• April 3, 2024

எங்கே? மனித நேயம்!

 எங்கே? மனித நேயம்!

ஏய் மானிடா!
மனித நேயம் ஒன்று இருப்பின்
அன்னமாகிய அன்னாசியின் நடுவே,
அணுகுண்டு வைப்பாயா?
நம்மை நம்பி வந்த தந்தியை
நஞ்சிட்டு கொன்ற
வஞ்சகனே!
உன்னை வஞ்சிட
வார்த்தைகள் இல்லையடா பாவி!


தம்மை நாடி வந்ததால்,
நால்வாய் பிளந்து – தன்
நாடி இழந்து ,
நாட்கள் ஆனதடா துரோகி!
ஆடாமல் அசையாமல்,
வெள்ளியர் ஆற்றின் நடுவே,
ஆழத்தை மறந்து,
தன்னோடு தன் கருவையும்,
கறுக்கியப் பாவி
எவனோ?

ஏய், இயற்கையே
எரித்து விடு அவனை!
அவன் சாம்பலும் – கரையாமல்
சுற்றி திரியட்டும் ஆவியாய், பாவியாய்!!!


K. கார்த்திக்

K. கார்த்திக்

செஞ்சிக் கோட்டை,
விழுப்புரம் மாவட்டம்.