Skip to content
January 27, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • வெற்றி உனதே
  • கவலையோடு இருப்பவர்கள் இதை படிக்கவும்!
  • வெற்றி உனதே

கவலையோடு இருப்பவர்கள் இதை படிக்கவும்!

Deepan November 29, 2020 1 minute read
kavalai kavithai
2,857

“காலம் முழுவதும் கவலை மட்டுமே என்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறது. என்னை சுற்றிலும் கவலை மட்டுமே இருக்கிறது. கவலையோடு கவலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று எண்ணுபவர்களுக்கு, ஒரு மாற்றத்தை தந்து, அந்த கவலையை காணாமல் செய்ய வைக்கும் இந்த பதிவு..!

எவன் ஒருவன் நன்றாக வாழ வழி இருந்தும், வாழாமல் வறுமையில் வாடுகின்றானோ! அவனைப் பார்த்து மட்டும் சிரித்து விடாதீர்கள். ஏனென்றால் அவன்தான் தன் கனவுக்கான பாதையில் தள்ளாடித் தள்ளாடி, பின் நடந்து நடந்து, இப்பொழுது ஓட முயற்சித்துக் கொண்டிருக்கிறவன்.

தன் கனவுக்கான பாதையில் ஓடிக் கொண்டிருப்பவனைத்தான் வறுமை காதலித்துக் கொண்டிருக்கும். எனவே திறமையிருந்தும் வறுமையில் இருப்பவனை கண்டு, எக்காலத்திலும், எந்நேரத்திலும், அவனை பார்த்து நகைத்து விடாதீர்கள்.

அவனுடைய முயற்சிக்கான ஒரு படிக்கட்டாக நீங்கள் இருக்க முயற்சியுங்கள். ஏனென்றால் அவன் தான், தன் கனவை தேடி, வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒருவன். அந்த ஒருவன் நீங்கலாக கூட இருக்கலாம்.! நம்மை மட்டும் ஏன் வறுமை வாட்டுகிறது. நமக்கு மட்டும் ஏன் எதுவும் அமைய மறுக்கிறது என்று நினைத்து நினைத்து காலத்தை கரைய வைத்து கொண்டிருப்பவர்களாக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கும் தான்.

வாழ்க்கை என்னும் காட்டாற்று வெள்ளத்தில் கவலைகள் ஒரு சிறு அணைகள். அந்த அணையில் ஓடி வரும் வெள்ளமானது ஒரு சிறு காலம் தங்கலாம், ஆனால் நிரந்தரமாக அங்கே நின்று விடாது. அது போல் தான் நம் வாழ்க்கையும். எவன் ஒருவன் தன் வாழ்நாளில் கவலைகளை மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறானோ, அவனுடைய பிற்பாதியில் அவனுடைய எதிர்காலத்தில் அவன் ஒரு நிரந்தரமான தவிர்க்கமுடியாத, யாராலும் தொட முடியாத வெற்றியை தொட போகிறான் என்று அர்த்தம். ஒரு காரியத்திற்காக காத்திருப்பது வேறு; கவலை கொள்வது வேறு. இங்கு நம்மில் பல பேர் காத்துக் கொண்டிருப்பதை தான் கவலை என்று நினைக்கிறார்கள்.

ஒரு ஒரு வயதினருக்கும் ஒரு ஒரு கவலை இருக்கும். எந்த வயதினராக இருந்தாலும் அதிகபட்சமாக கவலை ஒருவருடன் 14 நாட்களுக்கும் மேலாக இருப்பதில்லை. அதற்கு மேலும் இருந்தால் அது கவலை இல்லை பிரச்சனை. நம்மை ஆட்கொண்டுள்ள கவலை நம்மிடமே இருந்துவிடும் நம்மிடமே தங்கிவிடும் என்று எதிர்மறையாக எண்ணாதீர்கள். ஏனென்றால் யாரிடமும் கவலை நிரந்தரமாக தங்குவதில்லை. உங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தான் கவலை உங்களிடம் வருகிறது.

நேர்மறை எண்ணங்கள்

‘உங்கள் தலைக்கு மேல் பறவைகள் பறந்து செல்வதை நீங்கள் தடுக்க முடியாது. ஆனால், அவை உங்கள் தலையில் கூடு கட்டாதபடி உங்களால் தடுக்க முடியும்’. வெகு நேர்த்தியான இந்த இந்த சீனத்து பழமொழி கவலைக்கும் பொருந்தும். எதையும் நேர்மறை எண்ணத்தோடு பார்க்கும் போது, கவலை நம்மிடம் நெருங்குவதில்லை. காகம் என்மேல் காலைக்கடன் செய்துவிட்டதே என்று புலம்பாமல், நல்ல வேலை எருமைக்கு பறக்கும் சக்தி இறைவன் தரவில்லை என்று எண்ணங்கள். 

See also  சத்தமின்றி சாதனைகள் செய்வோம்!

டாக்டர் ஜார்ஜ் ஸ்டீவன்சன் என்பவர் ஒரு ( How To Deal with your Tension) புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அதில் அவர் , ‘உங்கள் கவலைக்கு எது காரணமோ, அதை வெளியில் சொல்லுங்கள். உள்ளுக்குள்ளாகவே வைத்து புழுங்க வேண்டாம். ஒரு விஷயத்தை ஆராய்ந்து அறியு‍ம் திறன்கொண்ட ஒருவரிடம் அதுபற்றி பேசுங்கள். பேச்சில் வெளிப்படுத்துகிறபோது, பிரச்னையின் கனம் பாதியாய் குறைந்துவிடும். கவலையை போக்கிக்கொள்ளும் வழிமுறையும் கண் கூடாக உங்களுக்கே தெரியவரும்.

உங்களைவிட அறிவிலும், திறமையிலும், அனுபவத்திலும் மேம்பட்டவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுடன் உங்கள் பிரச்னை குறித்து விவாதிக்கிறபோது ‘அட, இதற்குதானா இத்தனை கவலைப்பட்டோம்’ என்று எண்ணி மனம் இலேசாகிவிடும். நம் குணத்தை பாராட்ட இங்கு  இருப்பவர்களை விட, நம் குறைய சொல்ல ஆயிரம் பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள்சொன்ன கருத்தை பற்றிய கவலைபடுபவர்கள் தான் இன்று அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் நம்மை கடந்து செல்லும் மேகம் போன்றவர்கள். எனவே அவர்களின் கடினமாக கருத்தை உங்களுடனே வைத்துக்கொள்ளாதீர்கள்.

ஒரு டீ குடிக்கும் நேரம், ஒரு பாடம் கேட்டு முடிக்கும் நேரம் அல்லது கழிவறையில் காலைக்கடன் முடிக்கும் நேரம் வரை மட்டுமே அவர்களை பற்றியும், அவர்களின் கருத்தை பற்றியும் சிந்தித்தால் போதும். நம்மை நொறுங்கவைக்கும் வார்த்தைகளும், நபர்களின் கருத்தையும், நம்மிடம் நிரந்தரமாக இருக்கவைக்கவேண்டாம். அப்படி வைப்பதால் தான் கவலை உங்களிடம் குடிபுகுந்து விடுகிறது. ஒன்றை மட்டும் மனதில் பதியம்போட்டு கொள்ளுங்கள்.

நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் பயன்படுத்தும், ஆயுதம் உன் மனதை சிதைப்பது. நம் மனதால் நாம் தெளிவாக இருக்கும்வரை நம்மை, ஒருவராலும் வீழ்த்த முடியாது.!

பொதுவாக கவலை எப்போது வரும் தெரியுமா? 

நாம் விரும்பியது கிடைக்காதபோது, நாம் எதிர்பார்த்து நடக்காத போது, நம்முடைய வேலை, பணம் வெற்றி இவை நிலைக்காது என்கிற போது கவலை நம்மிடம் வருகிறது. மனவேதனை, மனஇறுக்கம், உளைச்சல், அச்சம் ஆகியவை மனம் சார்ந்த விதத்தில் மட்டுமல்ல, உடல் சார்ந்த விதத்திலும் விளைவை ஏற்படுத்த கூடியவை. கவலைகளில் இருந்து விடுபட விரும்புகிறவர், தமது வாழ்வில் நடந்தவைகளையும், தாம் இழந்தவைகளையும் முதலில் மறக்கவேண்டும். கெட்டவைகளுக்கு பதிலாக நல்லவைகளைபார்க்க வேண்டும்.  சிரமங்களுக்கு பதிலாக அதில் இருக்கும் வாய்ப்புகளை அறிந்து அவற்றை கற்றுக்கொள்ளவேண்டும்.

இழந்து போனதை பற்றி கவலை கொள்ளாமல், மிச்சம் இருப்பது என்ன? அதை வைத்து என்ன செய்யலாம் என எண்ணுவதே சாலச்சிறந்தது. எனக்கு நல்லது நடக்கவில்லை, கெட்டதுதான் நடந்தது என்று ஏன் கவலைப்படுகிறீர்கள்? கேட்டதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்லது நல்லவர்களுக்கு அமையும். எனவே எப்போதுவும் நல்லவர்களாகவே இருங்கள். 

See also  உங்கள் வெற்றிப் பாதையை வரையறுக்கும் அம்பேத்கரின் 10 அற்புத வார்த்தைகள்!

இதைவிட மிகமிக முக்கியமானது என்ன தெரியுமா? 

தகுதிக்கு மீறியவைகளில் ஆசைப்படுவதும், சாத்தியமற்றவைகளை அடைய முற்படுவதும் நமக்கு என்றும் கவலையை தவிர வேறு எதையும் கொண்டு வராது. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை வைத்துக்கொள்ள வேண்டும். எல்லை மீறினால் தொல்லைதான். ஒரு கனவு நிறைவேறாவிட்டால் என்ன, இன்னொரு கனவு காணுங்கள்!

இன்றைய மருத்துவ உலகம், உடல்சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில்வெற்றிகண்டுவிட்டது. ஆனால்,  மன உபாதைகளை குணப்படுத்துவதில் போதிய அளவு வெற்றி காணவில்லை. அச்சமும், கவலையுமே மன உபாதைகளுக்கு முக்கிய காரணிகள். அது இரண்டையும் துரத்திவிட்டாலே, இங்கு பலர் ஆரோக்கியமாக ஆனந்தமாக இருப்பார்கள். 

சேற்றுக்குள் சிக்கிக்கொண்ட வண்டிச்சக்கரம் போல்,  மீண்டும் மீண்டும் கவலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள். கவலையைவிட்டு வெளியே வாருங்கள். மனம் தெளிவாக இருக்கும் நேரத்தில் தீர்வு காணுங்கள். “மழை வந்தவுடன் நனைந்து விடுவோமே” என்ற கவலையில் பறவைகள் எல்லாம் தங்கள் கூடுகளை நோக்கி போகும்போது, கழுகுகள் மட்டும் மேகத்து மேலேயே சென்றுவிடுமாம். இதேபோல் தான் நாமும் பிரச்னையில் இருந்து வெளியே வெளியே வரவேண்டும்.  கவலையை நாம் வெல்லவேண்டும். இல்லையென்றால் கவலை நம்மை வென்றுவிடும்!

பணத்தை சேமித்து கூட பின்னாளில் செலவழிக்கலாம். ஆனால் ஒருபோதும் வாழ்க்கையை சேமித்து வைத்து, பின்னாளில் வாழ முடியாது, வாழ்க்கை வாழ்வதற்கே. இதில் கவலையை கொண்டுவந்து இந்த அழகான வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்.

உங்களை வெறுப்பவர்களை நினைத்து ஒருபோதும் கவலை கொள்ளவேண்டாம். ஏனென்றால், அவர்களுக்கு உங்கள் அன்பை பெற தகுதி இல்லை என நினைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை எப்போதும் இருட்டாகவே உள்ளது என நினைத்து கவலை கொள்ளவேண்டாம். இருளான நேரங்களில் தான் கனவுகள் பிறக்கும்..! என்னை பற்றி கவலை இங்கு கொள்ள யாருமில்லை. நான் ஏன் மற்றவங்களை பற்றி கவலைபடனும்..? என்று எண்ணுபவர்களும் இங்கு சிலர் உண்டு. உங்கள் கவலைகளை விளம்பரம் செய்து எந்த பயனுமில்லை. ஏனென்றால் அவற்றை யாரும் இங்கு வாங்க போவதில்லை.

யாரும் பேசவில்லை என ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள். அதற்கு பதிலாக உங்களை புரிந்து கொள்ள இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை என்று திமிரோடு இருங்கள்.கவலைகளை நிரந்தரமாக்கினால் நாம் நோயாளி. தற்காலிகமாக ஆக்கினால் நாம் புத்திசாலி. கவலையே இல்லாமல் வாழ்ந்தால் நாம் ஞானி..! இதில் எது நீங்கள் என முடிவு செய்துகொள்ளுங்கள். இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு. இப்படியே வாழ்க்கை இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு..!

இந்த உலகத்தில் கவலையே இல்லாதவர்கள் இருவர் தான். ஒருவன் கருவறையில்..! மற்றொருவன் கல்லறையில்..! ஆகா இனி எதற்கும், எப்போதும் , எங்கும் கவலை கொள்ளாதீர்கள். அப்படி உங்களுக்கு கவலை நெருங்கும் பட்சத்தில், இந்த பதிவை மீண்டும் படியுங்கள். உங்களின் நண்பர்கள் யாராவது கவலையோடு இருந்தால், அவர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள்..

See also  தன்னம்பிக்கையை தூண்டிவிடும் விவேகானந்தர்..!" - அற்புத வரிகள்.. ஒருமுறை படியுங்கள்..

இனி கவலை மறந்து, இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை காலம் முழுவதும் வாழுங்கள்.


21 நாட்களில் உங்கவலைகள் அதிகம் உள்ளவர்கள் இதை பாருங்கள்

Watch full video in YouTube and Don’t forget to Subscribe

Subscribe Now

About the Author

Deepan

Administrator

Script writer, Video Editor & Tamil Content Creator

Visit Website View All Posts
Tags: Self Motivation self motivation kavithaikal Tamil Motivation

Post navigation

Previous: தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் வைத்து வளர்க்கப்படும் யானைகளின் பெயர் பட்டியல்
Next: நதியோடு நேர்ததெம் தமிழ் பிறப்பு

Related Stories

fr
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

உங்கள் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்ற வேண்டுமா? உடலுக்கும் மனதுக்குமான இந்த 5 சூப்பர் டிப்ஸ் போதும்!

Vishnu July 28, 2025 0
gr
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

உங்கள் வாழ்க்கை ‘போர்’ அடிக்கிறதா? இந்த ‘பசுமைப் புரட்சி’ உங்கள் தலையெழுத்தையே மாற்றும்!

Vishnu July 28, 2025 0
rgnh
  • வெற்றி உனதே

தங்கக் கோப்பையில் தேநீர் வேண்டுமா? பேராசிரியரின் இந்த ஒரு பாடம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!

Vishnu July 10, 2025 0

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.