
Vadoma tribe feet
வடோமா பழங்குடி மக்கள் ஜிம்பாப்வேயின் வடக்கு பகுதியில் இருக்கும் கயம்பா என்ற இடத்தில் வசித்து வருகிறார்கள். வேட்டையாடுதலை தனது பாரம்பரியமாக கொண்டிருக்க கூடிய இந்த மக்கள் சாம்பேசி நதி பள்ளத்தாக்கில் அதிக அளவு வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த மக்களிடம் காணப்படக்கூடிய ஒரு அரிய ஒரு மாற்றமானது இயற்கையால் படைக்கப்பட்ட மனிதனிடம் எப்படி இந்த உடல் ரீதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை பலர் மனதிலும் கேள்வியாக மாற்றிவிட்டது.

ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை படைத்திருக்கும் மனிதன் மனித இனத்திற்கும் அதுபோல குறிப்பிட்ட வரையறைகளோடு உருவத்தை கொடுத்திருக்கிறான்.
ஆனால் இங்கு வாழக்கூடிய மக்களில் பாதி மனிதனாகவும், பாதி பறவையாகவும், அவர்களது வடிவமாக உள்ளார்கள் என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அப்படி இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளதால் என்று கூட நீங்கள் எண்ணலாம்.
ஆனால் உண்மையில் அந்த பழங்குடி மக்களின் உடல் மனிதர்களைப் போலவும் கால்கள் ஆஸ்ட்ரிச் என்று அழைக்கப்படும் தீ கோழியை போல காட்சி அளிக்கிறது. இதனால் இந்தத் தீவில் வசிக்கும் மக்களை ஆஸ்ட்ரிச் மக்கள் என்றே அழைக்கிறார்கள். தீ கோழிகளின் கால்கள் எப்படி இருக்குமோ அதுபோல இந்த மக்களின் கால்களில் இரண்டு பெரிய வீரர்கள் மட்டுமே உள்ளது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து பார்க்கும் போது அறிவியாளர்கள் இதனை ஏக்ரோடாக்டிலி என்ற தொழில்நுட்ப பெயர் கொடுத்து அழைக்கிறார்கள். அதாவது வேறுபட்ட பாத அமைப்பை கொண்டிருப்பதால் இவர்களால் மெதுவாக நடக்க முடியும். ஓட முடியாது ஆனால் சிறப்பாக மரம் ஏற முடியும்.
வடோமா மக்கள் தங்கள் முன்னோர்களிடம் இருந்து வழி, வழியாக இது போன்ற உடல் அமைப்பை பெற்றிருக்கிறார்கள். மேலும் மூதாதையர்கள் பற்றி கூறுகையில் அவர்கள் பறவைகளைப் போலத்தான் இருந்தார்கள். இந்த பறவைகள் வானில் நட்சத்திரத்தில் இருந்து பூமிக்கு வந்தவை. இது மனித பெண்ணின் மரபணுடன் கலந்ததால் ஏற்பட்ட டிஎன்ஏ மாற்றம் என்று கூறுகிறார்கள்.

எனினும் இந்த அமைப்பானது எல்லா பழங்குடி மக்களிடமும் காணப்படுகிறதா? என்றால் அதாவது 5 வடோமா இன பழங்குடியினர் இடையே காணப்படுகிறது. நாங்கள் ஒருவருக்கு மட்டும் தான் இத்தகைய உடல் அமைப்பு மாற்றம் உள்ளது.
இந்த அறிய வித்தியாசமான உடல் அமைப்பை கொண்ட இவர்கள் மனிதர்கள் வாழும் இடத்தை விட்டு விலகி ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள் இனத்திற்கு வெளியே திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை.
இவர்கள் தங்களது உருவ நிலை மாற்றத்தைப் பற்றி எந்தவித கவலையும் கொள்ளாமல் மீன்பிடித்தல், தேன் சேகரித்தல், வேட்டையாடுதல் போன்ற தொழில்களை செய்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள்.