
தீர்க்கப்படாத மர்மம் கைலாய மலை
தீர்க்கப்படாத மர்மமாக இருக்கும் கைலாயமலை தான் சிவபெருமானின் உறைவிடம். கைலாய மலையானது நித்ய நிகழ்வுகளின் விலை மதிப்பற்ற ஆபரணமாக விளங்குகிறது.இது சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்ரா மற்றும் கர்னாலி நதிகளுக்கு அருகில் அமைந்துள்ள இது மிகவும் புனிதமான மலையாக கருதப்படுகிறது.
ரஷ்யக் கோட்பாடு
முதலில் மலையின் வடிவம் ஒரு மர்மமான முறையில் அமைந்துள்ளது. இது ஒரு பெரிய பிரமிடு போல் தெரிகிறது. சில ரஷ்ய அறிவியல் அறிஞர்கள் இது ஓர் இயற்கையான மலை அல்ல. மனிதர்களால் அமைக்கப்பட்ட பிரமிடு ஆக இருக்கலாம் என கருதுகிறார்கள்.
பன்னெடுங்காலமாக வியாபித்திருக்கும் விசித்திரமான சக்தி:
கைலாய மலை மீது ஏறும் மக்கள் வயது அதிகமாகும். தற்போது உள்ள காலங்களில் மக்கள் கைலாய மலையை ஏறி அடைவது மிகப்பெரிய விஷயமாக உள்ளது. அதற்கு மக்களின் வயதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இம்மலையில் இரண்டு வாரங்கள் என்பது வெறும் 12 மணிநேரம் ஆகவே உள்ளது.விசித்திரமான சக்தி ஏதாவது இந்த மலையில் உள்ளதா?
இரட்டை ஏரிகளின் கோட்பாடு
கைலாய மலையை சுற்றி இருக்கும் மானசரோவர் பகுதியில் இரண்டு ஏரிகள் உள்ளது. அதில் ஒன்று கடவுளின் ஏரி என்றும் மற்றொன்று அசுரர்களின் ஏரி என்றும் கூறப்படுகிறது.
மேலும் மக்கள் இதைப் பற்றிக் கூறும்போது நன்மை மற்றும் தீமை இரண்டுக்கும், சம நிலையில் கைலாய மலை நிற்கிறது. அதுபோல மனிதர்களிடமும் இந்த இரண்டு நிலைகள் உள்ளதை உணர்த்துகிறது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowஓம் பர்வதம்
இங்கு பனி பொழிவானது ஓம் அல்லது அம் வடிவில் உள்ளது.
உங்களுக்கு தெரியுமா? இந்த பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த அதிர்வாக ஓம் உள்ளது என்று. இது கைலாயம் மற்றும் பர்வதத்தில் மற்ற பகுதிகளில் இருப்பதை விட அதிகளவு காணப்படுகிறது.
விசித்திரமான சுவஸ்திக் நிழல்
சூரியன் மறையும் பொழுதில் மலை மீது சுவஸ்திக் வடிவத்தில் நிழல் முழுவதுமாக மலை மீது வியாபிக்கிறது. இதனை மலையில் உள்ள முனிவர்கள் பார்த்திருக்கிறார்கள். இந்த மலையின் உச்சியை அடைந்த ஒரே முனிவர் திபெத் நாட்டைச்சேர்ந்த மில்எரிப்பா.
இவர் ஒரு தலைசிறந்த திபெத்திய கவிஞர் மற்றும் புத்த மதத்தை பல்வேறு பகுதிகளில் பாடல்களாகவும், கவிதைகள் மூலமும் பரப்பியவர்.எப்படி இந்த புத்த மதத்தை பரப்பிய துறவிகளால் அவ்வளவு உயரமான பகுதியான மௌண்ட் எவரஸ்ட் சென்று இருக்க முடியும். ஆனால் ஏன் இவர்களால் கைலாய மலையின் உச்சியை அடைய முடியவில்லை.
சிவபெருமானின் உறைவிடம்
சுமார் 21000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே கைலாயம் மலையானது சிவபெருமானின் உறைவிடமாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக கைலாயத்தில் சிவபெருமானின் முகமானது மலை முழுவதும் நீண்டு தெரிகிறது.
நகரும் மலைகள்
என்ன காரணத்தினால் மக்களால் இந்த மலையின் உச்சியை அடைய முடியவில்லை. இந்த மலையானது அடிக்கடி, தான் இருக்கும் இடத்திலிருந்து சற்று நகர்ந்து மாறிக்கொண்டே வருவதால்தான் மக்களால் அதன் உச்சியில் அடைய முடியவில்லை.
எனவே தான் கைலாய மலையானது இந்த உலகத்தில் உண்மையான புனிதத்துவம் வாய்ந்த மலையாகப் கருதப்படுகிறது .