• July 27, 2024

என்ன 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் நடந்ததா ராமாயணம்..! – எப்படி கண்டுபிடித்தார்கள்..

 என்ன 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் நடந்ததா ராமாயணம்..! – எப்படி கண்டுபிடித்தார்கள்..

The Ramayana

இந்தியாவில் இன்றளவும் பேசப்படுகின்ற மிக முக்கியமான இதிகாசங்களில் முதல் இதிகாசமாக ராமாயணத்தை கூறலாம்.  இந்த ராமாயணத்தில் மகாவிஷ்ணு ராமர் அவதாரம் எடுத்ததாக இந்து புராணங்களில் கூறப்பட்டு உள்ளது.

அப்படிப்பட்ட இந்த நேர்த்தியான இதிகாசம் உண்மையில் நடந்ததா? இல்லையா? என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அறிவியல் பூர்வமாக இந்த கதை நடந்ததற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சில விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.

The Ramayana
The Ramayana

அந்த வகையில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமர் சேது பாலத்தை செயற்கைக்கோள்கள் படம் எடுத்து அனுப்பியது. அது மட்டும் அல்லாமல் ஜடாயு இருந்ததற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளது.

மேலும் ராமாயணத்தை முதல் முதலில் எழுதிய வால்மீகி இந்த ராமாயணமானது எப்போது நிகழ்ந்தது என்பதை உறுதியாக எந்த இடத்திலும் கூறவில்லை. இதனை அடுத்து ராமாயணம் எப்போது நடந்திருக்கும் என்பது போன்ற சர்ச்சைகள் அடிக்கடி ஏற்பட்டது.

அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி கொடுக்கக்கூடிய வகையில் அறிவியல் பூர்வமாக ராமாயணம் எப்போது நிகழ்ந்தது என்பதை மெய்ப்பிக்க கூடிய சான்று ஒன்று கிடைத்துள்ளது.

The Ramayana
The Ramayana

அது என்னவெனில் சீதா தேவியை தேடிச் செல்லக்கூடிய ஹனுமன் இலங்கையில் இருக்கக்கூடிய வீதிகளில் அலைந்து திரிந்து தேடும் போது சீதை கிடைக்கவில்லை. இதனை அடுத்து ராவணனின் அரண்மனையை நோக்கிச் செல்லக்கூடிய ஹனுமன் அங்கு அந்த அரண்மனையை நான்கு தந்தங்கள் கொண்ட யானை பாதுகாத்து வருவதை ராமாயணத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் விஞ்ஞானிகளின் கருத்துப்படி இந்த நான்கு தந்தம் கொண்ட யானைகள் சுமார் 1.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது. இதை ஹனுமன் கூறி இருப்பதால் இராமாயணம் சுமார் 1.6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை உறுதி செய்யும் விதமாக உள்ளது.

The Ramayana
The Ramayana

இந்த நான்கு தந்தம் உடைய யானைகளை Gomphothere என்று அழைத்திருக்கிறார்கள். இது பாலூட்டி இனத்தைச் சேர்ந்ததாகும். மேலும் ராமருக்கு உதவி செய்த வானர சேனைகளை ஆரம்பகால ஹோமோனிட் என்று கருதலாம்.

மேற்கூறிய தகவல்களின் அடிப்படையில் ராமாயணம் ஒன்று புள்ளி ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக நாம் இதன் மூலம் உறுதி செய்தாலும் மேலும் சில விஷயங்களை விரிவாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே உங்களுக்கும் இது பற்றியே ஏதேனும் தகவல் தெரிந்தால் அதைப்பற்றி எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.