
பரோட்டா சூரியின் பரோட்டா காமெடியை போன்ற சம்பவம் ஒன்று சைனாவில் அரங்கேறியுள்ளது. உணவகத்தில் அளவுக்கு மீறி உணவு அருந்திய காரணத்தால் காங் என்பவரை ஒரு சைனீஸ் உணவகம் உணவகத்திற்குள் நுழைய தடை விதித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல உணவகங்கள் குறிப்பிட்ட அளவுக்கு மீறி உணவு அருந்தினால் அதற்கு பரிசு தொகை ஒன்றை வழங்குவோம் என அறிவித்து உணவு போட்டிகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் சைனாவின் சாங்ஷா நகரில் ஒரு உணவகத்தில் all you can eat எனும் பெயரில் ஒரு உணவகம் இதே போன்ற உணவு போட்டிகளை நடத்தி வந்துள்ளது.

இதில் அளவுக்கு மீறி ஒருவர் உணவை அருந்தியுள்ளதால் அந்த ஹோட்டலின் உரிமையாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் உரிமையாளர் கூறுகையில், “காங் எனும் இந்த மனிதர் முதலில் எங்கள் உணவகத்திற்கு வந்தபோது ஒன்றை கிலோ பன்றி கறி சாப்பிட்டார், அதற்கு பின் இரண்டு முறை வந்தபோது 4 கிலோ இறால் சாப்பிட்டுள்ளார். இதனால் எங்கள் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.” என கூறியுள்ளார்.
காங் தரப்பில், “என்னை தடை செய்தது நியாயமல்ல. அந்த உணவகத்தின் அறிவுறுத்தலின் பெயரிலேயே நான் இந்த உணவுகளை அருந்தியுள்ளேன்” என கூறுகிறார். இந்நிலையில் அதிகமான மன உளைச்சலுக்கும் நஷ்டத்திற்கு உள்ளான அந்த ஹோட்டல் நிறுவனம் காங்கிற்கு தங்களது உணவகத்திற்கு வருவதற்கு தடை விதித்துள்ளனர்.

Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now“பசி வந்தால் அளவு தெரியாது” என சொல்வது போல, பசியில் இருப்பவர்கள் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்பது தெரியாமல் இதுபோன்ற அறிவிப்புகளை உணவகங்கள் விடக்கூடாது என்பதற்கு இச்சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
- “மன்னராட்சியை சாடும் மக்களின் குரல் – தவெக பொதுக்குழுவில் விஜய்யின் உரை!”
- தெருவெல்லாம் ஆரஞ்சு பழங்கள்: ஸ்பெயினின் செவில் நகரத்தின் அற்புத மாற்றம்!
- வரலாற்றில் மிகப்பெரிய வங்கி கொள்ளை: பிரேசிலின் சூப்பர் திட்டம் எப்படி கின்னஸ் சாதனை படைத்தது?
- “எம்பிரான் ரிலீஸ் நெருங்கும் நிலையில்: மோகன்லால் மலையாள சினிமாவின் எதிர்காலம் குறித்து என்ன சொல்கிறார்?”
- இந்திய சாலைகளில் விரைவில் அறிமுகமாகப் போகும் புதிய நிஸான் எஸ்யூவி – ரெனோ டஸ்டரின் சகோதரன் என்று சொல்லலாமா?
இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பல கருத்துக்களை முன்வைத்து வாதாடி வருகின்றனர்.
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்.