• April 5, 2024

Tags :self motivation kavithaikal

Sticky

இதில் இருக்கும் ஒவ்வொரு வரிகளுக்கும் உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது!

சிலசமயங்களில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருப்பதே சிறந்த பதிலாக அமைகிறது. விட்டு விலகுவதும் சில நேரத்தில் நல்லதே, அது எதிராளியின் அகம்பாவத்திற்காக அன்றி நம்முடைய சுயமரியாதைக்காக இருக்கும் போது.. நீங்கள் செய்த கெட்ட விஷயங்கள் உங்களை உறுத்துவதை விட, தகுதியற்றவர்களுக்கு நீங்கள் செய்த நன்மைகள் அதிகமான உறுத்தலை கொடுக்கும். அறிவு (கல்வி) அதிகாரத்தைத் தான் கொடுக்கும், நடத்தை தான் மரியாதையை கொடுக்கும். மன்னிக்கலாம், அவரின் நிலையை புரிந்தும் கொள்ளலாம், ஆனால் முட்டாளாக இருந்துவிட கூடாது. நீங்கள் எவ்வளவு […]Read More

கவலையோடு இருப்பவர்கள் இதை படிக்கவும்!

“காலம் முழுவதும் கவலை மட்டுமே என்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறது. என்னை சுற்றிலும் கவலை மட்டுமே இருக்கிறது. கவலையோடு கவலையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று எண்ணுபவர்களுக்கு, ஒரு மாற்றத்தை தந்து, அந்த கவலையை காணாமல் செய்ய வைக்கும் இந்த பதிவு..! எவன் ஒருவன் நன்றாக வாழ வழி இருந்தும், வாழாமல் வறுமையில் வாடுகின்றானோ! அவனைப் பார்த்து மட்டும் சிரித்து விடாதீர்கள். ஏனென்றால் அவன்தான் தன் கனவுக்கான பாதையில் தள்ளாடித் தள்ளாடி, பின் நடந்து நடந்து, இப்பொழுது ஓட முயற்சித்துக் கொண்டிருக்கிறவன். தன் […]Read More

நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி? “காத்திருப்பது என்பது ஒரு துருபிடித்த வியாதி”

நிகழ்காலத்தில் வாழ்பவர்கள் இதை நேரம் என்று சொல்லுவார்கள். எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர் இதை, காலம் என்றே சொல்லுவார்கள். ‘நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல, காலனும், காலமும் நம்மை துரத்துகிறார்கள்’ என்று நம் முன்னோர்கள் சொல்வதுண்டு. மனித வளத்தில் மூன்று முக்கியமானது பேச்சாற்றால், எழுத்தாற்றால், செயலாற்றல். இதனுடன் நேரத்தை பயன்படுத்தும் ஆற்றலும் மிக அத்தியாவசியமானது. “நேரத்தை பயன்படுத்துவது எப்படி” என்று படிப்பதற்கு முன், ‘நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி’ என்று பழகுவது தான் மிக சிறப்பானது. […]Read More

உன்னை நீ கேட்டுப்பார்!

மழையில்லாக் காட்டிடம் கேட்டுப்பார்வறட்சியின் வலி தெரியும்! பகையில்லா பிள்ளையிடம் கேட்டுப்பார்அன்பின் மொழிப் புரியும்! வீடில்லா விலங்கிடம் கேட்டுப்பார்வாழ்வின் வேதனை விளங்கும்! வாயில்லா பறவையிடம் கேட்டுப்பார்காற்றின் மொழி புரியும்! நீ உன்னையே கேட்டுப்பார் நீ யாரென்று உனக்கே தெரியும்உன் வலிமையும் புரியும்!Read More

மனிதனை மனிதமாக மாற்றுவது நட்பே

உங்கள் நண்பரை பற்றி யாராவது உங்களிடம் சொல்லவந்தால், அவர்களிடம் இந்த 3 கேள்விகளை கேளுங்கள்! “என் நண்பன் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா?” “என் நண்பன் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா?” “என் நண்பரைப்பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா?” Read Full Article HereRead More

இறை தேடல்

பொருளைத் தேடிபுகழைத் தேடிஉறவைத் தேடிஉரிமை தேடிஇளமை தேடிஇனிமை தேடிசுகத்தைத் தேடிசிரிப்பைத் தேடிபொன்னைத் தேடிமண்ணைத் தேடிவிண்ணைத் தொட்டும்…மண்ணில் விழுந்துகண்ணை விற்றும்ஓவியம் வாங்கிமுற்றுப் பெறாததேடலில் மூழ்கிமுத்தான வாழ்வைத்தொலைத்து மருகிசத்தம் நிறைந்தஅலை மனமாகிபித்தன் என்றேபிழையுற்று நின்றேன்! தேடல் முடிவில்…அடைவொன்றும் இல்லைநிறைவென்ற நிம்மதிநிகழவும் இல்லை!குழம்பி நிற்கையில்குரலொன்று கேட்டேன்…நகைப்பின் ஊடே அதுநலம் சொலக் கேட்டேன்! “முடிவுறும் தேடலில்நிறை தனைக் கண்டிடும்இடமது மறைபொருள்இறையது தானே!அதை…அடைந்திடும் வழியெனும்விடுகதை விளங்கிடசிரம் கொடு செவி மடுஅலையுறு மனமே!மறைபொருள் இறை தனைக்காட்டிடும் நிறைமதிதடுத்திடும் தளை தனைக்களைந்திடு மனமே! உடலொடு உயிர் தனைப்பிணைந்திடும் […]Read More