• July 27, 2024

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகில்..! – வெற்றிக்கான வழிகள்…

 வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகில்..! – வெற்றிக்கான வழிகள்…

life

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை உலகில்.. என்ற சினிமா பாடல் வரிகளை சற்று கூர்ந்து கவனித்தால் இந்த வாழ்க்கையில் எண்ணற்ற வெற்றிகளை பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

 

மனித வாழ்க்கையின் எதார்த்தமானது எதைப் பெற்றாலும் சரி, எதை இழந்தாலும் சரி, அது இறுதியானது அல்ல.. என்பதை நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்களுக்குள் சொல்லிக் கொண்டால் ஏமாற்றம் என்பதே உங்களுக்கு ஏற்படாது.

life
life

இடி, இடித்தவுடன் மழை வரும் என்று நீங்கள் நம்பும் போது நமக்கான வாய்ப்பு ஏன் ஏற்படாது. அதில் ஏன் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் உள்ளது, என்பதை நீங்கள் அலசி ஆராய்ந்து பாருங்கள். நம்பிக்கை இருக்கும் வரை வெற்றி உங்களைத் தொடர்ந்து வரும் என்பதை நீங்கள் தொடர்ந்து நம்புங்கள்.

 

நிம்மதியாக வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமே ஒழிய, அந்த நிம்மதியை பெற ஆசைகளை ஒழிக்க வேண்டும் என்பதை யார் கடைபிடிக்கிறார்கள். அத்துனைக்கும் ஆசைப்படு என்று ஒரு சாரார் கூறினாலும், வேண்டாத ஆசையை தவிர்த்து விடுவதின் மூலம் உங்களுக்கு நிம்மதி ஏற்படும் என்பதை ஏன் நீங்கள் புரிந்து கொள்வதில்லை.

 

தேவையில்லாத ஆசைகளை நீங்கள் தூர போட்டு விட்டுப் பாருங்கள். கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் நிம்மதி ஏற்பட்டு அனைத்தும் உங்கள் வசப்படும் என்பதை எளிதில் புரிந்து கொள்வீர்கள்.

 

உன் வாழ்க்கையில் நீ உன்னுடைய எண்ணங்கள் என்ன என்பதை பற்றி யாருக்கும் எப்போதும் தெரியப்படுத்தக் கூடாது. அப்படி தெரியப்படுத்தினால் உன்னை வீழ்த்த நினைப்பவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். எனவே உன்னுடைய கனவுகளையும், சிந்தனைகளையும் நீ சீரும் சிறப்புமாக செய்து வெற்றி அடையும் சமயத்தில் அதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுங்கள்.

life
life

நீ கூறும் விஷயங்களை கேட்க எல்லோருக்கும் காதுகள் இருக்கும். ஆனால் சிலருக்கு மட்டும்தான் மனம் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனதில் இருக்கும் விஷயங்கள் கட்டாயம் உன்னை பாதிக்காது, அதுவே காது இருப்பவர்களிடம் செல்லும் விஷயங்கள் அனைத்தும் உனக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்லதைப் பற்றியே சிந்தியுங்கள். உங்கள் கடந்த கால வாழ்க்கை சற்று கடினமாக இருந்தாலும் எதிர்காலம் சிறப்பாக இருப்பதோடு உங்களை வெற்றியின் பாதைக்கு அது அழைக்கச் செல்லும்.

life
life

எண்ணம் அழகானளே வாழ்க்கையில், நீ பெரும் வெற்றிகளும் அதிகரிக்கும். உனக்கு எல்லாம் தெரிந்தாலும், எதுவும் தெரியாதது போல் இருந்து விடுங்கள். இந்த பண்பு தான் உங்கள் வாழ்க்கையில் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

ஒவ்வொரு மனிதனுக்கும் தவறு ஏற்படுவது இயல்பு தான். ஆனால் செய்கின்ற விஷயங்கள் எல்லாம் தவறாகவே வரும் என்று நினைக்காமல் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடைய நீங்கள் பாடுபட வேண்டும்.

 

உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை தூரமாக வைத்துவிட்டு இன்பத்தை இதயத்தில் முழுமையாக நிரப்புங்கள் நம்பிக்கையை மனதுக்குள் வைத்தால் வெற்றி உங்களைத் தேடி வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.