Brain Tumor எனப்படும் மூளைக் கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஃப்ளோரா எனும் சிறுமியை ஒரு நாள் கலெக்டராக அமர வைத்த அதிசயம் அகமதாபாத்தில் நடந்துள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்றவே அஹமதாபாதில் உள்ள ஆட்சியர் சந்திப் சங்கிலி நிறைவேற்றியுள்ளார்.

மூளை கட்டிக்கான அறுவை சிகிச்சை செய்த பிறகு சற்று நிலைகுலைந்து போயிருந்த சிறுமி Flora-வுக்கு சிறுவயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்பது ஆசை. சிறுமியின் ஆசையை பற்றி Make a Wish Foundation ஆட்சியர் சந்தீப்பிடம் கூறியுள்ளனர்.
சிறுமியின் ஆசையை நிறைவேற்ற நினைத்தார் கலெக்டர் சந்தீப். ஒரு நாளுக்கு மட்டும் Flora-வை ஆட்சியர் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். அது மட்டுமின்றி இந்த ஆசையை அந்த சிறுமியின் பிறந்த நாளான செப்டம்பர் 25-ம் தேதி நிறைவேற்றி வைத்துள்ளார்.
சிறுமியை வாழ்த்திய பின்பு ஆட்சியர் சந்தீப், “விரைவில் குணமடைந்து Flora தனது கனவுகளை நோக்கி பயணிக்க வேண்டுகிறேன். இந்த ஆசையை நிறைவேற்ற உதவிய அனைவருக்கும் நன்றி.”, என தெரிவித்துள்ளார்.
- எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை
- விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?
- விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?
- மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!
- ‘அன்பே சிவம்’ என்ற திருமந்திரத்தின் ரகசியம் என்ன?
ஏழாம் வகுப்பு படிக்கும் Flora-வுக்கு கட்டி கண்டறியப்படும் வரை அவர் நன்றாக படித்து வந்தார் என அவரது தந்தை கூறியுள்ளார். மேலும் ஒருநாள் கலெக்டராக Flora-வை அமர வைத்ததற்கு ஆட்சியர் சந்தீப்பிற்கு தனது நன்றிகளை Flora-வின் தந்தை தெரிவித்தார்.
சிறுமி Flora ஆட்சியர் இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்கள் Deep Talks தமிழுடன் இணைந்து இருங்கள்.
