• July 27, 2024

“அறிவியலுக்கே ஆட்டம் காட்டும் திருநள்ளாறு..!” – விடை கிடைக்காத ரகசியம்..

 “அறிவியலுக்கே ஆட்டம் காட்டும் திருநள்ளாறு..!” – விடை கிடைக்காத ரகசியம்..

Thirunallar

திருநள்ளாறு என்றாலே சனீஸ்வரனுக்கு உகந்த சரித்திரம் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இந்த கோயிலை சுற்றி பல வகையான தீர்த்தங்கள் உள்ளது. அதில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் மிக முக்கியமானவையாகும்.

வினைகளை தீர்க்கக்கூடிய இந்த மூன்று தீர்த்தங்களில் நீராடி விட்டு இங்கு இருக்கும் சனீஸ்வரராகிய தர்பாபாரண்யேஸ்வரரை தரிசித்து சனியனை பிரீத்தி செய்து அவரின் அருளை பெற முடியும்.

அப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்த தளத்தில் அறிவியலுக்கே தண்ணி காட்டக்கூடிய சிறப்பான சம்பவம் உள்ளது என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா?.

Thirunallar
Thirunallar

ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் உள்ளது. அது என்னவெனில் பல நாடுகளின் செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இவற்றில் சில செயற்கைக்கோள்கள் பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கடக்கும் போது மூன்று வினாடிகள் செயல்படாமல் அப்படியே நின்று விடும். பிறகு மூன்று வினாடிகளுக்கு  வழக்கம் போல் சுற்று ஆரம்பிக்கும்.

இந்த சம்பவத்தை உற்று நோக்கிய நாசா எதனால் இப்படி நிகழ்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தபோது அந்த ஆய்வில் கிடைத்த தகவல் அவர்களுக்கு அதிர்ச்சி நிறைந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதாவது எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில், இந்தியாவில் புதுச்சேரி  இருக்கும் திருநள்ளாறு தர்பாபாரண்யேஸ்வரர் கோயிலுக்கு நேர் மேலே கடக்கும் போது மூன்று வினாடிகள் செயல்படாமல் நின்று விடுகிறதாம்.

Thirunallar
Thirunallar

இதற்கு என்ன காரணம் என்பதை தீவிரமாக ஆய்வு செய்த நாசாவிற்கு கிடைத்த பதில் இதுதான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனி கிரகத்திலிருந்து கண்ணுக்கு புலப்படாத கருநீல நிற கதிர்கள் அந்த கோவிலின் மீது தொடர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனி பயிற்சியின் போது தான் இந்த நீல நிறக் கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அதிக அளவு காணப்படுகிறது. அந்த சமயத்தில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் இந்த நீல நிற கதிர்கள் பாயும் பகுதிக்குள் செல்லும்போது செயல் இழந்து விடுகிறது. ஆனால் செயற்கைக்கோள்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

Thirunallar
Thirunallar

இது சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்துக்களின் புனித தளமாகவும் சனி பகவான் முக்கிய ஸ்தலமானதாக போற்றப்படக்கூடிய இந்தப் பகுதியை எப்படி நமது முன்னோர்கள் தேர்வு செய்து அதற்கு உரிய கோவிலை கட்டினார்கள் என்பது தான்.

பூமியிலிருந்து 128 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த சனி கிரகத்தை முதன்முதலாக இத்தாலி விஞ்ஞானியான கலிலியோ தான் வான மண்டலத்தில் முதல் முதலாக பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே அதனை சரியான விதத்தில் தனித்து அந்தப் பகுதியில் நமது முன்னோர்கள் எப்படி கோயிலை கட்டினார்கள் என்பது மாபெரும் வியப்பை நமக்கு ஏற்படுத்துகிறது.