ஒருவன் வாழ்க்கையில் வெற்றிகளை அடைய அவனது நம்பிக்கை, அதுவும் தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். தன்னம்பிக்கையோடு முயற்சியும் இணைந்து விட்டால் அவனது வெற்றியை எவரும் தடை செய்ய முடியாது. இதனைத் தான், எத்தகைய கைகள் என்னை தள்ளி விட்டாலும் உன் நம்பிக்கை ஒன்று இருந்தால் அது என்றுமே உன்னை கைவிடாது என்று கூறி இருக்கிறார்கள். எத்தகைய மனிதனாலும் ஒரு வெற்றி இலக்கை அவ்வளவு சாதாரணமாக எட்டிப் பிடிக்க முடியாது. அந்த இலக்குகளை அடைய பல்வகையான கஷ்டங்களை […]Read More
வெற்றியோ, தோல்வியோ முயற்சி செய்து பார் தோழா.. கட்டாயம் உன் முயற்சி ஒரு காலகட்டத்தில் வெற்றியை எட்டிப் பிடிக்கும். நீங்கள் ஒன்றுக்காக முயற்சி செய்யும் போது, எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் முயற்சியை கைவிடக்கூடாது. இதைத்தான் திருவள்ளுவர் “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்” என்று தனது குறளில் மிக அழகான முறையில் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் உங்கள் முயற்சி, விடாமுயற்சியாக இருந்தால் எவ்வளவு கஷ்டமான விஷயத்தையும், நீங்கள் எளிதாக […]Read More
ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்க்கையில் பல விதமான வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கும். அப்படிப்பட்ட வெற்றியை நாம் அடைவதற்கு பல வழிகளை கையாளுவோம். எனினும் சிலர் வாழ்க்கையில் வெற்றி கிட்டும் என்று நினைக்கும் சமயத்தில் வெற்றி கை நழுவி சென்று விடும். இந்த வெற்றியை தவற விட்ட நண்பர்கள் வாழ்க்கையில் துவண்டு போவது இயல்பான விஷயமே. எனினும் மீண்டும் வெற்றியடைய என்ன வழி என்பதை ஆராய வேண்டுமே, ஒழிய அதை விடுத்து […]Read More
என்னால் மட்டும் ஏனோ எதுவுமே செய்ய முடியவில்லை என்று நீங்கள் துவண்டு இருந்தால், அதற்கு காரணம் உங்கள் மீது இருக்கக்கூடிய அபரிமிதமான நம்பிக்கையை உங்களால் செயல்படுத்த முடியவில்லை என்று தான் அர்த்தம். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும், உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லவும், இது போன்ற தன்னம்பிக்கை தரக்கூடிய வரிகளை தினமும் நீங்கள் சொல்லி வந்தாலே போதும். கட்டாயம் முன்னேற்றம் ஏற்படும். மார்ட்டின் லூதர் கிங்கின் கூற்றுப்படி வாழ்க்கையில் கஷ்டங்கள் வலிமையானது. ஆனால் அந்த […]Read More
மனித வாழ்க்கையின் அடிப்படையே நம்பிக்கையில் தான் இருக்கிறது. இந்த நம்பிக்கையை நீங்கள் உங்களுக்குள் விதைக்கும் போது தான் அது தன்னம்பிக்கையாக உருவெடுக்கிறது. எப்போதும் மனித மனம் ஒரு தேடலில் இருக்கும். அந்தத் தேடல் உங்களால் மட்டுமே கண்டறியப்படக்கூடிய விதத்தில் அமைந்தால், அது மிகவும் சிறப்பான மாற்றத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே தான் உன்னால் முடியும். இல்லை உன்னால் மட்டுமே முடியும் என்ற தாரக மந்திரத்தை உங்களுக்குள் நீங்கள் சொல்ல, சொல்ல உங்கள் வாழ்வில் நீங்கள் […]Read More
இன்று உள்ள காலகட்டத்தில் மனிதன் வாழ்க்கையில் சிறப்பாகவும், மன அமைதியோடும் வாழ்வதற்கு மூன்று விஷயங்கள் அவசியம் தேவை என்று கூறலாம். அந்த விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தால் உங்கள் வாழ்க்கை நிச்சயமாக இன்பமயமாக மாறிவிடும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் பழையதை அனைத்தையும் நீங்கள் மறந்து விட வேண்டும். அப்படி மறந்த பிறகு நடக்கின்ற நிகழ்காலம் பற்றி கவனமாக நீங்கள் நடக்க வேண்டும். மேலும் வரப்போகும், எதிர்காலத்தை நல்ல முறையில் சிந்தித்தாலே உங்கள் வாழ்க்கை இன்பமாக மாறிவிடும். […]Read More
ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல் கலாம் தன்னுடைய நம்பிக்கையால் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். மேலும் நேருவைப் போலவே குழந்தைகளிடம் அன்பாக பழகக்கூடியவர். ஒவ்வொருவரும் கனவோடு வாழ வேண்டும் என்பதை இவர் மிகவும் சிறப்பான முறையில் கூறி இருப்பதோடு அந்த கனவினை அடைய கடுமையான முயற்சி மற்றும் உழைப்பு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். முடியாது என்று யார் சொன்னாலும் அது ஒரு நோயைப் போன்றது. அது நம்மை அழித்து விடும். அதுவே நம்மால் முடியும் என்று நம்பினால் […]Read More
இன்று தன்னம்பிக்கை பற்றி பலரும் பல விதங்களில் பேசி வருகிறார்கள். ஆனால் ஒரு மனிதருக்கு தன்னம்பிக்கையை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையை கற்றுக் கொடுக்காமல் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள், வளர்த்துக்கொள் என்று கூறுவதால் என்ன பயன். எனவே எந்த கட்டுரையில் ஒருவர் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம். யானைக்கு அதன் பலம் தும்பிக்கையில் உள்ளது என்றால் மனிதனுடைய பலம் அவன் நம்பிக்கையில் தான் இருக்கிறது. எனவே முதலில் நீங்கள் […]Read More
தோல்வியைக் கண்டு நீ மன தைரியத்தை இழக்கக்கூடாது. உன் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தான் வெற்றி இருக்கிறது என்ற நம்பிக்கையை நீ வளர்த்துக் கொண்டால் வெற்றி என்பது விரைவில் உன் கைவசம் வந்து சேரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எத்தனை தோல்விகள் வந்தாலும் அதற்கெல்லாம் நீ பயப்படக்கூடாது. தோல்வி உன்னை துரத்தி வந்தால் கட்டாயம் வெற்றி உன்னை நெருங்குகிறது என்று மாவீரன் நெப்போலியன் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறியிருக்கிறார். வாழ்வது ஒரு முறை தான். அந்த […]Read More
ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கையோடு இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதை தொன்று தொட்டு அனைவரும் கூறி வருகிறார்கள். இதனை அடுத்து இந்த நம்பிக்கையை உளவியல் ரீதியாக எட்டு வகையாக பிரித்திருக்கிறார்கள். அந்த எட்டு வகையான நம்பிக்கை மட்டும் மனிதனிடம் இருந்தால் மட்டுமே அவன் வாழ்வில் ஜெயிக்க முடியும். எட்டு வகையான நம்பிக்கைகள் 1.மற்றவர்கள் மீது நாம் வைக்கும் நம்பிக்கை. 2. உங்கள் மீது நீங்கள் வைக்கும் தன்னம்பிக்கை 3. தவறான நம்பிக்கை 4.உங்கள் நடத்தையில் நம்பிக்கை […]Read More