• July 27, 2024

35 ஆண்டுகளுக்கு முன் 42 குழந்தைகளை கொலை..! –  மூன்று பெண்கள் மர்மம் என்ன?

 35 ஆண்டுகளுக்கு முன் 42 குழந்தைகளை கொலை..! –  மூன்று பெண்கள் மர்மம் என்ன?

Murder

படிக்கும்போதே மனதை ஒழுக்கக்கூடிய இந்த குற்ற சம்பவம் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு மர்மக் கொலையாக உள்ளது என்றால் அனைவருக்கும் அது வியப்பை ஏற்படுத்தும்.

மகாராஷ்டிராவில் மிக கொடூர காலமாக நடந்த இந்த தொடர் கொடைகளை மூன்று பெண்கள் நடத்தினார்கள் என்றால், அது மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு அவர்களின் கொடூரத்தனத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும்.

இவர்கள் பிச்சை எடுப்பவர்களின் குழந்தைகளை திருடி, அந்த குழந்தைகளையே கேடயமாக பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டார்கள். பின்னர் இந்த குழந்தைகள் அனைவரையும் கொலை செய்தார்கள்.

Murder
Murder

அன்புக்கும் பாசத்திற்கும் பெண் பாலை உதாரணமாக காட்டக்கூடிய நாம், இந்த தொடர் கொலைகள் மூலம் பெண் இனத்திற்கே ஒரு அவப்பெயர் ஏற்பட்டதோடு அந்த அன்பும், பாசமும் சுக்குநூறாக உடைந்தது என கூறலாம்.

இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்ட வழக்கான இதில் சகோதரிகள் மற்றும் தாய் என மூவரும் இணைந்து ஈடுபட்டது தெரிய வந்தது.

1990 மற்றும் 1996 க்கு இடையே மும்பைக்கு அருகே உள்ள புனே மும்பையின் புறநகர் பகுதிகளான நாசிக், கோலாப்பூர் போன்ற நகரங்களில் இருந்து குழந்தைகள் காணாமல் போனது.

இந்தக் குழந்தை கடத்தலில் அஞ்சனா பாய் காவி மற்றும் அவரது மகள் சீமா என்கிற தேவகி காவின் மற்றும் அவருடைய மற்றொரு திருமணமான ரேணுகா ஷிண்டே ஆகியோர் எந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள்.

Murder
Murder

ஆரம்ப நாட்களில் திருட்டுத் தொழிலை நடத்தி வந்த இவர்கள் நெறுசலான பகுதியில் ஒரு பெண்ணின் பணப்பையை திருடிய போது பொதுமக்களிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

இதனை அடுத்து அவரது இரண்டு வயது மகன் அவரோடு இருந்தால் இதனை அடுத்து குழந்தையின் மீது சத்தியம் செய்து தான் திருடவில்லை என்று கூற பொதுமக்களும் பரிதாபப்பட்டு விட்டு சென்று விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த கதையை தனது அம்மா மற்றும் சகோதரியிடம் சொல்ல அவர்கள் மூவரும் திருடுவதற்கான பாதுகாப்பான வழி தங்களுக்கு கிடைத்து விட்டதாக நினைத்து மகிழ்ந்தார்கள்.

மேலும் தெருவில் பிச்சை எடுத்து வாழும் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை கடத்திச் சென்று நகரங்களில் பல்வேறு பகுதிகளில் அவர்களை பயன்படுத்த தொடங்கினர். திருவிழா காலங்களில் குழந்தைகளை பயன்படுத்தி திருடுவதை வழக்கமாக்கினர்.

Murder
Murder

அந்த வகையில் ஒரு சமயம் திருடும்போது பிச்சைக்காரனின் மகனாகிய சந்தோஷ் என்ற சிறுவன் அழுக ஆரம்பித்ததின் காரணத்தால் எங்கே மாட்டிக் கொண்டு விடுவோமோ என்ற எண்ணத்தில் அந்த சிறுவனை கொன்று விட்டு தப்பி விட்டார்கள்.

திருடும்போது பொதுமக்கள் இடையே மாட்டும் சமயத்தில் குழந்தைகளின் மீது சத்தியம் செய்து லூதன முறையில் தப்பித்து வந்த இவர்கள் ஏழை குடும்பத்தை சார்ந்த குழந்தைகளை உளவு பார்த்து கடத்துவதை வழக்கமாக்கி கொண்டார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் இந்த மூன்று பெண்களும் சுமார் 42 குழந்தைகளை கடத்தி இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு சாட்டப்பட்டது. மேலும் அந்த குழந்தைகளை இவர்களை கொன்று இருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுந்தது.

Murder
Murder

 இந்த கொலை குறித்து பல வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாததால் காவல்துறையால் வழக்கை தொடர முடியவில்லை. 13 குழந்தைகள் கடத்தல் மற்றும் ஆறு குழந்தைகள் கொலைகள் மட்டுமே நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

இவர்கள் குழந்தைகளை கொன்றதற்கான வலுவான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து இந்த நால்வரும் செய்த கொலை குற்றங்கள் பற்றிய தகவலை பொதுமக்களுக்கு திறன் சண்டை அடித்த வாக்குமூலத்தில் இருந்து புரிந்து கொண்டார்கள்.

 இந்த வாக்குமூலம் மகாராஷ்டிராவையே உலுக்கியது என கூறலாம். இதனை அடுத்து ரேணுகா ஷிண்டே மற்றும் சீமா காவித்த ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.மேலும் அஞ்சனா பாய் மற்றும் கிரண் ஷிண்டே கைது செய்யப்பட்டனர்.