• April 16, 2024

“சூரரைப்போற்று” வெளியீட்டுத் தொகையில் இருந்து, சூர்யா 5 கோடி நிதியுதவி!

 “சூரரைப்போற்று” வெளியீட்டுத் தொகையில் இருந்து, சூர்யா 5 கோடி நிதியுதவி!

சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி எண்டர்டெயின்மென்ட்-ன் “சூரரைப்போற்று” திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகிறது. கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண காலத்தில், திரையரங்குகளில் இயங்க முடியாத நிலை உள்ளது.


இப்படிப்பட்ட சூழலில் ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டு தொகையிலிருந்து, தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க சூர்யா அறிவித்திருந்தார். பொதுமக்களுக்கும் திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் போராட்ட களத்தில் முன்னின்று பணியாற்றுபவர்களுக்கும், இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்து அளிக்கப்படும் என்று சூரியா தெரிவித்திருந்தார். அதை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார்.


முதல் கட்டமாக ஒன்றரை கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான “பெப்சி” ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை கட்சியின் தலைவர் ஆர் கே செல்வமணியிடம், 80 லட்ச ரூபாயும், பெப்சியின் அங்கமான இயக்குனர் சங்கத்தின் செயலாளர் இயக்குனர் ஆர் பி உதயகுமாரிடம் 20 லட்சம் பிரித்து வழங்கப்பட்டது.



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பாளர்கள் சங்க தனி அலுவலரிடம் வழங்குகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
நடிகர் சங்கத்தலைவர் பெற்றுக்கொண்டு அதை அவர் நடிகர் சங்கத்தை அலுவலரிடம் வழங்குவார். இந்த தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா தலைமையேற்க நடிகர் சிவகுமார் முன்னிலை வகித்தார்.

சூர்யா பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், சங்க நிர்வாகிகள் சுரேஷ் காமாட்சி லலித்குமார் பங்கேற்றார்கள்.
மீதமுள்ள தொகையில் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்கள்.