
Lingam
இந்து சமயத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளாக சித்தரிக்கப்பட்டிருக்கக்கூடிய சிவ வழிபாட்டில், சிவலிங்கங்கள் பற்றிய அவிழ்க்க முடியாத சில மர்மமான விஷயங்களை ரஷ்ய விஞ்ஞானி விளாதி மீர் பல கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார் அது பற்றிய விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.
ஸ்தூல வடிவில் இறை உருவங்களை வழிபட்ட இந்து சமயத்தில் குளவி கல்லை போல இருக்க கூடிய இந்த சிவலிங்கமானது உருவமற்ற ஒரு பொருள் எப்படி வழிபாட்டு பொருளானது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

மேலும் இந்த லிங்க வடிவமானது புத்த, ஜெயின மதத்தவர்களும் வழிபட்ட பொருளாக அவர் கூறியிருக்கிறார். எல்லா மதத்தவர்களும் வணங்கக்கூடிய வடிவில் அமைந்திருக்கும் இந்த லிங்கத்தை சிவனின் உருவமாக இந்து மதத்தை சார்ந்தவர்கள் வழிபட்டு இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் ஒரு அணுவின் தத்துவம் இந்த சிவன் லிங்க ரூபத்துக்குள் உள்ளதாக அவர் தெரிவிக்கிறார். லிங்கத்தை பயன்படுத்தி மழை, நெருப்பு, காற்று என அனைத்தையும் பெற முடியும் என்று அவர் நம்புகிறார். எனவே சிவலிங்க சொரூபம் மனிதர்களுக்கு தெரியாமல் பயன்படுத்தக்கூடிய ஒரு எந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்பது அவரது கணிப்பு.
இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் சிவலிங்க ரூபங்கள் போலவே பூமிக்குள்ளும் ஏராளமான லிங்கங்கள் புதைந்து இருக்கலாம். அவை தான் சுயம்புவாக வெளிப்படுகிறது என்ற உண்மையை பகிர்ந்து இருக்கிறார்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
பஞ்ச பூதங்களும் சீரான இயக்கத்தோடு இயங்க இவை உதவி செய்வதாக தான் முடிகிறது என்ற எண்ணத்தில் அவர் இருப்பதோடு, இதனை அடுத்து தான் பஞ்சபூத வழிபாடுகள் தோன்றியிருக்கலாம் என்று கூறியிருக்கிறார். மேலும் மனித சரித்திரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளது. அவை சுயம்பு லிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடி செயல்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
எனவே உலகின் உயர்ந்த சிகரமான இமயம் கூட லிங்கசுரூபமாக பார்க்கப்படுகிறது. ஒரு வட்டத்திலிருந்து கூம்பு முளைத்தது போல் இருப்பது உலகமே ஆவுடையாராக திகழ்வதாக நம்பப்படுகிறது.

பஞ்சபூத ஆராதனை குளிர்ந்த காற்றையும் உறைந்த பனியை நீராக்கவும், நெருப்பாகவும் உதவி புரியும். புவியீர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத நிலையில் எல்லாவிதமான கதிர்வீச்சுகளையும் கிரகிக்கக்கூடிய தன்மை இதற்கு இருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
எனவே ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் அனைத்தும் மற்ற விஞ்ஞானிகள் ஏழு கூடிய வகையில் இருப்பதால் அவரது கருத்தை இதுவரை யாரும் மறுத்து பேசவில்லை உயிர் ஆகிய ஜீவன் சுலபமாக சிவத்தை அடைய இது போன்ற வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தி இருக்கலாம்.