Skip to content
September 16, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சிறப்பு கட்டுரை
  • பலராமரின் கரு தாயின் கர்ப்பப்பையில் இருந்து வேறொரு பெண்ணுக்கு மாற்றப்பட்டதா? பாகவதம் தரும் திரில்லிங் ரிப்போர்ட்..
  • சிறப்பு கட்டுரை

பலராமரின் கரு தாயின் கர்ப்பப்பையில் இருந்து வேறொரு பெண்ணுக்கு மாற்றப்பட்டதா? பாகவதம் தரும் திரில்லிங் ரிப்போர்ட்..

Brindha August 5, 2023 1 min read
Balaraman

Balaraman

651

இந்துமத புராணங்களிலும் இதிகாசங்களிலும் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை ஆய்வு செய்து பார்க்கும் போது பல அற்புதமான விஷயங்கள் வெளிவருவதோடு, நமது முன்னோர்களுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலத்திலேயே இத்தகைய அறிவியல் சாதனைகளை எப்படி செய்தார்கள் என்று நம்மை வியக்க வைக்கிறது.

அந்த வரிசையில் இன்று பலராமன் உடைய கருவானது தன் தாய் வயிற்றிலிருந்து வேறொரு பெண்ணின் வயிற்றுக்கு மாற்றப்பட்ட விஷயத்தை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

Balaraman
Balaraman

உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். பலராமன் பகவான் கிருஷ்ணரின் அண்ணன் என்று. கோகுலத்தில் கிருஷ்ணன் வளர்ந்த போது அவனோடு துணையாக தோள் கொடுத்த பலராமன், கிருஷ்ணனுக்கு உதவியாக பல போர்களில் களம் இறங்கி இருக்கிறார்.

புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் பலராமனை முதல் விவசாயி என்று கூட நாம் சொல்லலாம். இதற்கு காரணம் இவர் விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய ஏரை தனது ஆயுதமாக கொண்டிருக்கிறார். எப்போதுமே ஒரு நாடு செழிப்பாக இருக்க வேண்டும் என்றால், ஏர்முனையும் போர்முனையும் சிறப்பாக அமைய வேண்டும் என்று கூறுவார்கள். அந்த வகையில் உலகில் முதல் விவசாயியாகவும், அந்த விவசாயத்துக்கு பயன்படக்கூடிய ஏரை ஆயுதமாக பயன்படுத்தியவர் தான் பலராமன்.

மேலும் இந்து புராணத்தின்படி இந்த பலராமன் தன் முற்பிறவியில் ஷேஷா என்ற சர்ப்ப ராஜாவாக பிறந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். மேலும் விஷ்ணு பாற்கடலில் ஓய்வெடுக்க மென்மையான வசதியான படுக்கையாக மாறியவர் ஷேஷா என்ற இவர் தான்.

சர்ப்ப ராஜாவான இவரின் சேவையில் மகிழ்ந்த விஷ்ணு தான் எடுக்க இருக்கும் அடுத்த அவதாரத்தில் தனது சகோதரராக பிறக்க கூடிய வாய்ப்பை அளித்ததை அடுத்து, கோகுலத்தில் வாழ்ந்து வந்த வசுதேவருக்கும், ரோகினிக்கும் மகனாகப் பிறந்தார் என்ற கதை நமக்கு மிகவும் நன்றாக தெரியும்.

Balaraman
Balaraman

இந்த பலராம் ஆன்மீகத்தில் மட்டுமல்லாமல் உடல் வலிமையை அதிகளவு பெற்றவர். கோகுலத்தில் கண்ணனுக்கு துணையாக பேய்களை கொல்வது, கோகுல மக்களை காப்பது போன்ற பல பணிகளை செய்து இருக்கிறார். மிகச் சிறந்த போர் வீரரான இவர் குருசேத்திரப் போரில் கண்ணனுக்கு உதவி புரிந்திருக்கிறார்.

இந்துக்களின் கடவுளாக கருதப்படக் கூடிய பலராமன், விஷ்ணுவின் அவதாரமாக கருதி வணங்கப்படக்கூடிய நிலையை அடைந்தவர். பலராமனின் பிறப்பில் தான் அந்த ரகசியம் புதைந்துள்ளது. இதுவரை நீங்கள் இதைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்களா? என்பது சந்தேகம் தான்.

இந்த உண்மையை மிக நேர்த்தியான முறையில் பாகவதம் விளக்கி உள்ளது. இதை படிக்கும் போதே நமது முன்னோர்களின் சீரிய அறிவை எண்ணி நமக்குள் வியப்பு ஏற்படுகிறது.

See also  யார் இந்த மூசிக? உண்மையில் விநாயகர் வதம் செய்த அரக்கனா?

மருத்துவ அறிவியல் வளர்ச்சி அடையாத அந்த காலகட்டத்தில் பலராமனின் பிறப்பானது ஒரு குழந்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் நடந்தது என்றால் எப்படி உங்களுக்கு இருக்கும். இது எல்லாம் உண்மையில் சாத்தியமா? என்று பல வகைகளில் உங்களுக்குள் கேள்விகள் எழும்.

Balaraman
Balaraman

எனினும் பாகவதம் இந்த கரு மாற்று அறுவை சிகிச்சையை பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளது. உலகிலேயே இது தான் முதல் கர்ப்பப்பை சார்ந்த அறுவை சிகிச்சையாக இருந்திருக்கும் என்று நாம் ஆணித்தரமாக அடித்து கூறக்கூடிய வகையில் தான் நிகழ்வு உள்ளது.

பாகவதத்தை மேலும் ஆய்வு செய்து பார்க்கும் போது அதனுடைய உள் அர்த்தம் மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுகிறது. விஷ்ணு பகவான் திரேத யுகத்தில் அவதாரம் எடுக்க விரும்பிய போது அவர் தலையில் இருந்து ஒரு வெள்ளை முடியை பறித்தார்.

பகவான் விஷ்ணுவின் தெய்வீக ஆற்றலின் மூலம் இந்த வெள்ளை முடி தேவகியின் கருப்பையில் சென்று கருவுற்றது. ஏற்கனவே நமக்கு தெரிந்த கதை என்னவென்றால் தேவகியின் வயிற்றில் பிறக்கக்கூடிய குழந்தை அவன் தாய் மாமனான கம்சனை அழித்துவிடுவான் என்ற கதை தான்.

இதனை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து கொண்ட பகவான் விஷ்ணு தேவகியின் வயிற்றில் உருவாகி இருந்த கருவை தேவி மகா மாயாவின் துணையோடு ரோகினியின் கர்ப்பப்பைக்கு மாற்ற கூறுகிறார். இதனை அடுத்து தேவகியின் வயிற்றில் இருந்த கருவானது நேர்த்தியான முறையில் ரோகினியின் வயிற்றில் இருந்த கர்ப்பப்பைக்கு மாற்றப்பட்டது. இதனை அடுத்து பலராமன் ரோகினியின் வயிற்றில் பிறக்கிறார் என்பதை தெளிவாக பாகவதத்தில் கூறியிருக்கிறார்கள்.

இப்போது போது சொல்லுங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலை எப்படிப்பட்டது. தேவி மகா மாயை தான் சிறப்பான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு கருவினை மாற்றிய பணியை செய்திருக்கிறாள்.

Balaraman
Balaraman

மேலும் பலராமன் கம்சனின் மல்யுத்த வீரர்களான தேனுகா,பிரலம்பா மற்றும் முஷ்டிக போன்ற வலிமைமிக்க வீரர்களை கொன்று இருக்கிறார்.மல்யுத்த போட்டியில் பீமனை தோற்கடித்து பீமருக்கு குருவாக திகழ்ந்தவர் தான் பலராமர். மேலும் மல்யுத்தத்தில் இருக்கக்கூடிய பல சூட்சுமங்களை பீமனுக்கு இவர் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

பாகவதத்தில் கூறப்பட்டிருக்கக் கூடிய உண்மையை நீங்கள் ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது காண்டம் ஒன்றாவது மற்றும் இரண்டாவது அத்தியாயங்களில் படித்து தெரிந்து கொள்ளலாம். இதில் பலராமன் மர்மமான வடிவில் தோன்றிய கதையை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்.

இப்போது உங்களுக்கு பலராமனின் பிறப்பு எத்தகையது என்ற உண்மை கதை புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். இது கதை அல்ல இப்படி நடந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் அதிக அளவு உள்ளது என்பதால் ,நமது முன்னோர்களின் அறிவியல் அறிவை வியப்பதோடு நின்று விடாமல் பாகவதம் முழுவதையும் படித்து பயனடையுங்கள். உங்களது கருத்துக்களையும் எங்களோடு பகிருங்கள்.

See also  காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம்: நம் முன்னோர்களின் அறிவாற்றலை வெளிப்படுத்துகிறதா?

About the Author

Brindha

Author

View All Posts
Tags: Balaraman பலராமன்

Post navigation

Previous: யார் இந்த அல்டினா ஷினாசி (Altina Schinasi) ? – இன்று கூகுளில் இவர்களுக்கு டூடுள்…
Next: “யார் இந்த தேவரடியார்கள்..!” அவர்களின் வரலாறு என்ன? – ஓர் அலசல்..

Related Stories

ens
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025
fg
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025
thirumoolar-history
1 min read
  • சிறப்பு கட்டுரை

‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?

Deepan August 5, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
1 min read
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
1 min read
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
1 min read
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

rg
1 min read
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
1 min read
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
1 min read
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 1
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 2
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 3
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 4
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025
‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன? thirumoolar-history 5
  • சிறப்பு கட்டுரை

‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?

August 5, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

ens
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025
vi
1 min read
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025
vijay
1 min read
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025
fg
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.