
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை எட்டி வரும் சூழலில் தன் கையில் கட்டிய Smart Watch மூலம் உயிர் தப்பிய ஒரு சிங்கப்பூர் நபரின் கதை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித உயிரை காப்பாற்றும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வரும் முஹம்மது என்பவர் வேன் தன் மீது மோதியதால் விபத்துக்கு உள்ளாகி சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில் அவர் கட்டியிருந்த ஆப்பிள் Smart Watch தானாகவே அவர் ஆபத்தில் இருப்பதை அறிந்து அவருடைய நண்பர்களுக்கும் எமர்ஜென்சி சேவையான ஆம்புலன்ஸ்-ற்கும் தகவலை தெரிவித்துள்ளது.

ECG sensor வசதி கொண்டிருந்த இந்த ஆப்பிள் வாட்ச்சால் முஹம்மதின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அவர் கையில் கட்டியிருந்தது ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்-ன் series 4 என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற மக்களுக்கு பயனுள்ள வசதிகள் ஸ்மார்ட் வாட்ச்சில் வந்துள்ளது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. அளவுக்கு மீறி விஞ்ஞானம் வளர்ந்துள்ளதால் நிறைய ஆபத்துகள் இருக்குமோ என்ற சந்தேகம் நிலவி வரும் இக்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனித உயிரையே காப்பாற்றக் கூடும் என்பதை நிரூபித்துள்ளது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
ஆபத்தில் உதவும் நண்பனாக இருந்த ஆப்பிள் Smart watch-ஐ பாராட்டி நெட்டிசன்கள் பல பதிவுகளை இந்த சம்பவத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உபயோகிக்க வேண்டிய முறையில் உபயோகித்தால் தொழில்நுட்பம் நம் தோள் கொடுக்கும் நண்பனே என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
- தெருவெல்லாம் ஆரஞ்சு பழங்கள்: ஸ்பெயினின் செவில் நகரத்தின் அற்புத மாற்றம்!
- வரலாற்றில் மிகப்பெரிய வங்கி கொள்ளை: பிரேசிலின் சூப்பர் திட்டம் எப்படி கின்னஸ் சாதனை படைத்தது?
- “எம்பிரான் ரிலீஸ் நெருங்கும் நிலையில்: மோகன்லால் மலையாள சினிமாவின் எதிர்காலம் குறித்து என்ன சொல்கிறார்?”
- இந்திய சாலைகளில் விரைவில் அறிமுகமாகப் போகும் புதிய நிஸான் எஸ்யூவி – ரெனோ டஸ்டரின் சகோதரன் என்று சொல்லலாமா?
- சென்னை காவல் ஆணையர் அருண்: ‘ரவுடிகளின் மொழியில்’ பேசும் அதிரடி அதிகாரி – 9 மாதங்களில் 4 என்கவுன்ட்டர்கள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துமா?
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.