Skip to content
May 9, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சிறப்பு கட்டுரை
  • குமரிக்கண்டத்தில் என்ன மொழி பேசியிருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் இதோ!
  • சிறப்பு கட்டுரை

குமரிக்கண்டத்தில் என்ன மொழி பேசியிருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் இதோ!

Deepan January 28, 2022 1 min read
kumari-kandam-tamil
341

திருக்குறளில் திருவள்ளுவர், தென்புலத்தார் என்று கூறியிருப்பதை, யார் தெரியுமா?


எந்த ஒரு இடம், எந்த ஒரு கண்டம் இருக்கிறது? என்று நாம் போராடிக் கொண்டு இருக்கிறோமோ, அது அழிஞ்சு போனதற்கான ஆதாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, அதில் இருந்த இனம் நம் தமிழ் இனம் என்பதை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், நீங்கள் தினமும் படிக்கும் அந்த திருக்குறளில், நீங்கள் தினமும் கேட்கும் அந்த திருக்குறளில் கூட, குமரிக்கண்டத்தின் ஒரு வெளிச்சம் அதில் பதிந்திருக்கிறது.

திருவள்ளுவர் கூட, இறந்த முன்னோரை தென்புலத்தார் என்று கூறி, வணங்கத்தக்கவர் வரிசையில் இறைவனுக்கு அடுத்து வைக்கிறார். அது ஏன் தெரியுமா?



குமரிக்கண்டத்தில் வாழ்ந்த, பல நூறாயிரம் மக்கள் கணநேரத்தில் அந்த காலத்தில் உருவான, கடல் ஊழி என்று சொல்லப்படும், சுனாமியில் இறந்து போயிருக்கிறார்கள். ஒரே நேரத்தில், தெற்கு திசையில் ஏற்பட்ட அந்த மிகப்பெரிய கடல்கோளினால் குமரிக்கண்டமும், குமரிக்கண்டத்தின் சில பகுதிகளும், அதில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து போனதால், அவர்களை போற்றும் வகையில், அவர்களை தினமும் வழிபடும் வகையில், அவர்களை இறைவனுக்கு அடுத்த வரிசையில் வைத்து, தென்புலத்தார் என்று கூப்பிடுகிறார். இது மட்டுமல்ல, தெற்கு திசையை கூற்றவன் திசை என்றும் கூறுகிறார்கள்.

குமரிக்கண்டத்தில் பிறந்த நம் தமிழ் மொழி

அங்கு அடிக்கடி ஏற்படும், கடல் கோளினால் அங்கிருந்து புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் எங்கெல்லாம் சென்றார்கள்? எந்த நாடுகளுக்கெல்லாம், நம் தமிழ் மொழிய பரப்பினார்கள்? அந்த நாடுகளில் எல்லாம் நம் தமிழ் மொழி, இப்பொழுது எப்படி இருக்கிறது? என்றும், உலகில் உள்ள எம்மொழிக்கும், நம் தமிழ் மொழிதான், தாய்மொழி என்பதற்குமான, பல சான்றுகளோடு, இந்த கட்டுரையில் பார்ப்போம்.

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.


Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

இந்திய துணைக் கண்டத்தின், இன்றைய தெற்கு முனைக்கு அப்பால் விரிந்து பரந்திருக்கும் கடல் பரப்பில்தான் நம் மூதாதையர்களின் இனம் நம் முன்னோர்களின் இடம் குமரிக்கண்டம் இருந்தது.


குமரிக்கண்டத்தில் வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள்தான் என்பதற்கான பல ஆதாரங்களை நான் சேகரித்து கொண்டிருக்கும் பொழுது, திரு. சாத்தூர் சேகரன் அவர்களின் பதிவும் அவர் எழுதிய பல புத்தகங்கள் வழியாக பல தகவல்களை திரட்டி, இந்த பதிவை வழங்குகிறேன்.

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள், தமிழ் மொழியைத்தான் பேசினார்கள் என்பதற்கும், பல தமிழ் சொற்களை அறிவியல் விதியுடன் எடுத்து தெளிவாக காட்டியவர் சாத்தூர் சேகரன்.


குமரிக்கண்ட மக்கள் அங்கிருந்து வெளியேறிய காலம். முதல் கடல்கோள் நிகழ்ந்த காலம்தான். இத்தகைய கடல்கோள்கள், அதாவது சுனாமிகள், அப்போதைய குமரிக்கண்டத்தில் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்திருக்கிறது. முதல் கடல்கோள் நடைபெற்ற காலம், ஏறத்தாழ ஐம்பத்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறது ஒரு ஆராய்ச்சி.

அந்த காலகட்டத்தில், குமரிக்கண்டத்தில் இருந்து அவ்வப்பொழுது வெளியேறிய தமிழ் மக்கள் Australia கண்டத்திலும், America கண்டத்திலும், Africa கண்டத்திலும் குடியேறி இருக்கிறார்கள். அவர்கள் Australia பழங்குடி மக்களும், America செவ்விந்திய மக்களும், Africa பழங்குடியினரும் ஆவார்கள்.

அவர்கள் பேசுகின்ற மொழிகளிலும், தமிழ் சொற்கள் ஏராளமாக காணப்படுகின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்கள் பலர், நிலத்தின் வழியாக வட இந்தியா முதலிய பல இடங்களில், குடியேறி இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கு, வடகிழக்கே இருக்கும் தாய்லாந்து, Indonesia, Malaysia, சீனா முதலிய நாடுகளிலும், குடியேறியிருக்கிறார்கள்.


இந்தியாவிற்கு, வடக்கிலும், வடமேற்கில் உள்ள நாடுகளிலும், மத்திய ஆசிய முதலிய நாடுகளிலும், குடியேறி இருக்கிறார்கள். இப்படி இவர்கள் குடியேறிய நிகழ்ச்சி, இன்றிலிருந்து இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஏழாயிரம் ஆண்டு வரையில், நடைபெற்று இருக்கலாம். இவர்கள் பேசுகின்ற மொழி, குமரிக்கண்ட தமிழ் மொழியிலிருந்து, சிறிது வேறுபட்டு இருப்பதை காண முடிகிறது.

இவ்வாறு பல இடங்களில் குடியேறிய நம் தமிழ் மக்கள், தங்கள் தாய் மொழியுடன் தங்கள் தமிழ் மொழியுடன் அவர்களின் மொழியும் சேர்த்து பேச வேண்டிய சூழலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதனால்தான், குமரிக்க தமிழ் சொற்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.


பழங்கால தமிழர்கள், நிலவை உவா என்றும், உவப்பு என்றும் அழைத்து வந்தனர் ஏறத்தாழ, ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குமரிக்கண்ட தமிழ் மக்கள். அவர்கள் இன்றும் நிலவு என்ற தமிழ் சொல்லையும், மாதம் என்ற தமிழ் சொல்லையும், குறிப்பிடுவதற்காக, உவா என்ற பழந்தமிழ் சொல்லைத்தான் வழங்கி வருகிறார்கள். இந்த சொல்லை, இன்று மேற்கு ஆசிய பகுதிகளிலும், பிற இடங்களிலும் உ என்ற எழுத்து மறைந்து, வாவு என்று தெரிந்திருக்கிறது.

இப்பொழுது, வழக்கில் இருக்கும் தமிழில் கண் என்ற சொல்லுக்கு மட்டும், முப்பதிற்கும் மேற்பட்ட சொற்கள் இருக்கின்றன. குலம் என்பது, கண்ணைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல். இதை மொழி ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தெளிவாகக் கூற வேண்டும் என்றால், புலன் விசாரணை என்றால் கண்ணால் பார்த்து அதன் மூலம் விசாரணை செய்யப்படுவது. இதைத்தான், புலன் விசாரணை என்பார்கள். Australia பழங்குடியினர், இன்றும் கண் என்பதற்கு புலம் என்ற சொல்லைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.



இவ்வாற ஏறத்தாழ ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் குமரிக்கண்டத்தை விட்டு America-ல் குடியேறிய மக்களை, அந்த நாட்டு பழங்குடி மக்கள் என்றும், அவர்கள் செவ்விந்தியர்கள் என்றும் அழைத்து வருகிறார்கள்.

செவ்விந்தியர்கள், அம்மா என்ற சொல்லை அன்னை என்று அழைக்கிறார்கள். ஆனால் நாமோ அன்னையை, ஒரு இலக்கிய சொல்லாக மாற்றி, அதை நாடகங்களிலும், காவியங்களிலும், கதைகளில் மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். அந்த காலகட்டத்தில், Africaவில் குடியேறிய, குமரிக்கண்ட தமிழர்கள், இன்றும் அதி அற்புதமான தமிழ் பயன்படுத்தி வருகிறார்கள்.


தானி என்ற ஒரு தெலுங்குச் சொல், தமிழில் ஒரு பழமையான சொல். சீன மொழியில், இறைச்சி என்ற தமிழ்ச் சொல் றச்சி என்றும், இரங்கல் என்ற தமிழ்ச் சொல் ரங் என்றும், பூ என்ற தமிழ் சொல் ஹூ என்றும் வழங்கி வருகின்றனர். இதே போல், இன்னும் பல தமிழ்ச் சொற்கள் கன்னடத்தில் சிதைந்து ஒலிக்கின்றன.

ப என்ற தமிழ் எழுத்தை, ஹ என்று கன்னட மொழியில் வழங்கி வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, பத்து என்பது “ஹத்து” என்றும், பல் என்ற தமிழ் சொல் “ஹல்” என்றும் கன்னட மொழியில் இன்றும் வழக்கில் இருக்கிறது.



கண் என்ற தமிழ்ச் சொல் கண் என்றும், கான் என்றும் சீன மொழியில் இன்றும் வழக்கத்தில் இருக்கின்றன. சீன மொழியில், ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் அங்கு சிதைந்து உச்சரிக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட தூய தமிழ் சொற்கள் சீன மொழியில் இன்றும் வழக்கில் உள்ளன. இந்த அனைத்து தூய தமிழ் மொழியையும், சீன மொழியிலிருந்து நீக்கிவிட்டால் அந்த மொழி இயங்காது என்பதே உண்மை.

தமிழில் குதிரையை மா என்று சொல்வோம். தாய்லாந்து மொழியிலும், சீன மொழியிலும், குதிரையை மா என்று சொல்கிறார்கள். மேற்கு ஆசிய மக்களுக்கு, எழுதுவதற்கு பனை ஓலை கிடைக்கவில்லை. அதனால், எளிதாகவும், மலிவாகவும் கிடைத்த ஈரக்களி மண்ணில் எழுதி இருக்கிறார்கள்.

ஈரக்களி மண்ணை ஏடு போல செய்து அதில் நீண்ட மூங்கில் களி அல்லது மரக்குச்சி கொண்டு எழுதி இருக்கிறார்கள். தன்னுடைய கைத்தடம், ஈரக்களி மண்ணில் படாமல் இருப்பதற்காக, இடமிருந்து வலமாக எழுதுவதைக் காட்டிலும், வலமிருந்து இடமாக எழுதுவது அவர்களுக்கு சுலபமாக இருந்திருக்கிறது. இதனால், பல தமிழ் எழுத்துக்கள் மறைந்து பல புதிய எழுத்துக்களை உருவாக்கியது.

நம்முடைய உயிரெழுத்துக்கள் போல் இல்லாமல், அவர்கள் எழுதும்போது உயிர் எழுத்திற்கு மேலேயும் கீழேயும் பல குறியீட்டை இட்டு எழுதியிருக்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களையும் உள்ளடக்கியது தான், பிம்ப விதி என்று சொல்வார்கள். அதாவது law of mirror image. பிறழ்ச்சி விதி என்பார்கள். உலக அறிஞர்கள் மொழியியலில், இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு.


வ் + ஆ = வா. வட இந்தியர்கள், பல இடமாக எழுதியதால், ஆவ் எழுதி இருக்கிறார்கள். வட இந்திய மொழிகளில், பலவற்றில் ஆவ், ஆவோ, என்றால் வா என்பதுதான் பொருள். இதே போல், அரபி மொழியில், அதற்கு முன்பாக, ஜ் என்ற வார்த்தையை சேர்த்து ஜ்-ஆவ் என்று அழைக்கிறார்கள்.

ம் + ஆ = மா, என்றால் மாம்பழம் என்று, நமக்குத் தெரியும்.
வட இந்தியர்கள் ஆ + ம் = ஆம் என்கிறார்கள்.


சமஸ்கிருத மொழியில் கூட, ஆம்ப்ரா என்றால், மாம்பழம் என்று பொருள்.


பண்டையத் தமிழில், அம்பு என்பதற்கு தண்ணீர் என்று பொருள். அதே போல், பழைய இலக்கிய அரபி மொழியில், அம்பு என்ற சொல், பிற புரட்சி விதிப்படி, மா என்று மாறி, அதற்கு அரபி மொழியில் தண்ணீர் என்று பொருள்.

அரேபிய பேச்சு மொழியில் கூட, தண்ணீர் என்பதை, மை அல்லது மொய் என்று பிரித்து ஒலிக்கிறார்கள்.

அவ்வளவு ஏன்?


அல்ல என்ற தமிழ்ச்சொல், அல் என்று குறுகி, பிறர்ச்சி விதிப்படி அரபி மொழியில், ல என்று மாறி, அது இல்லை என்ற பொருளையே தருகிறது. லாலா என்றால், அரபி மொழியில் “இல்லை இல்லை” என்று பொருள்.

அதே போல், தமிழில் பெண்களை குறிப்பிடுவதற்கு, பெண்டு என்ற பயன்படுத்தி இருக்கிறோம். இது குமரிக்கண்ட காலத்திலிருந்து வழங்கி வரும் ஒரு தமிழ்ச்சொல். பெண்டு என்பது அரபி மொழியில், பின்ட் என்று திரிந்து ஒலிக்கிறது.

அதே போல், எழில் என்ற தமிழ்ச் சொல், அரபி மொழியில், ஜமீல் என்று வழங்குகிறது. எழிலான பெண்டு என்ற தமிழ்ச் சொல், பின்ட் ஜமீலா என்ற அரபி மொழியில் திரிந்து போகிறது.

இதைத் தவிர, ஏன்டா, ஏண்டு, இன்று நாம் என்று அழைக்கிறோமே, இதைக் கூட, அரபி மொழியில், அந்தா, அந்தி என்று கூறுகிறார்கள்.

நம் தமிழின் வசவுச் சொல்லைக் கூட, உலக மொழிகள் இலக்கிய சொல்லாக வைத்திருக்கின்றன. ஏனென்றால், உலக மொழி இலக்கணங்கள் எல்லாம், தமிழில் இருந்து பெறப்பட்டவைதான்.


இப்படிப்பட்ட பல நூறு செய்திகள், பல ஆதாரங்கள் ஒவ்வொன்றாக குமரிக்கண்டத்தில் இருந்த தமிழுக்கும், அங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய, குமரிக்கண்ட தமிழர்களுக்கும், இருக்கின்ற சான்றுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்து போகின்றன.

ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், குமரிக்கண்டத்தில் இருந்து தமிழர்கள் மட்டுமல்ல, தம் தாய்மொழி தமிழையும் சேர்த்துக்கொண்டு பல நாடுகள் சென்று, பல கண்டங்கள் சென்று, அங்கிருக்கும் மக்களோடு பழகி, தமிழ் மொழியை அவர்கள் மொழிகளோடு சேர்த்து அதை வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த உலகில் நீங்கள் எங்கு சென்றாலும், எந்த நாட்டிற்கு சென்றாலும், எந்த மொழியாக இருந்தாலும், அவர்களுடைய ஒரு சொல்லில் ஆவது நம் தமிழ் மொழி இருக்கும் என்பது நமக்கு பெருமையே.


என்ன தவம் செய்தோமோ, நாம் தமிழனாய் பிறப்பதற்காக. அதுவும், நம் தமிழ்நாட்டில் பிறப்பதற்காக.

இந்த கட்டுரையை, வீடியோவாக பார்க்க.


Tags: Kumari Kandam tamil குமரிக்கண்டம்

Continue Reading

Previous: இந்த ஒரு நாளைக்காக பல ஆண்டுகாலம் போராடிய தமிழர்கள். எதற்கு தெரியுமா?
Next: Hiphop Tamizha Adhi Photos

Related Stories

India Pakistan war scare
1 min read
  • சிறப்பு கட்டுரை

இந்தியா – பாகிஸ்தான்: பகைமையின் ஏழு தசாப்தங்கள்

Krishna May 8, 2025
san
1 min read
  • சிறப்பு கட்டுரை

கடலை கடந்த கதை: உலகையே வியக்க வைத்த சங்க கால பொருளாதாரம்!

Krishna May 8, 2025
t
1 min read
  • சிறப்பு கட்டுரை

ரவீந்திரநாத் தாகூர் – இந்தியாவின் முதல் நோபல் பரிசாளரின் அசாதாரண வாழ்க்கைப் பயணம் என்ன?

Vishnu May 7, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024
sunday
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

உலகின் மதங்களில் வார இறுதி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது?

Vishnu November 18, 2024
Idi-amin-thum
1 min read
  • மர்மங்கள்

உகாண்டாவின் கொடூர ஆட்சியாளர் இடி அமீன்: 5 மனைவிகள், 40 குழந்தைகள் – அவரது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன?

Vishnu October 28, 2024
இந்தியா – பாகிஸ்தான்: பகைமையின் ஏழு தசாப்தங்கள் India Pakistan war scare 1

இந்தியா – பாகிஸ்தான்: பகைமையின் ஏழு தசாப்தங்கள்

May 8, 2025
கடலை கடந்த கதை: உலகையே வியக்க வைத்த சங்க கால பொருளாதாரம்! san 2

கடலை கடந்த கதை: உலகையே வியக்க வைத்த சங்க கால பொருளாதாரம்!

May 8, 2025
ரவீந்திரநாத் தாகூர் – இந்தியாவின் முதல் நோபல் பரிசாளரின் அசாதாரண வாழ்க்கைப் பயணம் என்ன? t 3

ரவீந்திரநாத் தாகூர் – இந்தியாவின் முதல் நோபல் பரிசாளரின் அசாதாரண வாழ்க்கைப் பயணம் என்ன?

May 7, 2025
தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னர் கவுண்டமணியின் துணைவியார் மறைவு – காமெடி கிங்கின் வாழ்க்கையில் சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வு! kow 4

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னர் கவுண்டமணியின் துணைவியார் மறைவு – காமெடி கிங்கின் வாழ்க்கையில் சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வு!

May 5, 2025
கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்: உலகை மாற்றிய சமத்துவக் கொள்கையின் தந்தை karl 5

கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்: உலகை மாற்றிய சமத்துவக் கொள்கையின் தந்தை

May 5, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

India Pakistan war scare
1 min read
  • சிறப்பு கட்டுரை

இந்தியா – பாகிஸ்தான்: பகைமையின் ஏழு தசாப்தங்கள்

Krishna May 8, 2025
san
1 min read
  • சிறப்பு கட்டுரை

கடலை கடந்த கதை: உலகையே வியக்க வைத்த சங்க கால பொருளாதாரம்!

Krishna May 8, 2025
t
1 min read
  • சிறப்பு கட்டுரை

ரவீந்திரநாத் தாகூர் – இந்தியாவின் முதல் நோபல் பரிசாளரின் அசாதாரண வாழ்க்கைப் பயணம் என்ன?

Vishnu May 7, 2025
kow
1 min read
  • Cinema News
  • Viral News

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னர் கவுண்டமணியின் துணைவியார் மறைவு – காமெடி கிங்கின் வாழ்க்கையில் சோகத்தை ஏற்படுத்திய நிகழ்வு!

Vishnu May 5, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version