
Ghost world
பிறப்பது எப்படி ஒரு இயல்பான விஷயமோ, அதுபோலத்தான் இறப்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுகின்ற நிகழ்வாக பூமியில் மனிதர்கள் தோன்றிய காலம் தொட்டு நடந்து வருகிறது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
அப்படி இருந்தாலும் மனிதன் இறந்த பிறகு அவனுடைய உடலில் இருந்து பிரிந்து செல்லும் ஆவி எங்கு செல்லும் என்பது இன்று வரை வெளிவராத ஓர் மர்மமாகவே உள்ளது.

வியத்தகு தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் அடைந்து, விண்ணில் இருக்கும் வேற்று கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை விட்டு அங்கு சென்று குடியேற முடியுமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் நமக்கு ஆவி உலகம் பற்றிய விஷயங்கள் இன்னும் புலப்படவில்லை என்பது எங்கோ.. ஏதோ.. நம்மை விட ஒரு மிகப்பெரிய சக்தி இருப்பதை வலியுறுத்துகிறது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowஇந்து சமயக் கூற்றுப்படி சொர்க்கம், நரகம் என்று இரண்டு பகுதிகள் உள்ளதாகவும், இறப்புக்கு பின்பு அந்த இரு பகுதிகளை நோக்கி ஆன்மா என்கின்ற ஆவி நகர்வதாகவும், நன்மை செய்தவர்களுக்கு சொர்க்கமும், தீமை செய்தவர்களுக்கு நரகமும் கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஆவி என்று அழைக்கப்படுகின்ற இந்த பேய்கள் பூமியை விட்டும், தங்களது உறவுகளை விட்டும் செல்ல விரும்பாதவர்கள் தான் இப்படி அலைவதாக கூறி வருகிறார்கள். அது தங்களின் எதிர்பாராத இறப்புக்கு நீதி தேடி போராடுவதாக சிலர் கூறி வருகிறார்கள்.
இதனை மையப்படுத்தி பார்க்கும் போது விபத்தினாலோ, தற்கொலைகளாலோ, இறந்தவர்கள் தான் பேய்களாக, ஆவிகளாக உலா வருகிறார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது.
இத்தகைய பேய்கள் மற்றும் ஆவிகளுக்கு உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் எதையும் அவற்றால் உணர முடியாது என்பது தான் மிக முக்கியமான கருத்தாகும். இந்த ஆவிகள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது தங்களது சாவுக்கு காரணமானவர்கள் முன் மட்டுமே தன்னை வெளிக்காட்ட முயற்சி செய்யுமாம்.
அதுமட்டுமல்லாமல் இந்த ஆவிகளால் ஒரு மனிதனின் உடலில் புகுந்து மற்றொருவருடன் தொடர்பு கொள்ள முடியும். இறந்து 12 நாட்கள் ஆனவர்களின் ஆவி அந்த வீட்டைச் சுற்றியே இருக்கும் என்பதால் தான் பல விதமான பிரார்த்தனைகளை செய்து 13-வது நாள் திருப்திப்படுத்தக் கூடிய ஹோமங்கள் மற்றும் பூஜைகளை செய்கிறார்கள்.

சாதாரணமாக இந்த ஆவிகளை ஓ பாசிட்டிவ் மற்றும் ஓ நெகட்டிவ் குரூப் ரத்தம் இருப்பவர்கள் எளிதில் அவர்கள் கண்களால் பார்க்க முடியும் என்று சிலர் கூறி வருவதோடு, சில நேரங்களில் கனவுகள், மர்ம குறியீடு, சத்தம் புகை போன்றவற்றின் மூலம் தங்களை வெளிப்படுத்தும் நிலையில் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் பேய்களுக்கு வாசனையை மோப்பம் பிடிக்கக்கூடிய சக்தி அதிக அளவு உள்ளது இவற்றுக்கு கால நேரம் எதுவுமே கிடையாது. இப்போது உங்களுக்கு மிக நன்றாக பேய்கள் பற்றிய ஆச்சரியமான விஷயங்கள் புரிந்து இருக்கும்.