சங்க காலம் தொட்டு இக்காலம் வரை தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மன்னர்களும் ஆண்டிருக்கிறார்கள். அந்த வகையில் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளான இந்த தமிழகத்தின் வரலாற்றையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் தாங்கி பிடிக்க கூடிய முக்கிய இடங்கள் பற்றி இந்த கட்டுரையில் நீங்கள் விரிவாக பார்க்கலாம். இன்று வரை தமிழகத்தின் பாரம்பரியம் இந்த ஊர்களின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை அறிந்தால் அது உங்களுக்கு வியப்பாக இருக்கும். இதில் முதலாவது இடத்தில் இருப்பது […]Read More
Tags :Tamilnadu
Omicron வகை கொரோனா வேகமாக பரவ தொடங்கியதிலிருந்து நாடெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருகிறது. இன்று இரவு 10 மணி முதல் தமிழ்நாட்டில் இரவு நேர முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் என்னென்னவென்று இப்பதிவில் காணலாம். உணவகங்கள், விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் […]Read More
பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்பதை தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழ் வழியில் பயிலும் மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. எஸ்எஸ்எல்சி மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் தமிழ்வழியில் 12 ஆம் வகுப்பில் […]Read More
கொரோனா வைரஸ்-ன் புதிய பரிமானமான ஓமிக்ரான் வைரஸ் தமிழகத்திற்குள்ளும் நுழைந்துவிட்டது. நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய 47 வயதான சென்னை நபர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு ஓமிக்ரான் தாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸுக்கான முதல் பதிவு இதுவே என சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக டிசம்பர் 10ஆம் தேதி வந்த பயணிக்கு கோவிட் சோதனை செய்யப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆறு பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. […]Read More
இயல்பை விட இந்த வருடம் தமிழகத்தில் அதிகமாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இதற்கு முன் பெய்த கன மழையினால் ஏற்பட்ட சேதங்களை அரசாங்கம் சரி செய்துவரும் நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நவம்பர் 25ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மழையின் தாக்கம் […]Read More
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20 சதவீதம் அரசு பணிகளில் இட ஒதுக்கீடு என அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் பயிற்றுமொழி சேர்க்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமன் வர்மா அறிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக அரசு, அரசுப் பணிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு குறிப்பிட்ட இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு முனைப்பு காட்டி வந்தது. இந்நிலையில் சட்டசபையில் 20% தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. […]Read More
நடந்து முடிந்த சையது முஸ்தக் அலி கிரிக்கெட் போட்டிகளில் தமிழ்நாடு அணி தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இறுதிப் போட்டியில் கர்நாடக அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு வெற்றி வாகை சூடியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்களுக்கு 151 ரன்கள் எடுத்து 152 ரன்களை இலக்காக தமிழ்நாடு அணிக்கு நிர்ணயித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ஹரி […]Read More