• April 3, 2024

நதியோடு நேர்ததெம் தமிழ் பிறப்பு

 நதியோடு நேர்ததெம் தமிழ் பிறப்பு

நதியோடு நேர்ததெம்
தமிழ் பிறப்பு
அந்நதி தானே
உயிர்களின் அனுசரிப்பு


வளைந்து நெலிந்தோடிய
வழியெங்கும்
வாழ்வின் மையம்
கூடி விடிந்தோம்

விதைகளாகியே
விழுந்து கிடந்தோம்
விவசாயமாகியே
உயிர்ப் பிடித்தோம்


ஆர்ப்பரித்தோடிய
கரையெங்கும்
ஒதுங்கி கூலாங்கற்கள்
குழந்தைகளானோம்

சிலிர்த்து குலாவி
மேனி தழுவி
ஆற்றின் மடியில்
விளையாடிய அற்புதங்கள்

நாகரீக நரி துரத்த
நகரத் தொடங்கியே
நகர நகர பயணித்த
நாடோடி அற்ப பதங்கள்

அந்தமும் ஆதியும்
நீரே ஆதாரமாகியும்
நதி வழிய நதி வழியே
நகரப் பிரவேசம்


நுட்பங்களின் நூலிலையில்
நீர் விதி அத்துப் போக
ஊர் ஊராய் வீதி வீதியாய்
தலைவிதியென்று
அலைகின்றோம்

தண்ணீர் தேடும்
கண்ணீர் குடங்களாய்..!

கவிஞர் சென்

கவிஞர் சென்