• March 28, 2024

Tags :Tamil Kavithaikal

விடைதேடி உயிர்வாழும் ஜீவன்!

கனவே நீ கைகூட நான் என்ன செய்வேனோ!கண்ணீரும் கதைச் சொல்ல நீ என் கையில் சேர்வாயோ!! உடல் மட்டும் உயிர் வாழ, உன்னைத் தேடி திரிந்தேனே!கனவே நீ சூரியனா!உன் ஒளிக்காக தவிக்கின்றகண்மணி நானும் தாமரையா!! நம்பிக்கை ஒன்றைத் தவிரஎன்னிடமும் ஒன்றும் இல்லை..என் கையில் சேர்வாயோஎன்னைத் தாங்கிச் செல்வாய்யோ!! – இரா. கார்த்திகாRead More

காதல் துளி!

தீண்டும் திங்களின் துகள்களில் ஒளிறவே,மீண்டும் பூமியில் மலர்ந்தேன்!ஓடும் நதியின் ஓசை கேட்கவே,கரையினில் மண்ணென சேர்ந்தேன்!!காலைக் கதிரவன் கதிரினில் திரவமாய்,தீயை மூட்டி தடம் ஒன்று செய்தேன்!!! விழிகளில் விழுந்த விதையெனமுளைத்தாய்…உணர்வினில் மதுரமாய் கலந்தெனைச் சாய்த்தாய்…! நீங்காமல் நீங்கியே சேராமல் சேர்வோம்;காதலின் உள்ளே மழையென பொழிவோம்! – இரா.கார்த்திகாRead More

ஓரு பொறியாளனின் காதல்!

மாயவளே!உன்னை என்னுள் பதிவிறக்கம் செய்த நேரம்…என் செவியின் கடவுச்சொல் நீயனாய்!என் விழியின் காட்சிப்படம் நீயனாய்!! தூயவளே!உன்னை என் தரவுத்தளத்தினில் நிரப்பிய தருணம்…என் கருத்துகளின் மறையாக்கம் நீயனாய்!என் வார்த்தைகளின் மறைவிலக்கம் நீயனாய்!! என்னவளே!உன்னை என் உதிரத்தில் உள்ளீடு செய்த நேரம்…என் இதயத்தின் நிரல்பெயர்ப்பி நீயனாய்!என் உயிரின் பயன்பாட்டு நிரலர் நீயனாய்!! விரும்புகிறேன்…என் தீர்வுநெறி நீயாக…உன் மூலக்குறிமுறை நானாக…நம் காதல் மையச்செயலியாக!!! Translations for Tamil Words From This Kavithai Sanofar WriterRead More

துள்ளிக்குதித்த மனமே!

இரவில் பூத்த மல்லிகையை போல,தேனில் மூழ்கிய வண்டைப் போல,மழைத் தீண்டிய மயிலைப் போல,சூரியனால் மலர்ந்த தாமரையைப் போல,திருமாலைத் தரிசித்த ஆண்டாலைப் போல, உன்னை கண்டபின் மானைப் போலஎன் மனம் துள்ளிக் குதித்து ஓடியது! – இரா. கார்த்திகாRead More

காதல் பித்துப்பிடித்தவளாய் நான்!

கை அருகில் நீஇருந்தும் இல்லாமல் நான்…!!ஏதுவும் பிடிப்பதில்லைஅழைத்தாலும் செவிமடுக்கவில்லை;சொல்வதற்கு ஏதுமில்லை…,சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! உன் சுவாசக் காற்றில்ஊசலாடும் இதயம்…! ‘நீதான்’ வேண்டும்அடம்பிடிக்கும் மனது…!கொடுக்கவியலா தூரத்தில் நீ…!ஸ்பரிசம் உணரா தவிப்பில் நான்…!!பெரிதாக ஒன்றுமில்லை..சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! கொடியாய் படர்கிறாய்மலராய் மணக்கிறாய்ஆலகால விஷமானவனே…!என் காதலில் குரூரம்… நீசொல்வதற்கு ஏதுமில்லை..!!சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!! உன் அருகாமைவேண்டி தவமிருக்கும் மனது;சாத்தியமாக்க வந்து சேர்….!இணைந்து மகிழப்போகும்வாழ்வின் நினைவுகளில்,வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…!!பெரிதாக ஒன்றுமில்லை…,சற்றே பித்துப்பிடித்தவளாய் நான்…!!!Read More

சிரிப்பால் சிறைப்பிடித்தாள்..

உன் முத்துப் பற்களால் நீ சிரிக்கஅதை பார்த்து என் மனம் பரிதவிக்க! உன் உதட்டோர புன்னகை என்னைக் கொல்லுதடி!அதை தொடர்ந்து என் கண்கள் செல்லுதடி!! என் மனம் கவர்ந்தவள் நீயடி..உன்னை பிரியும் நொடி என் மரணமடி!! – இரா. கார்த்திகாRead More

வேந்தனின் வர்ணனை

ரம்பா, ஊர்வசி, மேனகையிடமே மதிமயங்காத மன்னனடி,உன்னைக் கண்டதும் கண்கள் பூத்தது,அது உன் கூந்தல் செய்த மாயமடி!பூமியில் பிறந்த மேனகை நீயடி!! உன்னைக் கவர அந்த விஸ்வாமித்ரனை வீழ்க்கும் வேந்தன் நானடி..உன் கூந்தல் வாசம் என்னைக் கூப்பிடும் நேரம்மனதின் ஓரம் ஏதோ ஒரு பாரம்.. – இரா.கார்த்திக்காRead More

கடிகார சுழற்சியும் – மனிதர்களின் சூழ்ச்சியும்

கடிகார முட்களின் சுழற்சியாய் சுழலும் வாழ்க்கையில்,அசையாமல் நிற்கும் கடிகாரமுல் போலச் சட்டென்று பிணியால் சரியும் மாந்தர்களும்,அரசாலும் அதிபதிகள் செல்வத்தை சாமானியர்களிடம் வரியாக பெற்றாலும்,கடனாக சிறுதுளியும் விவசாயி பெறவில்லை. சிறப்பாக சீமையில் ஓடி ஒலிந்த செல்வந்தனோ,ஒய்யாரமாய் உணவுண்ணகடனைத் தள்ளுபடி செய்தஇந்த நாட்டின் நிலையும் என்னவோ?Read More

புத்தனும் பித்தனாய் மாறும் மர்மம்!

கண்கள் வாசிக்க கவிதையாய் நீ!இதயம் நேசிக்கும் இனிமையாய் நீ!! கனவில் வருகின்ற கடவுளாய் நீ!உன்னை யாசிக்கும் பக்தனாய் நான்!! வானில் ஒளிரும் திங்களாய் நீ!உன்னை தீண்டும் மேகமாய் நான்!! நீ என் உயிரில் நிறைந்திருக்ககாற்றும் மழையும் கதை சொல்லபுத்தனும் பித்தனாய் மாறினேனே!Read More

எங்கே? மனித நேயம்!

ஏய் மானிடா!மனித நேயம் ஒன்று இருப்பின்அன்னமாகிய அன்னாசியின் நடுவே,அணுகுண்டு வைப்பாயா?நம்மை நம்பி வந்த தந்தியைநஞ்சிட்டு கொன்றவஞ்சகனே!உன்னை வஞ்சிடவார்த்தைகள் இல்லையடா பாவி! தம்மை நாடி வந்ததால்,நால்வாய் பிளந்து – தன்நாடி இழந்து ,நாட்கள் ஆனதடா துரோகி!ஆடாமல் அசையாமல்,வெள்ளியர் ஆற்றின் நடுவே,ஆழத்தை மறந்து,தன்னோடு தன் கருவையும்,கறுக்கியப் பாவிஎவனோ? ஏய், இயற்கையேஎரித்து விடு அவனை!அவன் சாம்பலும் – கரையாமல்சுற்றி திரியட்டும் ஆவியாய், பாவியாய்!!!Read More