கொண்டே வருகிறது.

See also  காதல் மொழி என்றால் என்ன? உங்கள் துணையின் காதல் மொழியை புரிந்துகொள்ள இதோ 5 முக்கிய குறிப்புகள்!

About the Author

Brindha

Author

View All Posts
Tags: God கடவுள்

Post navigation

Previous: சித்தர்கள் செய்த சித்திக்கள் வேதியியல் சார்ந்ததா? – ஓர் விளக்கம்..!
Next: 3 முறை ஆங்கிலேய படையை ஓட ஓட விரட்டிய மாவீரன் | தீரன் சின்னமலை வரலாறு

Related Stories

ens
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025
fg
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025
thirumoolar-history
1 min read
  • சிறப்பு கட்டுரை

‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?

Deepan August 5, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
1 min read
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
1 min read
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
1 min read
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

rg
1 min read
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
1 min read
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
1 min read
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 1
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 2
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 3
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 4
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025
‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன? thirumoolar-history 5
  • சிறப்பு கட்டுரை

‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?

August 5, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

ens
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025
vi
1 min read
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025
vijay
1 min read
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025
fg
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.