• July 27, 2024

அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்..! – தவறாமல் சாப்பிடுங்கள்..

 அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்..! – தவறாமல் சாப்பிடுங்கள்..

Fig

 அத்திப்பழம் மரவகையைச்  சார்ந்தது. அத்தியில் நாட்டு அத்தி,  நல்ல அத்தி என பலவகையான மரங்கள் உண்டு.இது அளவான உயரம் உடைய நடுத்தர மரமாகும். இந்த மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது.

இந்த மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். அதில் மூன்று நரம்புகள் இருக்கும். இதில் 750 மில்லி கிராம் பொட்டாசியம், 242 மில்லிகிராம் கால்சியம், 35 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. 50 கிராம் அளவுள்ள அத்திப்பழம்  ஓன்றில் நார்சத்து 5.8 சதவீதமும், பொட்டாசியம் 3.3 சதவீதமும், கால்சியம் 200 மில்லிகிராமும், இரும்பு 10 மில்லிகிராமும், 2 கலோரியும் வைட்டமின் பி 3 சதவீதமும் உள்ளது. மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் 2 முதல் 4 மடங்கு வரை தாது உப்புகளும் அடங்கியுள்ளது.

Fig
Fig

அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் குறைவதில்லை அத்திப்பழம் மிகச் சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் மூன்று வேளை உலர் அத்தி பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து நிறைந்துள்ளதால் ஒரே மாதத்தில் ஹீமோகுளோபினின் அளவு ஒரு கிராம் வரை உயரும்.

கடுமையான ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் போதிய ரத்தம் இன்றி இருக்கும் கர்ப்பிணிகளுக்கும் உலர் அத்தி பழம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. மேலும் செரிமான பிரச்சனைகள், குடலியக்கம் சீராக இருத்தல் இதில் பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இந்தப் பழத்திற்கு உள்ளது.

Fig
Fig

 சிறு குடல், பெருகுடல் தங்கியிருக்கும் கொழுப்புகளால் சிலருக்கு நோய் ஏற்படும். அபாயம் உண்டு பண்ண கூடிய உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி குடலை சுத்தமாக்கும்.

 உடலில் புற்று நோய்களைக் கட்டுப்படுத்த கூடிய தரமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு அத்திபழத்தில்ள்ளது. அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும் கொடுக்கும், ஆண்மையை பெருக்கும் தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கொழு, கொழு என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. 

Fig
Fig

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை உண்டு வந்தால் வெண்புள்ளிகள் வெண் குஷ்டம் தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். இதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து பூசினால் வெண்புள்ளிகள் மறையும்.