ஒரு நாள் Collector ஆன Ahmedabad சிறுமி !!!

Brain Tumor எனப்படும் மூளைக் கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஃப்ளோரா எனும் சிறுமியை ஒரு நாள் கலெக்டராக அமர வைத்த அதிசயம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்றவே அஹமதாபாதில் உள்ள ஆட்சியர் சந்திப் சங்கிலி நிறைவேற்றியுள்ளார்.

மூளை கட்டிக்கான அறுவை சிகிச்சை செய்த பிறகு சற்று நிலைகுலைந்து போயிருந்த சிறுமி Flora-வுக்கு சிறுவயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்பது ஆசை. சிறுமியின் ஆசையை பற்றி Make a Wish Foundation ஆட்சியர் சந்தீப்பிடம் கூறியுள்ளனர்.
சிறுமியின் ஆசையை நிறைவேற்ற நினைத்தார் கலெக்டர் சந்தீப். ஒரு நாளுக்கு மட்டும் Flora-வை ஆட்சியர் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். அது மட்டுமின்றி இந்த ஆசையை அந்த சிறுமியின் பிறந்த நாளான செப்டம்பர் 25-ம் தேதி நிறைவேற்றி வைத்துள்ளார்.
சிறுமியை வாழ்த்திய பின்பு ஆட்சியர் சந்தீப், “விரைவில் குணமடைந்து Flora தனது கனவுகளை நோக்கி பயணிக்க வேண்டுகிறேன். இந்த ஆசையை நிறைவேற்ற உதவிய அனைவருக்கும் நன்றி.”, என தெரிவித்துள்ளார்.
- விமானத்தில் எந்த வகையான பிரச்சனை ஏற்படும் போது மே டே (May day) என்று சொல்ல வேண்டும்?
- விமானம் எழும்பும் போதும் தரை இறங்கும் போதும் ஏன் பயணிகள் நேராக அமர வேண்டும்?
- ஹோட்டல்களில் வெள்ளைநிற படுக்கை விரிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுவது ஏன் ?
- தவறாக புரிந்து கொள்ளபட்ட தமிழ் பழமொழி இது. உண்மை அர்த்தம் என்ன தெரியுமா?
- உங்கள் வாழ்க்கையில் எது வந்தாலும், இனி நீங்கள் சமாளிக்கலாம்!
ஏழாம் வகுப்பு படிக்கும் Flora-வுக்கு கட்டி கண்டறியப்படும் வரை அவர் நன்றாக படித்து வந்தார் என அவரது தந்தை கூறியுள்ளார். மேலும் ஒருநாள் கலெக்டராக Flora-வை அமர வைத்ததற்கு ஆட்சியர் சந்தீப்பிற்கு தனது நன்றிகளை Flora-வின் தந்தை தெரிவித்தார்.
சிறுமி Flora ஆட்சியர் இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்கள் Deep Talks தமிழுடன் இணைந்து இருங்கள்.