
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று வடதமிழகத்தில் கரையை கடந்தது. இதன் விளைவாக சென்னையிலும் தமிழகத்தின் மற்றும் பல மாவட்டங்களிலும் அதி கனமழை அடித்து ஊற்றியது.
குறிப்பாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும் வீதிகளிலும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்தும் சேதமானது. இந்நிலையில் இந்த சேதத்திற்கு காரணமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரண்டு மணி நேரத்தில் கரையை கடந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவில் இருந்து வட தமிழகத்தில் பெய்த அதி கனமழையானது இனி இருக்காது எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று பெய்த கனமழையின் எதிரொலியாக சென்னையின் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனை சரி செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Rajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowஇந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை முழுவதுமாக கடந்து செல்ல இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அது சற்றே கரையைக் கடந்து இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதி கன மழைக்காக விடப்பட்டிருந்த ரெட்அலர்ட் தற்போது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு விலக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் நாளை முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
- வரலாற்று முடிவு: மே 5-க்குப் பிறகு ஸ்கைப் இல்லை!
- மது, சிகரெட் மட்டுமல்ல, இந்த பழக்கங்களும் உங்கள் கல்லீரலை பாதிக்கலாம் என்று தெரியுமா?
- சிறிய நாய் வலேரியை தேடி 500 நாட்கள்: விஷப்பாம்புகள் நிறைந்த காட்டில் எப்படி உயிர் பிழைத்தது?
- தமிழ் என்னும் அமுதத்தை உயிரென கொண்டாடிய பாவேந்தர் பாரதிதாசன் – அவரது தமிழ் பற்று எவ்வாறு நம்மை ஈர்க்கிறது?
- அதிர்ச்சியான ஒரு வரலாறு இது! கேரளாவில் பெண்கள் இப்படி தான் இருந்தார்களா? யார் இந்த நாயர்கள்?
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கிய பின் வெளியிடப்பட்ட வானிலை புகைப்படத்தை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.