• May 19, 2024

தீய பலன்கள் தரும் கனவுகள் எவை எவை என தெரிந்து கொள்ளலாமா?..

 தீய பலன்கள் தரும் கனவுகள் எவை எவை என தெரிந்து கொள்ளலாமா?..

Dream

இரவில் காணும் கனவுகளுக்கு பலன் உண்டு ஆனால் பகல் கனவு பலன் தராது என்பது பல பேருக்கும் தெரியாது அந்த வகையில் கனவுகள் ஏற்பட்டால் அவற்றின் மூலம் நமக்கு சில சமயம் நன்மைகள் ஏற்படும். எனினும் நாம் காணும் தொடர்பற்ற கனவுகளின் மூலமும் புரியாத கனவுகளின் மூலமும் தீமை ஏற்படும்.


எனவே நாம் காணும் கனவுகளை இரண்டு நிலைகளாக பிரிக்கலாம். அவை ஒன்று நல்லவற்றை நமக்கு ஏற்படுத்தும், மற்றொன்று தீயவற்றை ஏற்படுத்தும். எனவே இந்த  பதிவில் நீங்கள் தீய பலன்கள் தரக்கூடிய கனவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம். 

Dream
Dream

உங்களுக்கு தேனீக்கள் கொட்டுவதை போல கனவு ஏற்பட்டால் வீண் செலவுகள் ஏற்படும். அத்தோடு உங்கள் குடும்பம் பிரியக் கூடிய சூழ்நிலை உருவாகும். 


எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும். இடியுடன் மழை பெய்வது போல் கனவு கண்டால் உறவினர்கள் எல்லாம் விரோதியாக நமக்கு மாறுவார்கள்.

பசு நம்மை விரட்டுவதை போல் கனவு கண்டால், உடல் நலம் கெட்டு வியாதிகள் ஏற்படலாம். காக்கை கத்துவது போல் கனவு கண்டால், வீட்டில் திருட்டு நடக்கவோ அல்லது வியாபாரத்தில் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

Dream
Dream

நிர்வாண கோலத்தை கனவில் கண்டால் அவமானம் தேடி வருமாம். நோய் பிடித்ததாக கனவு கண்டால் நமது நெருங்கிய நண்பர்கள் நம்மை ஏமாற்றுவார்கள். புயல், காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் கெட்டு நோய் ஏற்படும். 

பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் நஷ்டம் ஏற்படும். முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை ஏற்படும். பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நம்பர் நண்பர்களால் ஏமாற்றப்படுவார்கள். 


Dream
Dream

கையில் இருந்த பொருள் விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும் செல்வாக்கு சரியும். ஊனம் ஆவதை போல் கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும். முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும். 

சமையல் செய்வது போல் கனவு வந்தால் அவமானம் வந்து சேரும். மேற்கூறிய கனவுகள் உங்களுக்கு இரவு நேரத்தில் ஏற்பட்டால் நீங்கள் தயங்காமல் கண் விழித்த பிறகு தெய்வத்தை பிரார்த்தித்த பிறகு உறங்குங்கள். கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் அத்தோடு கடவுள் பக்க பலமாக இருந்து உங்கள் துயரத்தை துடைக்க உறுதுணையாக இருப்பார்.