
Achievement
இந்த வாழ்க்கையில் மனிதப் பிறப்பை எடுத்திருக்கும் அனைவரும் நாம் பிறப்பது ஒரு முறை தான், அந்த பிறப்பில் நம்மை நாம் உயர்த்திக் கொள்ள என்ன வழி செய்யலாம் என்பதை பற்றி எண்ணம் ஏற்படும் போது உங்களுக்கு அபரிமிதமான மன ஆற்றல் இருக்க வேண்டும்.
மன ஆற்றல் இருந்தால் மட்டும் தான் உங்களால் அளப்பரிய சாதனைகளை செய்ய முடியும். எனவே உங்கள் மன ஆற்றலை நீங்கள் அதிகரிக்க உங்களை முதலில் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மனப்பக்குவத்தின் மூலம் உங்கள் மன ஆற்றல் உயர்த்தி பேசும் போது மிகவும் சந்தோஷம் ஏற்படும். குறைத்துப் பேசும்போது கவலை ஏற்படும். எனினும் இவை இரண்டை பற்றி நீங்கள் எண்ணாமல் உங்கள் மனதை தளர விடாமல், எப்போதும் ஒரே போல் சீராக நின்றால் சிக்கல் இல்லை.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
உங்கள் கடமையை நிறைவேற்ற நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்களது வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். இது கட்டாயம் உங்களது மன பக்குவத்தை அதிகரிக்க கூடிய காரணியாக இருக்கும். மேலும் உங்களது மகிழ்ச்சியை வளர்க்கக்கூடிய கலையாக மாறும்.
உங்கள் வாழ்கின்ற வாழ்க்கையை பாரமாக நினைத்தால் உங்களது கனவுகளை நிஜமாக்குவது கடினம். எனவே எதையும் சந்தோஷமாக எடுத்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் உள்ள கனவை நீங்கள் விரைவில் நிஜத்தில் கொண்டு வருவீர்கள்.
இருளில் தான் ஒளிக்கற்றை அதிகமாக தனது பிரகாசத்தை வெளிப்படுத்தும். அதுபோல சங்கடங்களில் சிக்கி தவிக்கும் போது தான் பலவிதமான பாடங்களை அதன் மூலம் கற்றுக் கொள்ளலாம்.

வாழ்க்கை பாதையில் சீரான முறையில் பயணத்தை மேற்கொள்ள நீங்கள் உங்கள் மன ஆற்றலை அதிகரிக்க கூடிய பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
எது சரி என்று உங்கள் இதயம் சொல்கிறதோ.. அதை செய்யுங்கள். நாம் எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும், இந்த உலகம் நம் மீது விமர்சனங்களையும் செய்யும் போதும்.. அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலை கொள்ளாமல், உங்கள் பாதையில் நடையிடுங்கள்.
எப்போதும் பணிவோடு, எல்லா காரியங்களையும் நீங்கள் செயல்படுத்தும் போது வாய்ப்புகள் உங்களுக்கு எளிதில் வந்து சேரும். அப்படி வாய்ப்புகள் உங்களுக்கு வராவிட்டாலும், அந்த வாய்ப்புகளை உருவாக்க கூடிய வகையில் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் இப்படி செய்வதால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி இலக்குகளை எளிதில் அடைவதோடு, மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் நீங்கள் திகழலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இதைப் புரிந்து கொண்டால் கட்டாயம் வெற்றி இலக்கை நோக்கி செல்கின்ற முக்கிய நபராக நீங்கள் இருப்பீர்கள். உங்களது பெயரும் நாளைய வரலாற்றில் பேசப்படும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
Superb sir.