Skip to content
May 19, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சிறப்பு கட்டுரை
  •  யார் இந்த தேவதாசிகள்? மறைக்கப்பட்ட உண்மை வரலாறு..
  • சிறப்பு கட்டுரை

 யார் இந்த தேவதாசிகள்? மறைக்கப்பட்ட உண்மை வரலாறு..

Brindha August 10, 2023 1 min read
Devadasi

Devadasi

540

சர்ச்சைக்கு உரிய வார்த்தையான இந்த தேவதாசி பற்றிய பொருள் இன்றும் பலர் மத்தியில் ஒரு விவாத பொருளாகவே உள்ளது. அப்படிப்பட்ட தேவதாசிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? இவர்களின் உண்மையான வரலாறு என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


தேவதாசி என்ற சொல் ஒரு தமிழ் சொல் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சொல்லானது வடமொழியில் இருந்து பிறந்த சொல் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த முறையானது ஆறாம் நூற்றாண்டில் தான் புழக்கத்தில் இருந்து உள்ளதாக வரலாற்றில் குறிப்புக்கள் உள்ளது.

சிந்து சமவெளி நாகரீக காலத்திலும், அதற்கு முந்தைய வேதக காலத்திலும் இந்த தேவதாசி முறை நடைமுறையில் இருந்ததாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்காக தொண்டு செய்ய அர்ப்பணிக்கப்பட்ட இந்த தேவதாசிகள் ஆலயங்களில் நிகழும் விழா காலங்களில் இசை, நடனம் போன்றவற்றை மேற்கொள்ள கூடிய வகையில் இருந்தவர்கள். எனவே தான் இவர்களை தேவதாசிகள் என்று அழைத்தார்கள். தேவனின் அடிமை என்று இதற்குப் பொருள் ஆகும்.


Devadasi
Devadasi

சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருந்த இந்த பெண்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆண்களின் பாலியல் பொருளாக மாற்றப்பட்டார்கள் என்று வரலாறு கூறுகிறது. இந்த வார்த்தையை கேட்கும் போதே சிலர் கொந்தளிக்க கூடிய நிலைக்கு கோபம் கொள்வார்கள்.

மேலும் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் நடனக் கலையில் முக்கிய நிலையில் இருந்திருக்கக் கூடிய இந்த பெண்கள் பற்றி சித்தரிக்க கூடிய மிகச்சிறிய வெண்கல சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.


Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

அதுமட்டுமல்லாமல் வேத காலத்தில் குறிப்பாக ரிக் வேதத்தில் நடனமாதுகள் பற்றிய குறிப்புக்கள் கூறப்பட்டுள்ளது. அத்தோடு உஷா என்ற ஆடல் அரசியை ரிக் வேதம் நேர்த்தியான முறையில் வருணித்துள்ளது.


இந்த தேவதாசி என்ற சொல் ஆனது. ஆந்திராவில் மாதங்கி என்றும் விலாசினி என்றும் கொங்கனியில் நாயகி என்றும் மராட்டியத்தில் பாசவி என்றும் கர்நாடகாவில் சூலி, சானி எனவும் ஒடிசாவில் மக எனவும் உத்தரப்பிரதேசத்தில் பாலினி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

சங்க இலக்கியங்களில் இவர்களை பதியிலாள், மாணிக்கம், தளிச்சேரி, பெண்டுகள் என்று  கூறி இருக்கிறார்கள். வைணவ மதங்களில் உள்ள ஆகமங்களின் இந்த பெண்களை ருத்ர கன்னிகள் என்று கூறுகிறார்கள்.


இவர்கள் மனதாலும் உடலாலும் தூய்மையானவர்கள் என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்களாக இருக்கக்கூடிய இந்த தேவதாசிகளை சைவ சமயக்குறவர்களில் முதன்மையான திருநாவுக்கரசரும் போற்றிப் பாடி இருக்கிறார்.

Devadasi
Devadasi

அது மட்டுமா? சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியார் ஒரு தேவதாசி என்று கூறுகிறார்கள். இவர்கள் இருவரின் காதலுக்கு சிவபெருமான் தூது சென்றதாக புராணங்களில் கூட செய்திகள் கூறப்பட்டுள்ளது. எனவே தேவதாசிகள் மிகவும் உயர்ந்தவர்கள் என்பதற்கு இதைவிட மிக நல்ல உதாரணத்தை நாம் கூற முடியாது.

தேவதாசிகளில் இரண்டு வகை காணப்படுகிறது. அதில் முதல் வகை யாரையும் கணவனாக ஏற்காமல் இறைவனை மட்டுமே நினைத்து வாழ்பவர்கள் இவர்களுக்கு நித்திய சுமங்கலிகள் என்ற பெயர் உண்டு. இரண்டாவது வகையைச் சார்ந்தவர்கள் ருத்ர கன்னிகள். இவர்கள் கோவில்களில் நடனம் ஆடி தனக்கு மனதுக்கு பிடித்த ஒருவரோடு இல்லறம் நடத்துவார்கள்.


மிகவும் ஒழுக்கமான முறையில் இவர்கள் வாழ்க்கையை செவ்வனே செய்தவர்கள். ஆனால் பிற்கால சமூகம் இவர்களை வேறு பாதைக்குள் அழைத்துச் சென்றது என்பதுதான் உண்மை. குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை நாம் தேவதாசி என்று தான் கூறுகிறோம். பல்வேறு ஜாதியை சேர்ந்த பெண்கள் எந்த தேவதாசிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளது.

Devadasi
Devadasi

தமிழர்களின் ஆதி சமூகத்தில் பிறந்த மூத்த பெண்ணை கோவிலுக்கு நேர்ந்து விடக்கூடிய பழக்கம் உள்ளது. இந்த பழக்கம் மறவர், வேளாளர், அந்தணர் என ஜாதி வேறுபாடு இல்லாமல் நடந்துள்ளது.


ஆலயங்களில் காலை மாலை உச்சி வேலை பூஜைகளின் சமயத்தில் இறைவன் முன்னிலையில் நடனம் ஆடுவது இவர்களது முக்கிய பணியாக இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு கடவுளை பள்ளிகளுக்கு எடுத்துச் சொல்லும் செல்லும்போது லாலி ஊஞ்சல், திருத்தாழ் அடைப்பு பாடல்களை பாடுவது முக்கிய கடமையாக இருந்தது.

மேலும் இவர்கள் கோயிலில் இருந்த பூஜை பாத்திரங்களை துலக்குவது, கோவிலை சுத்தப்படுத்துவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள். 90 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூஜை செய்யும் நபர்கள் எப்படி கருவறைக்கு சென்று வருகிறார்களோ, அது போலவே தேவதாசிகளும் கருவறைக்குள் சென்று வந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.



இவ்வளவு ஏன் புத்த சமண சமயங்களில் கூட புத்த பள்ளிகளிலும், தேவதாசிகள் பணி புரிந்திருக்கிறார்கள் என்றால் அது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும். புத்தரே தனது இறுதி காலத்தில் அபிராபாலி என்ற தேவதாசியிடம் மாந்தோப்பு ஒன்றை தானமாக பெற்று சங்கம் நிறுவ பயன்படுத்துகிறார்கள் என யுவான் சாங் குறிப்பில் கூறியிருக்கிறார்.

Devadasi
Devadasi

எப்படி இந்த சொல் ஒரு அவமான சின்னமாக சமுதாயத்தில் மாறியது, என்றால் திடீர் என மாறவில்லை என்று தான் கூற வேண்டும். நடனமாடிய பெண்கள் அரசன் முன்னும் நடமாட வேண்டும் என்ற சூழ்நிலை படிப்படியாக உருவாகி, தேவதாசிகளின் சீரழிவுக்கு ஆரம்பமாக இருந்தது.


இந்த சூழ்நிலையில் ராஜ ராஜ சோழன் காலத்தில் 1774 இல் பணக்கார வணிகர் நான்கு ஏழைப் பெண்களை 700 தங்க காசுகளுக்கு வாங்கி திருவிழா காடு கோவிலுக்கு தானம் செய்ததாக கல்வெட்டுகளில் செய்திகள் வந்துள்ளது.

நாளடைவில் அரசர்களும் அவர்களுக்கு கீழ் இருந்த சிற்றரசர்களும், ஜமீன்தார்களும் பல தேவதாசிகளை தங்களுடைய ஆசை நாயகிகளாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். இதனை அடுத்து இவர்களது சூழ்நிலை மோசமாக இவர்கள் பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள்.



மனிதர்களின் வக்கர புத்தியால் தெய்வீகத் தன்மையோடு கருதப்பட்ட தேவதாசிகளின் நிலைமை மிகவும் கீழ்த்தரமாக மாறியதோடு மட்டுமல்லாமல் வயதான தேவதாசிகள் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். எனவே தான் இந்த முறையை அடியோடு அழிக்க பலரும் பாடுபட்டு கடைசியில் வெற்றியடைந்தார்கள்.

Tags: Devadasi தேவதாசிகள்

Continue Reading

Previous: நாம் வாழும் உலகத்தில் பேய் இருக்கிறதா? இல்லையா? – உறைய வைக்கும் கருத்துக்கள்..
Next: “ரொம்ப ஓவரா பேசுவாரோ..!”- நீளமான நாக்கு உடைய மனிதர்…

Related Stories

fa
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

சர்வதேச குடும்பங்கள் நாள் 2025: மே 15இல் உலகம் ஏன் குடும்பங்களைக் கொண்டாடுகிறது?

Vishnu May 15, 2025
bu
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

நிலவொளி தியானத்தில் புத்தரின் ஞானம் பெற முடியுமா? வைசாகா பூர்ணிமையின் அதிசய இரகசியங்கள்

Vishnu May 12, 2025
nu
1 min read
  • சிறப்பு கட்டுரை

உலக செவிலியர் தினம் 2025: ஒளி ஏந்தும் கைகள் – புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பாரம்பரியத்தை எவ்வாறு இன்றைய செவிலியர்கள் தொடர்கிறார்கள்?

Vishnu May 12, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024
sunday
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

உலகின் மதங்களில் வார இறுதி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது?

Vishnu November 18, 2024
Idi-amin-thum
1 min read
  • மர்மங்கள்

உகாண்டாவின் கொடூர ஆட்சியாளர் இடி அமீன்: 5 மனைவிகள், 40 குழந்தைகள் – அவரது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன?

Vishnu October 28, 2024
ரவி மோகனின் வாழ்க்கையில் ஒளி கொண்டுவந்த கெனிஷா – உண்மையான காதல் கதையா? ra 1

ரவி மோகனின் வாழ்க்கையில் ஒளி கொண்டுவந்த கெனிஷா – உண்மையான காதல் கதையா?

May 15, 2025
சர்வதேச குடும்பங்கள் நாள் 2025: மே 15இல் உலகம் ஏன் குடும்பங்களைக் கொண்டாடுகிறது? fa 2

சர்வதேச குடும்பங்கள் நாள் 2025: மே 15இல் உலகம் ஏன் குடும்பங்களைக் கொண்டாடுகிறது?

May 15, 2025
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் – 6 ஆண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த நீதியா? c 3

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் – 6 ஆண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த நீதியா?

May 13, 2025
நிலவொளி தியானத்தில் புத்தரின் ஞானம் பெற முடியுமா? வைசாகா பூர்ணிமையின் அதிசய இரகசியங்கள் bu 4

நிலவொளி தியானத்தில் புத்தரின் ஞானம் பெற முடியுமா? வைசாகா பூர்ணிமையின் அதிசய இரகசியங்கள்

May 12, 2025
உலக செவிலியர் தினம் 2025: ஒளி ஏந்தும் கைகள் – புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பாரம்பரியத்தை எவ்வாறு இன்றைய செவிலியர்கள் தொடர்கிறார்கள்? nu 5

உலக செவிலியர் தினம் 2025: ஒளி ஏந்தும் கைகள் – புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பாரம்பரியத்தை எவ்வாறு இன்றைய செவிலியர்கள் தொடர்கிறார்கள்?

May 12, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

ra
1 min read
  • Cinema News
  • Viral News
  • சினிமா

ரவி மோகனின் வாழ்க்கையில் ஒளி கொண்டுவந்த கெனிஷா – உண்மையான காதல் கதையா?

Vishnu May 15, 2025
fa
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

சர்வதேச குடும்பங்கள் நாள் 2025: மே 15இல் உலகம் ஏன் குடும்பங்களைக் கொண்டாடுகிறது?

Vishnu May 15, 2025
c
1 min read
  • Viral News

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் – 6 ஆண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த நீதியா?

Vishnu May 13, 2025
bu
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

நிலவொளி தியானத்தில் புத்தரின் ஞானம் பெற முடியுமா? வைசாகா பூர்ணிமையின் அதிசய இரகசியங்கள்

Vishnu May 12, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version