
நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வீட்டில் வளர்க்க தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என ஈரான் அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. இது அந்த நாட்டில் வசிக்கும் செல்லப்பிராணிகளின் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பன்றிகளை போல நாய், பூனைகளும் அசுத்தமானவை என ஈரான் அரசு கருதுவதே இந்த சட்டம் நிறைவேற்றுவதற்கான காரணம் என விமர்சனங்கள் எழுகின்றன. 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் கையெழுத்துடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகளை விட சுற்றியிருக்கும் மனிதர்களிடம் அதிகம் அன்பு காட்ட வேண்டும் என்பதை மக்களுக்கு வலியுறுத்தவே இது போன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்ற முன்வந்துள்ளதாக ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Nowஇந்த மசோதாவின்படி நாய்கள், பூனைகள் வைத்திருப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுமாம். மேலும் இந்த மசோதா நிறைவேறிய பின் நாய்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து நாய்களையும் மூன்று மாதங்களுக்குள் பறிமுதல் செய்வார்களாம்.
கூடுதலாக வீட்டு உரிமையாளர்கள் தங்களது குடியிருப்புகளை நாய் மற்றும் பூனை வைத்திருக்கும் நபர்களுக்கு வாடகைக்கு விட அனுமதிக்கப்பட மாட்டார்கள். நாய்கள் நடமாடுவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவதாக அந்நாட்டின் அரசு நம்புகிறது.

ஈரானின் இந்த சட்டத்தை உலகெங்கிலுமுள்ள நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாய், பூனை பிரியர்கள் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
நாய், பூனை போன்ற விலங்குகளை கொடூரமான விலங்குகளாக கருதி தடை செய்வது எந்த விதத்தில் நியாயம் என செல்லப்பிராணிகளின் பிரியர்கள் ஆக்ரோஷத்துடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஈரான் நாட்டில் வசிக்கும் செல்லப்பிராணிகளின் பிரியர்களே இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் உள்ள பூனை வளர்ப்பவர்கள், தங்களது பூனையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து “இந்த செல்லப்பிராணி பார்ப்பதற்கு Criminal போலவா இருக்கிறது?” என்ற கேள்வியுடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் கைப்பற்றப்படும் செல்லப்பிராணிகளை ஈரான் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை குறித்த சரியான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
- நம்மை பார்த்தும் பயப்படுபவர்கள் இருக்கிறார்களா? – ஒரு முயலின் வாழ்க்கை மாற்றிய சிந்தனை!
- தங்க மலைகளின் நாடு கொங்கோ: வறுமையின் விளிம்பில் ஒரு வளமான தேசத்தின் சோக கதை!
- பூமியின் புவிஈர்ப்பு விசை: நாம் தலைகீழாக ஏன் விழவில்லை?
- நார்வேயின் இருண்ட நகரத்தில் சூரிய ஒளியை கொண்டு வந்த அதிசயம் – ருஜுகன் நகரின் கதை என்ன?
- காதல் மொழி என்றால் என்ன? உங்கள் துணையின் காதல் மொழியை புரிந்துகொள்ள இதோ 5 முக்கிய குறிப்புகள்!
மனிதர்கள் மற்ற இனத்தின் மீது பாசம் வைப்பதை இது போன்ற சட்டங்கள் தடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.