
Brahmastra
இந்திய புராணங்களில் மிகப் பெரிய போர் கருவியாக சித்தரிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த பிரம்மாஸ்திரம் அணு குண்டை போன்றது என கூறலாம்.
அணுகுண்டு கண்டுபிடிப்பதற்கு முன்பே அதனை நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்களா? இந்த பிரம்மாஸ்திரத்தையும், அணுகுண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டும் ஒரே விதமான பயன்பாடுகளைக் கொண்டிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
நீங்கள் இந்த கட்டுரையை படிப்பதற்கு முன்பு உங்களுக்கு பிரம்மாஸ்திரம் என்றால் என்ன? என்பது முதலில் தெரிய வேண்டும். பிரம்மாஸ்திரம் என்பது இரண்டு பெயர்களை கொண்டுள்ளது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
அவை முறையே பிரம்மா மற்றும் அஸ்திரம் ஆகும். இந்த போர் கருவியை பிரம்மா உருவாக்கியதால் அவரது பெயர் முதலிலும், எந்த இடத்தில் இருந்தும் ஒரு இலக்கை குறி பார்த்து தாக்க கூடிய ஏவுகணையாக திகழ்வதால் அஸ்திரம் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த இரண்டு சொற்களை இணைத்தீர்கள் என்றால் பிரம்மாஸ்திரம் என்ற பெயர் கிடைக்கும்.
இப்போது உங்களுக்கு பிரம்மாஸ்திரம் என்றால் என்ன என்பது தெளிவாக புரிந்திருக்கும். மேலும் இந்த பிரம்மாஸ்திரத்தின் சக்தி எத்தகையது என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.
இதிகாசங்களில் கூறப்பட்டு இருக்கக்கூடிய இந்த பிரம்மாஸ்திரம் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய போர் கருவியாக திகழ்வதோடு, இந்த கருவியை பயன்படுத்தும் போது அதீத அளவு வெப்ப ஆற்றலை வெளியிடும் தன்மை கொண்டது என கூறி இருக்கிறார்கள்.
மேலும் இது படு வேகமாக ஒரு நெருப்பு பந்து போல் கொழுந்து விட்டு எரிவதோடு, அணைக்க முடியாத தீப்பிழம்புகளாக இருக்கும். இதனை எந்தப் பகுதியில் செலுத்தினாலும், அங்கு இருக்கக்கூடிய அனைத்து உயிர்களையும் பஸ்பம் செய்யக்கூடிய அளவு சக்தி கொண்டது.

பெரிய மலைகள் இருக்கக்கூடிய பகுதிகளில் இதை ஏவும் போது மலைகளையே அசைத்து விடக் கூடிய தன்மை கொண்ட இந்த அஸ்திரமானது, ஏவப்படக்கூடிய பகுதியில் 12 பிரம்ம ஆண்டுகள் வரை மழை பெய்யாது என்று கூறி இருக்கிறார்கள். இங்கு 12 பிரம்ம ஆண்டுகள் என்பது 37.32 டிரில்லியன் மனித ஆண்டுகளை குறிக்கிறது.
மேலும் புராணங்களில் இந்த அஸ்திரத்தை பற்றி கூறும் போது இதை ஒரு அபாயகரமான அஸ்திரம் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் இந்த அஸ்திரத்தால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களின், உடலில் இருக்கும் நகம் மற்றும் முடி கட்டாயம் இருக்காது எனக் கூறியிருக்கிறார்கள்.
சூரியனைப் போல் பல மடங்கு பிரகாசத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த நெருப்பு பிளம்பானது தாவரங்கள் மற்றும் விலங்குகளை வெள்ளை நிறமாக மாற்றி கொல்லும் தன்மை கொண்டது.
மேலும் இந்த பிரம்மாஸ்திரத்திற்கு ஏழேழு உலகத்தையும் அளிக்கின்ற சக்தி கொண்டதினால் தான் இதனை பயன்படுத்த விடாமல் பல காலகட்டங்களில் கடவுளாக அவதாரம் எடுத்தவர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள்.

இதனோடு நாம் தற்போது கண்டுபிடித்திருக்கும் நியூக்ளியர் குண்டுகள் எல்லாம் பிரம்மாஸ்திரத்தின் முன்பு தூசி போல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இந்த அஸ்திரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இந்த அஸ்திரத்தை பற்றிய முழு விவரமும் பகவான் கண்ணனுக்கு நன்கு தெரியும். அதுமட்டுமல்லாமல் வேறு சில வீரர்களுக்கும் இது பற்றிய ரகசியங்கள் நன்றாக தெரியும்.
உலகில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் பிரம்மாஸ்திரத்தை ஒரு முறை மட்டுமே ஏவ முடியும். ஆனால் நாம் அனைவரும் அறிவியலின் கண்டுபிடிப்பான அணுகுண்டு பற்றி பெருமிதம் கொண்டிருந்தாலும், அதற்கு முன்னரே அதாவது புராண காலத்திலே அவற்றை நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அது மட்டுமா? அத்தகைய அஸ்திரங்களை நடுநிலையாக்கக்கூடிய தன்மையை, அவர்கள் அறிந்தவர்கள் என்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
புராணங்களில் குறிப்பிட்டபடி இந்த அஸ்திரத்தை ஏவினால் நீர் நிலைகளில் நீர் இல்லாமல் வறண்டு போகும் என்ற கூற்றானது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டுவின் மூலம் நமக்கு நன்கு புலனானது.
இப்போது கூறுங்கள் தொழில்நுட்பம், விஞ்ஞானம் வளர்ந்து இருக்கக்கூடிய இந்த காலத்தில் நாம் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகள், அணு குண்டுகள், உயிர் ஆயுதங்கள் அனைத்துமே அன்று பயன்பாட்டில் இருந்தது என்பது அதிர்ச்சி கலந்த வியப்பை தருகிறது.