• March 28, 2024

Tags :காதல்

துள்ளிக்குதித்த மனமே!

இரவில் பூத்த மல்லிகையை போல,தேனில் மூழ்கிய வண்டைப் போல,மழைத் தீண்டிய மயிலைப் போல,சூரியனால் மலர்ந்த தாமரையைப் போல,திருமாலைத் தரிசித்த ஆண்டாலைப் போல, உன்னை கண்டபின் மானைப் போலஎன் மனம் துள்ளிக் குதித்து ஓடியது! – இரா. கார்த்திகாRead More

அழியாத காதல்

மொழி பேசாத காலத்திலேமொழி பேசிய காதலடி! நிறம் அறிந்த காலத்திலேஇனம் அறியாத காதலடி! போர் கொண்ட காலத்திலேபகை நாட்டவர் போற்றிய காதலடி! விழியற்று போனாலும்மனம் பார்க்கும் காதலடி! செவியற்ற நிலையிலும்இசை கேட்கும் காதலடி! நீ சொல்ல மறுத்தாலும்உன் விழி சொல்லும் காதலடி! Sarath Kumar WriterRead More

காதல் பித்துப்பிடித்தவளாய் நான்!

கை அருகில் நீஇருந்தும் இல்லாமல் நான்…!!ஏதுவும் பிடிப்பதில்லைஅழைத்தாலும் செவிமடுக்கவில்லை;சொல்வதற்கு ஏதுமில்லை…,சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! உன் சுவாசக் காற்றில்ஊசலாடும் இதயம்…! ‘நீதான்’ வேண்டும்அடம்பிடிக்கும் மனது…!கொடுக்கவியலா தூரத்தில் நீ…!ஸ்பரிசம் உணரா தவிப்பில் நான்…!!பெரிதாக ஒன்றுமில்லை..சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! கொடியாய் படர்கிறாய்மலராய் மணக்கிறாய்ஆலகால விஷமானவனே…!என் காதலில் குரூரம்… நீசொல்வதற்கு ஏதுமில்லை..!!சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! உன் அருகாமைவேண்டி தவமிருக்கும் மனது;சாத்தியமாக்க வந்து சேர்….!இணைந்து மகிழப்போகும்வாழ்வின் நினைவுகளில்,வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…!!பெரிதாக ஒன்றுமில்லை…,சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!!Read More

சிரிப்பால் சிறைப்பிடித்தாள்..

உன் முத்துப் பற்களால் நீ சிரிக்கஅதை பார்த்து என் மனம் பரிதவிக்க! உன் உதட்டோர புன்னகை என்னைக் கொல்லுதடி!அதை தொடர்ந்து என் கண்கள் செல்லுதடி!! என் மனம் கவர்ந்தவள் நீயடி..உன்னை பிரியும் நொடி என் மரணமடி!! – இரா. கார்த்திகாRead More

வேந்தனின் வர்ணனை

ரம்பா, ஊர்வசி, மேனகையிடமே மதிமயங்காத மன்னனடி,உன்னைக் கண்டதும் கண்கள் பூத்தது,அது உன் கூந்தல் செய்த மாயமடி!பூமியில் பிறந்த மேனகை நீயடி!! உன்னைக் கவர அந்த விஸ்வாமித்ரனை வீழ்க்கும் வேந்தன் நானடி..உன் கூந்தல் வாசம் என்னைக் கூப்பிடும் நேரம்மனதின் ஓரம் ஏதோ ஒரு பாரம்.. – இரா.கார்த்திக்காRead More

பூட்டி வைத்த நினைவுகள்

தேக்கி வைத்த வார்த்தைகள் தவித்துக் கொண்டிருக்கிறது விழிகளில்,பூட்டி வைத்த நினைவுகள் பொங்கிக்கொண்டிருக்கிறது நெஞ்சினில்,சாத்திவைத்த கதவுகளாய் கவிதைப் பாடுது இதழ்ளில்,தோண்டிப் புதைத்த நியாபகம் யாவும் தாளம்போடுது உயிரினில், பார்த்துப் பார்த்துப் பழகிய காலம்மீண்டும் பிறந்தது நொடியினில்! – இரா. கார்த்திகாRead More

பெண்மையின் உவமை

புன்னகை வீசும் பனிமலர் நீயோ!ஆழ்கடல் அலைகள் சொல்லும் அழகிய கன்னியும் நீயோ!! பறவைகள் பரவசமாக பாடும் பாட்டொலி நீயோ!பெண்மையின் உவமையும் நீயோ!உன் வசம் வீழ்ந்த வீரனும் நானோ!! இரா.கார்த்திகாRead More

புத்தனும் பித்தனாய் மாறும் மர்மம்!

கண்கள் வாசிக்க கவிதையாய் நீ!இதயம் நேசிக்கும் இனிமையாய் நீ!! கனவில் வருகின்ற கடவுளாய் நீ!உன்னை யாசிக்கும் பக்தனாய் நான்!! வானில் ஒளிரும் திங்களாய் நீ!உன்னை தீண்டும் மேகமாய் நான்!! நீ என் உயிரில் நிறைந்திருக்ககாற்றும் மழையும் கதை சொல்லபுத்தனும் பித்தனாய் மாறினேனே!Read More

என்னை விட்டு தள்ளி நில்லு

கண்கள் கொஞ்சம் காய்ந்தே இருக்கட்டும்என் நினைவுகளில் நீ வர வேண்டாம்! கண்ணீர் வராமல் காலம் கழியட்டும்என் கனவிலும் நீ வர வேண்டாம்!!Read More

எந்த நிலையிலும் உன் காதல்

என் எண்ணங்களில் உன் வண்ணங்கள் உள்ளவரைஎன் கவிதைகள் ஓயாது! இறவா நிலை கொண்டாலும், உன் நினைவுகள் உள்ள வரைஎன் கற்பனைகளும் கதைகளும் தீராது!!Read More