Skip to content
June 26, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சிறப்பு கட்டுரை
  • அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத திருக்குறள்கள்!
  • சிறப்பு கட்டுரை

அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத திருக்குறள்கள்!

Deepan March 14, 2021 1 min read
Thirukural-Cover
440

இந்த உலகத்திற்கு தேவையான அனைத்து நீதிகளையும் பொதுவாக எழுதியதால் தான், இன்றுவரை உலக பொதுமறையாக இருக்கிறது திருவள்ளுவரின் திருக்குறள். இவரின் 133 அதிகாரத்தில், கொடுங்கோன்மை என்னும் அதிகாரம், ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை கேள்விக்கேட்டும் அதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம். ஒரு அரசன், ஒரு அரசு, ஒரு அரசியாவதி எப்படி இருக்கவேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு  முன்பே சொல்லிவிட்டு சென்ற ஒரு தீர்க்கதரிசி திருவள்ளுவர்.


56-ம் அதிகாரத்தில் இருக்கும் கொடுங்கோன்மை அதிகாரத்தில் இருக்கும் குறள்களை தெரிந்துகொள்ளுங்கள்.

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து (குறள்-551)


விளக்கம்:
ஒருவனின் மேல் இருக்கும் பகையால், அவனை கொலைசெய்வதை காட்டிலும் கொடூரமானது, மிக கொடியது எது தெரியுமா? குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு, அவர்களைத் துன்புறுத்தி, அந்த துன்பத்தில் மக்களை அழவைத்து தவறான வழியில் ஆளும் அரசாகும் என்கிறார் வள்ளுவர். கொலைகாரனை விட, பொருளுக்காக மக்களை துன்புறுத்தும் அரசன் கொடூரமானவன்.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு (குறள்-552)

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.


Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

விளக்கம்:
ஆட்சியில் இருக்கும் அரசனோ அல்லது அரசியல்வாதியோ இவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, பொதுமக்களின் பொருட்களை பறிப்பது என்பது, கையில் வேல்வைத்து மக்களை மிரட்டி வழிபரிசெய்யும் கொள்ளைக்காரனின் செயலை போன்றது.


நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும் (குறள்-553)

விளக்கம்:
நாட்டில் நாள்தோறும் நடைபெறும் நன்மை தீமைகளை ஆராயாமால், அதுவும் முக்கியமாக தனது அரசால் விளையும் நன்மை தீமைகளை ஆராயாமால், ஆட்சிசெய்யும் அரசு விரைவில் கவிழ்ந்துபோகும் அல்லது அந்த அரசால் நாடே  சீர்குலைந்து போய்விடும்.


கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு (குறள்-554)

விளக்கம்:
ஒரு அரசன் எதைப்பற்றியும் ஆராயாமல் கொடுமையான ஆட்சியை அதாவது கொடுங்கோல் ஆட்சியை செய்தால், அந்நாட்டில் பொருளையும், அந்நாட்டில் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள்-555)


விளக்கம்:
ஒரு அரசனின் தவறான ஆட்சியை கண்டு, அவனின் கொடுமைகளை கண்டு, அதனால் துன்பப்பட்டு,   பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர், அந்த ஆட்சியையும், அந்த அரசனையும் அழிக்கும் படைக்கருவியாகும்.

மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி (குறள்-556)


விளக்கம்:
ஒரு அரசனுடைய புகழ் நிலைபெற்று நிற்கவேண்டும் என்றால், அந்த அரசன் நீதிநெறி தவறாமல், நேர்மையான முறையில் ஆட்சி செய்யவேண்டும். இல்லையென்றால், அந்த அரசும், அந்த அரசரும் புகழ் பெறாமல், வரலாற்றில் இடம்பெறாமல், சரிந்து போவார்கள்.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (குறள்-557)



விளக்கம்:
மழையில்லாமல் இருந்தால் இந்த உலகத்திற்கு எப்படி துன்பங்களும், துயரங்களும் ஏற்படுமோ, அதேபோல் ஒரு அரசன் தன்னுடைய குடிமக்கள் மீது இரக்கம் இல்லாமல் இருந்தால், அந்த குடிமக்கள் அத்தகைய துன்பத்தை அனுபவிப்பார்கள்.

இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின் (குறள்-558)


விளக்கம்:
ஒரு நாட்டில் இருக்கும் குடிமக்கள் வறுமையின்றி வாழ்ந்தால்கூட, அந்த நாட்டை ஆளும் அரசன், தவறான பாதையில் கொடுங்கோல் ஆட்சி செய்தால், ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும், பணக்காரனாய் வாழ்வது தான்  மிக கொடுமையானதும், மிக துன்பமானதும்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல் (குறள்-559)



விளக்கம்:
ஒரு அரசன் முறை தவறிச் செயல்பட்டால், நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப்போகும். அதனால் இயற்கை தரும் மழையைத் தேக்கி வைக்கமுடியாது. இதனால், மழைநீரும் வீணாகும், அந்நாட்டில் வளமும் வீணாகும்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் (குறள்-560)

விளக்கம்:
ஓர் அரசனோ அல்லது அரசோ அந்நாட்டை முறைப்படி காக்கத் தவறினால், அந்த நாட்டிற்கு  ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது. அதிலும் முக்கியமான தொழில்கள் அனைத்தும் தேய்ந்து விடும் அதாவது காணாமல் போய்விடும்.

இந்த வீடியோவாக பார்க்க:


Watch full video in YouTube and Don’t forget to Subscribe


Subscribe Now


Tags: thirukural thiruvalluvar

Continue Reading

Previous: பூலித்தேவனும்! அவரின் இறப்பில் இருக்கும் மர்மங்களும்!
Next: Enjoy Enjaami Song Decoding in Tamil

Related Stories

kanna
1 min read
  • சினிமா
  • சிறப்பு கட்டுரை

கண்ணதாசன் எனும் பெருங்கடல்: ஒரு மாபெரும் கலைஞனின் பிறந்தநாள் சிறப்புப் பார்வை

Vishnu June 24, 2025
fg
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மரணம் ஒரு தற்காலிக நிறுத்தமா? சாகா வரம் தரும் ‘கிரையோனிக்ஸ்’ தொழில்நுட்பத்தின் மர்மங்கள்!

Vishnu June 23, 2025
airport
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

விண்வெளியில் இருந்து தெரியும் நட்சத்திர மீன்! 6 லட்சம் பேருக்கு வேலை தரும் உலகின் மிகப்பெரிய விமான நிலையம்!

Vishnu June 23, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

Black-Holes
1 min read
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024
sunday
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

உலகின் மதங்களில் வார இறுதி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது?

Vishnu November 18, 2024
கண்ணதாசன் எனும் பெருங்கடல்: ஒரு மாபெரும் கலைஞனின் பிறந்தநாள் சிறப்புப் பார்வை kanna 1
  • சினிமா
  • சிறப்பு கட்டுரை

கண்ணதாசன் எனும் பெருங்கடல்: ஒரு மாபெரும் கலைஞனின் பிறந்தநாள் சிறப்புப் பார்வை

June 24, 2025
மரணம் ஒரு தற்காலிக நிறுத்தமா? சாகா வரம் தரும் ‘கிரையோனிக்ஸ்’ தொழில்நுட்பத்தின் மர்மங்கள்! fg 2
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மரணம் ஒரு தற்காலிக நிறுத்தமா? சாகா வரம் தரும் ‘கிரையோனிக்ஸ்’ தொழில்நுட்பத்தின் மர்மங்கள்!

June 23, 2025
விண்வெளியில் இருந்து தெரியும் நட்சத்திர மீன்! 6 லட்சம் பேருக்கு வேலை தரும் உலகின் மிகப்பெரிய விமான நிலையம்! airport 3
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

விண்வெளியில் இருந்து தெரியும் நட்சத்திர மீன்! 6 லட்சம் பேருக்கு வேலை தரும் உலகின் மிகப்பெரிய விமான நிலையம்!

June 23, 2025
‘கீச் கீச்’ சத்தம் நியாபகம் இருக்கா? ஒரு காலத்தின் வாட்ஸ்அப் ‘ஃபேக்ஸ்’ இயந்திரத்தின் கதை! fax 4
  • சிறப்பு கட்டுரை

‘கீச் கீச்’ சத்தம் நியாபகம் இருக்கா? ஒரு காலத்தின் வாட்ஸ்அப் ‘ஃபேக்ஸ்’ இயந்திரத்தின் கதை!

June 23, 2025
வானத்தின் ராஜாக்கள்: உலகின் 5 அதிநவீன போர் விமானங்களின் திகைப்பூட்டும் தொழில்நுட்பம்! air 5
  • சிறப்பு கட்டுரை

வானத்தின் ராஜாக்கள்: உலகின் 5 அதிநவீன போர் விமானங்களின் திகைப்பூட்டும் தொழில்நுட்பம்!

June 23, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

kanna
1 min read
  • சினிமா
  • சிறப்பு கட்டுரை

கண்ணதாசன் எனும் பெருங்கடல்: ஒரு மாபெரும் கலைஞனின் பிறந்தநாள் சிறப்புப் பார்வை

Vishnu June 24, 2025
fg
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

மரணம் ஒரு தற்காலிக நிறுத்தமா? சாகா வரம் தரும் ‘கிரையோனிக்ஸ்’ தொழில்நுட்பத்தின் மர்மங்கள்!

Vishnu June 23, 2025
airport
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

விண்வெளியில் இருந்து தெரியும் நட்சத்திர மீன்! 6 லட்சம் பேருக்கு வேலை தரும் உலகின் மிகப்பெரிய விமான நிலையம்!

Vishnu June 23, 2025
fax
1 min read
  • சிறப்பு கட்டுரை

‘கீச் கீச்’ சத்தம் நியாபகம் இருக்கா? ஒரு காலத்தின் வாட்ஸ்அப் ‘ஃபேக்ஸ்’ இயந்திரத்தின் கதை!

Vishnu June 23, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version