Skip to content
June 17, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • வெற்றி உனதே
  • கவலையோடு இருப்பவர்கள் இதை படிக்கவும்!
  • வெற்றி உனதே

கவலையோடு இருப்பவர்கள் இதை படிக்கவும்!

Deepan November 29, 2020 1 min read
kavalai kavithai
1,021

“காலம் முழுவதும் கவலை மட்டுமே என்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறது. என்னை சுற்றிலும் கவலை மட்டுமே இருக்கிறது. கவலையோடு கவலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று எண்ணுபவர்களுக்கு, ஒரு மாற்றத்தை தந்து, அந்த கவலையை காணாமல் செய்ய வைக்கும் இந்த பதிவு..!


எவன் ஒருவன் நன்றாக வாழ வழி இருந்தும், வாழாமல் வறுமையில் வாடுகின்றானோ! அவனைப் பார்த்து மட்டும் சிரித்து விடாதீர்கள். ஏனென்றால் அவன்தான் தன் கனவுக்கான பாதையில் தள்ளாடித் தள்ளாடி, பின் நடந்து நடந்து, இப்பொழுது ஓட முயற்சித்துக் கொண்டிருக்கிறவன்.

தன் கனவுக்கான பாதையில் ஓடிக் கொண்டிருப்பவனைத்தான் வறுமை காதலித்துக் கொண்டிருக்கும். எனவே திறமையிருந்தும் வறுமையில் இருப்பவனை கண்டு, எக்காலத்திலும், எந்நேரத்திலும், அவனை பார்த்து நகைத்து விடாதீர்கள்.

அவனுடைய முயற்சிக்கான ஒரு படிக்கட்டாக நீங்கள் இருக்க முயற்சியுங்கள். ஏனென்றால் அவன் தான், தன் கனவை தேடி, வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒருவன். அந்த ஒருவன் நீங்கலாக கூட இருக்கலாம்.! நம்மை மட்டும் ஏன் வறுமை வாட்டுகிறது. நமக்கு மட்டும் ஏன் எதுவும் அமைய மறுக்கிறது என்று நினைத்து நினைத்து காலத்தை கரைய வைத்து கொண்டிருப்பவர்களாக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கும் தான்.


வாழ்க்கை என்னும் காட்டாற்று வெள்ளத்தில் கவலைகள் ஒரு சிறு அணைகள். அந்த அணையில் ஓடி வரும் வெள்ளமானது ஒரு சிறு காலம் தங்கலாம், ஆனால் நிரந்தரமாக அங்கே நின்று விடாது. அது போல் தான் நம் வாழ்க்கையும். எவன் ஒருவன் தன் வாழ்நாளில் கவலைகளை மட்டுமே சந்தித்து கொண்டிருக்கிறானோ, அவனுடைய பிற்பாதியில் அவனுடைய எதிர்காலத்தில் அவன் ஒரு நிரந்தரமான தவிர்க்கமுடியாத, யாராலும் தொட முடியாத வெற்றியை தொட போகிறான் என்று அர்த்தம். ஒரு காரியத்திற்காக காத்திருப்பது வேறு; கவலை கொள்வது வேறு. இங்கு நம்மில் பல பேர் காத்துக் கொண்டிருப்பதை தான் கவலை என்று நினைக்கிறார்கள்.

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.

Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.


Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

ஒரு ஒரு வயதினருக்கும் ஒரு ஒரு கவலை இருக்கும். எந்த வயதினராக இருந்தாலும் அதிகபட்சமாக கவலை ஒருவருடன் 14 நாட்களுக்கும் மேலாக இருப்பதில்லை. அதற்கு மேலும் இருந்தால் அது கவலை இல்லை பிரச்சனை. நம்மை ஆட்கொண்டுள்ள கவலை நம்மிடமே இருந்துவிடும் நம்மிடமே தங்கிவிடும் என்று எதிர்மறையாக எண்ணாதீர்கள். ஏனென்றால் யாரிடமும் கவலை நிரந்தரமாக தங்குவதில்லை. உங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தான் கவலை உங்களிடம் வருகிறது.

நேர்மறை எண்ணங்கள்

‘உங்கள் தலைக்கு மேல் பறவைகள் பறந்து செல்வதை நீங்கள் தடுக்க முடியாது. ஆனால், அவை உங்கள் தலையில் கூடு கட்டாதபடி உங்களால் தடுக்க முடியும்’. வெகு நேர்த்தியான இந்த இந்த சீனத்து பழமொழி கவலைக்கும் பொருந்தும். எதையும் நேர்மறை எண்ணத்தோடு பார்க்கும் போது, கவலை நம்மிடம் நெருங்குவதில்லை. காகம் என்மேல் காலைக்கடன் செய்துவிட்டதே என்று புலம்பாமல், நல்ல வேலை எருமைக்கு பறக்கும் சக்தி இறைவன் தரவில்லை என்று எண்ணங்கள். 


டாக்டர் ஜார்ஜ் ஸ்டீவன்சன் என்பவர் ஒரு ( How To Deal with your Tension) புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அதில் அவர் , ‘உங்கள் கவலைக்கு எது காரணமோ, அதை வெளியில் சொல்லுங்கள். உள்ளுக்குள்ளாகவே வைத்து புழுங்க வேண்டாம். ஒரு விஷயத்தை ஆராய்ந்து அறியு‍ம் திறன்கொண்ட ஒருவரிடம் அதுபற்றி பேசுங்கள். பேச்சில் வெளிப்படுத்துகிறபோது, பிரச்னையின் கனம் பாதியாய் குறைந்துவிடும். கவலையை போக்கிக்கொள்ளும் வழிமுறையும் கண் கூடாக உங்களுக்கே தெரியவரும்.

உங்களைவிட அறிவிலும், திறமையிலும், அனுபவத்திலும் மேம்பட்டவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுடன் உங்கள் பிரச்னை குறித்து விவாதிக்கிறபோது ‘அட, இதற்குதானா இத்தனை கவலைப்பட்டோம்’ என்று எண்ணி மனம் இலேசாகிவிடும். நம் குணத்தை பாராட்ட இங்கு  இருப்பவர்களை விட, நம் குறைய சொல்ல ஆயிரம் பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள்சொன்ன கருத்தை பற்றிய கவலைபடுபவர்கள் தான் இன்று அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் நம்மை கடந்து செல்லும் மேகம் போன்றவர்கள். எனவே அவர்களின் கடினமாக கருத்தை உங்களுடனே வைத்துக்கொள்ளாதீர்கள்.


ஒரு டீ குடிக்கும் நேரம், ஒரு பாடம் கேட்டு முடிக்கும் நேரம் அல்லது கழிவறையில் காலைக்கடன் முடிக்கும் நேரம் வரை மட்டுமே அவர்களை பற்றியும், அவர்களின் கருத்தை பற்றியும் சிந்தித்தால் போதும். நம்மை நொறுங்கவைக்கும் வார்த்தைகளும், நபர்களின் கருத்தையும், நம்மிடம் நிரந்தரமாக இருக்கவைக்கவேண்டாம். அப்படி வைப்பதால் தான் கவலை உங்களிடம் குடிபுகுந்து விடுகிறது. ஒன்றை மட்டும் மனதில் பதியம்போட்டு கொள்ளுங்கள்.

நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் பயன்படுத்தும், ஆயுதம் உன் மனதை சிதைப்பது. நம் மனதால் நாம் தெளிவாக இருக்கும்வரை நம்மை, ஒருவராலும் வீழ்த்த முடியாது.!

பொதுவாக கவலை எப்போது வரும் தெரியுமா? 

நாம் விரும்பியது கிடைக்காதபோது, நாம் எதிர்பார்த்து நடக்காத போது, நம்முடைய வேலை, பணம் வெற்றி இவை நிலைக்காது என்கிற போது கவலை நம்மிடம் வருகிறது. மனவேதனை, மனஇறுக்கம், உளைச்சல், அச்சம் ஆகியவை மனம் சார்ந்த விதத்தில் மட்டுமல்ல, உடல் சார்ந்த விதத்திலும் விளைவை ஏற்படுத்த கூடியவை. கவலைகளில் இருந்து விடுபட விரும்புகிறவர், தமது வாழ்வில் நடந்தவைகளையும், தாம் இழந்தவைகளையும் முதலில் மறக்கவேண்டும். கெட்டவைகளுக்கு பதிலாக நல்லவைகளைபார்க்க வேண்டும்.  சிரமங்களுக்கு பதிலாக அதில் இருக்கும் வாய்ப்புகளை அறிந்து அவற்றை கற்றுக்கொள்ளவேண்டும்.

இழந்து போனதை பற்றி கவலை கொள்ளாமல், மிச்சம் இருப்பது என்ன? அதை வைத்து என்ன செய்யலாம் என எண்ணுவதே சாலச்சிறந்தது. எனக்கு நல்லது நடக்கவில்லை, கெட்டதுதான் நடந்தது என்று ஏன் கவலைப்படுகிறீர்கள்? கேட்டதில் கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்லது நல்லவர்களுக்கு அமையும். எனவே எப்போதுவும் நல்லவர்களாகவே இருங்கள். 


இதைவிட மிகமிக முக்கியமானது என்ன தெரியுமா? 

தகுதிக்கு மீறியவைகளில் ஆசைப்படுவதும், சாத்தியமற்றவைகளை அடைய முற்படுவதும் நமக்கு என்றும் கவலையை தவிர வேறு எதையும் கொண்டு வராது. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை வைத்துக்கொள்ள வேண்டும். எல்லை மீறினால் தொல்லைதான். ஒரு கனவு நிறைவேறாவிட்டால் என்ன, இன்னொரு கனவு காணுங்கள்!


இன்றைய மருத்துவ உலகம், உடல்சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில்வெற்றிகண்டுவிட்டது. ஆனால்,  மன உபாதைகளை குணப்படுத்துவதில் போதிய அளவு வெற்றி காணவில்லை. அச்சமும், கவலையுமே மன உபாதைகளுக்கு முக்கிய காரணிகள். அது இரண்டையும் துரத்திவிட்டாலே, இங்கு பலர் ஆரோக்கியமாக ஆனந்தமாக இருப்பார்கள். 

சேற்றுக்குள் சிக்கிக்கொண்ட வண்டிச்சக்கரம் போல்,  மீண்டும் மீண்டும் கவலையில் சிக்கிக்கொள்ளாதீர்கள். கவலையைவிட்டு வெளியே வாருங்கள். மனம் தெளிவாக இருக்கும் நேரத்தில் தீர்வு காணுங்கள். “மழை வந்தவுடன் நனைந்து விடுவோமே” என்ற கவலையில் பறவைகள் எல்லாம் தங்கள் கூடுகளை நோக்கி போகும்போது, கழுகுகள் மட்டும் மேகத்து மேலேயே சென்றுவிடுமாம். இதேபோல் தான் நாமும் பிரச்னையில் இருந்து வெளியே வெளியே வரவேண்டும்.  கவலையை நாம் வெல்லவேண்டும். இல்லையென்றால் கவலை நம்மை வென்றுவிடும்!



பணத்தை சேமித்து கூட பின்னாளில் செலவழிக்கலாம். ஆனால் ஒருபோதும் வாழ்க்கையை சேமித்து வைத்து, பின்னாளில் வாழ முடியாது, வாழ்க்கை வாழ்வதற்கே. இதில் கவலையை கொண்டுவந்து இந்த அழகான வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்.

உங்களை வெறுப்பவர்களை நினைத்து ஒருபோதும் கவலை கொள்ளவேண்டாம். ஏனென்றால், அவர்களுக்கு உங்கள் அன்பை பெற தகுதி இல்லை என நினைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கை எப்போதும் இருட்டாகவே உள்ளது என நினைத்து கவலை கொள்ளவேண்டாம். இருளான நேரங்களில் தான் கனவுகள் பிறக்கும்..! என்னை பற்றி கவலை இங்கு கொள்ள யாருமில்லை. நான் ஏன் மற்றவங்களை பற்றி கவலைபடனும்..? என்று எண்ணுபவர்களும் இங்கு சிலர் உண்டு. உங்கள் கவலைகளை விளம்பரம் செய்து எந்த பயனுமில்லை. ஏனென்றால் அவற்றை யாரும் இங்கு வாங்க போவதில்லை.

யாரும் பேசவில்லை என ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள். அதற்கு பதிலாக உங்களை புரிந்து கொள்ள இந்த உலகில் யாரும் பிறக்கவில்லை என்று திமிரோடு இருங்கள்.கவலைகளை நிரந்தரமாக்கினால் நாம் நோயாளி. தற்காலிகமாக ஆக்கினால் நாம் புத்திசாலி. கவலையே இல்லாமல் வாழ்ந்தால் நாம் ஞானி..! இதில் எது நீங்கள் என முடிவு செய்துகொள்ளுங்கள். இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டும் என்ற கவலை சிலருக்கு. இப்படியே வாழ்க்கை இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு..!


இந்த உலகத்தில் கவலையே இல்லாதவர்கள் இருவர் தான். ஒருவன் கருவறையில்..! மற்றொருவன் கல்லறையில்..! ஆகா இனி எதற்கும், எப்போதும் , எங்கும் கவலை கொள்ளாதீர்கள். அப்படி உங்களுக்கு கவலை நெருங்கும் பட்சத்தில், இந்த பதிவை மீண்டும் படியுங்கள். உங்களின் நண்பர்கள் யாராவது கவலையோடு இருந்தால், அவர்களுக்கு இந்த பதிவை பகிருங்கள்..

இனி கவலை மறந்து, இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை காலம் முழுவதும் வாழுங்கள்.




21 நாட்களில் உங்கவலைகள் அதிகம் உள்ளவர்கள் இதை பாருங்கள்

Watch full video in YouTube and Don’t forget to Subscribe

Subscribe Now

Tags: Self Motivation self motivation kavithaikal Tamil Motivation

Continue Reading

Previous: தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் வைத்து வளர்க்கப்படும் யானைகளின் பெயர் பட்டியல்
Next: நதியோடு நேர்ததெம் தமிழ் பிறப்பு

Related Stories

st
1 min read
  • வெற்றி உனதே

மூடிய பாத்திரத்தில் கொதிக்கும் நீர் போல் – மன அழுத்தத்திற்கான உண்மையான காரணம் என்ன?

Vishnu May 10, 2025
am
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

உங்கள் வெற்றிப் பாதையை வரையறுக்கும் அம்பேத்கரின் 10 அற்புத வார்த்தைகள்!

Vishnu April 14, 2025
1
1 min read
  • வெற்றி உனதே

வாழ்வை மாற்றும் நம்பிக்கையின் சக்தி: உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற இது மட்டுமே போதுமா?

Vishnu April 12, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024
sunday
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

உலகின் மதங்களில் வார இறுதி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது?

Vishnu November 18, 2024
Idi-amin-thum
1 min read
  • மர்மங்கள்

உகாண்டாவின் கொடூர ஆட்சியாளர் இடி அமீன்: 5 மனைவிகள், 40 குழந்தைகள் – அவரது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன?

Vishnu October 28, 2024
மரணத்தை முன்கூட்டியே அறிவிக்குமா மனித மூளை? விஞ்ஞானிகளை உறைய வைத்த ஆராய்ச்சி முடிவுகள்! br 1
  • Viral News

மரணத்தை முன்கூட்டியே அறிவிக்குமா மனித மூளை? விஞ்ஞானிகளை உறைய வைத்த ஆராய்ச்சி முடிவுகள்!

June 17, 2025
உங்கள் கண் கண்ணாடிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் உள்ளதா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! class 2
  • சுவாரசிய தகவல்கள்

உங்கள் கண் கண்ணாடிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் உள்ளதா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

June 17, 2025
“ஃபிரைடு ரைஸ், பிரியாணி” மட்டும்தானா? சோற்றுக்கு 27 பெயர்கள் வைத்த நம் முன்னோர்களின் தமிழ் அறிவைக் கண்டால் வியந்து போவீர்கள்! Rice 3
  • சிறப்பு கட்டுரை

“ஃபிரைடு ரைஸ், பிரியாணி” மட்டும்தானா? சோற்றுக்கு 27 பெயர்கள் வைத்த நம் முன்னோர்களின் தமிழ் அறிவைக் கண்டால் வியந்து போவீர்கள்!

June 17, 2025
லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் தமிழ்நாட்டில் படையெடுப்பது ஏன்? இந்த அதிசய வலசையின் பின்னணி தெரியுமா? beter 4
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் தமிழ்நாட்டில் படையெடுப்பது ஏன்? இந்த அதிசய வலசையின் பின்னணி தெரியுமா?

June 17, 2025
காதலிக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது உண்மையா? உங்கள் மூளையின் ரகசியம் வயிற்றில் உள்ளதா? br 5
  • சிறப்பு கட்டுரை

காதலிக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது உண்மையா? உங்கள் மூளையின் ரகசியம் வயிற்றில் உள்ளதா?

June 17, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

br
1 min read
  • Viral News

மரணத்தை முன்கூட்டியே அறிவிக்குமா மனித மூளை? விஞ்ஞானிகளை உறைய வைத்த ஆராய்ச்சி முடிவுகள்!

Vishnu June 17, 2025
class
1 min read
  • சுவாரசிய தகவல்கள்

உங்கள் கண் கண்ணாடிக்குப் பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் உள்ளதா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Vishnu June 17, 2025
Rice
1 min read
  • சிறப்பு கட்டுரை

“ஃபிரைடு ரைஸ், பிரியாணி” மட்டும்தானா? சோற்றுக்கு 27 பெயர்கள் வைத்த நம் முன்னோர்களின் தமிழ் அறிவைக் கண்டால் வியந்து போவீர்கள்!

Vishnu June 17, 2025
beter
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் தமிழ்நாட்டில் படையெடுப்பது ஏன்? இந்த அதிசய வலசையின் பின்னணி தெரியுமா?

Vishnu June 17, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version