• July 27, 2024

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாகற்காய் சாறு – இவ்வளவு நன்மைகளா?.

 உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாகற்காய் சாறு – இவ்வளவு நன்மைகளா?.

Bitter Gourd

அறு சுவைகளில் கசப்பு என்பது மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த கசப்பு பாகற்காயில் உள்ளது. எனவே பாகற்காயை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும்.

பாகற்காய் உணவுப் பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. மேலும் பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். 

Bitter Gourd
Bitter Gourd

பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் இருமல், இரைப்பு, மூலம் ,வயிற்றுப் புழு தொல்லை நீங்கும். 

பாகற்காய் இலைச்சாறு ஒரு அவுன்சு, சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை ,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். 

பாகற்காய் ஜூஸ் செய்து குடித்து வந்தால் செரிமான அமிலம் சுரப்பது மேம்படும். இது பசியை தூண்டும், கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் இரண்டு வேளை ஒரு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். 

Bitter Gourd
Bitter Gourd

பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அதிக அளவு தொடர்ந்து நாம் சாப்பிடக்கூடாது. நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு நல்ல மருந்து .பாக இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க் கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

ஒரு பிடி கொடி பாக இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். பாகற் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால்  பாம்பு கடித்த விஷம் நீங்கும். 

Bitter Gourd
Bitter Gourd

மேலும் உடலில் கட்டி ,புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழம் சாறு கலந்து வெறும் வயிற்றில் மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாக மாறிவிடும். 

பாகற்காயில் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் சம்மந்தமான நோய்களுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது .மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

 எனவே வாரத்தில் ஒருமுறையாவது நீங்கள் பாகற்காயை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உங்கள் ஆரோக்கியம் நல்ல முறையில் பாதுகாக்கப்படும்.