• July 27, 2024

“பட்டாம்பூச்சியின் சிறகு அசைப்பு..!” – 1000 கிமீ தொலைவில் சூறாவளி  அறிகுறியா?

 “பட்டாம்பூச்சியின் சிறகு அசைப்பு..!” – 1000 கிமீ தொலைவில் சூறாவளி  அறிகுறியா?

Butterfly effect

என்னடா.. சொல்லறீங்க.. ஒரு பட்டாம்பூச்சி சிறகை அடிப்பதால் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சூறாவளி ஏற்படும் என்பதை அறிவிக்கின்ற அறிவிப்பா? என்ற செய்தி உங்கள் மனதில் பலவிதமான சந்தேகங்களை கிளறி விடும்.

ஆனால் அது உண்மை தான் இதைத்தான் பட்டாம்பூச்சி விளைவு என்று கூறுகிறார்கள். பட்டாம்பூச்சியின் இறகுகள் படபடப்பினால் வானிலை பாதிக்கப்படும் என்ற உண்மையை விஞ்ஞானிகள் கூறி இருப்பது மிகப்பெரிய ஆச்சிரியத்தை பலர் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.

Butterfly effect
Butterfly effect

இதனை அடுத்து பட்டாம் பூச்சி 10 அல்லது 20 நாட்களுக்கு முன்பே ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்தாலும் அவற்றின் சிறகு அடிப்பதை வைத்து இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

நியூ மெக்சிகோவில் பட்டாம்பூச்சிகள் அதன் இறக்கைகளை அசைத்ததால் சூறாவளி ஏற்பட்டது என்ற கருத்துக்கள் இன்று வரை நிலவி வருகிறது. எனினும் இதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.

மேலும் பட்டாம்பூச்சியின் இறகுகள் அடிக்கக்கூடிய விதத்தை வைத்து காலநிலை மாறுபாடுகளையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் முன்கூட்டியே கண்டறிய முடியும் என கூறுகிறார்கள்.

Butterfly effect
Butterfly effect

CHAOS THEORY என்பது பட்டாம்பூச்சி விளைவுடன் தொடர்பு கொண்டது. இது நமக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே கணித்து சொல்ல கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த பட்டாம்பூச்சி விளைவை கண்டுபிடித்தவர் EDWORD NORTON LORENCE. இவர் 1960 ஆம் ஆண்டு எந்த விளைவை கண்டுபிடித்தார். மிகச் சிறந்த வானியியலாளரான இவர் வானிலையை கணிப்பதற்கு SIMULATION TOOL கண்டறிந்தார்.

காலநிலை மாற்றங்களை வைத்து அடுத்த இரண்டு மாதங்களுக்கான காலநிலையை கண்டறிய இவர் இதனை பயன்படுத்தினார். பிறகு இதன் வேல்யூக்களை இன்செட் செய்து விட்டு இரண்டு மணி நேரம் கழித்து அதை பார்க்கும் போது மிகப்பெரிய சூறாவளி வரும் என்பதை அறிந்து கொண்டார்.

Butterfly effect
Butterfly effect

எப்படி நிகழ்ந்தது என்பதை சிந்தித்த பிறகு தான் இவர் முதலில் கொடுத்த அளவு 0.506 ஆனால் இரண்டாவதாக கொடுக்கப்பட்ட அளவு 0.506.127 என்பதாகும். இந்த அளவு மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்ததின் மூலம் இதற்கு பட்டர்பிளை விளைவு என்ற பெயரை வைத்தார்.

இப்போது சொல்லுங்கள் பட்டாம் பூச்சியின் இறக்கை அசைவில் கூட இயற்கையின் தன்மை மிக நேர்த்தியான முறையில் வெளிப்படுவதால் தான் இயற்கையை என்றும் பாதுகாக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள்  இருக்கிறார்கள்.