• June 6, 2023

Tags :தமிழ் கவிதைகள்

கவிதைகள்

மரங்கள் நம் வரங்கள்

பல நூறு மரங்களைஅழித்து வீழ்த்தி விட்டுஇளைப்பாற இன்னொருமரத்தடி தேடிச் சென்றுநிம்மதி பெரு மூச்சி விடுகிறாய் மனிதா மனம் மரத்துப்போனமடமனிதா வேரறுக்கும் உனக்கு வேரில்லாததால் மரத்தின்வேதனை தெரிவதில்லை மதங்களை பிடித்த உனக்குமரங்களை வெட்டும்மதம்பிடித்து கொண்டதோ மரங்களை வெட்டி கீழ் வீழ்த்தும்அறைகுறை மனிதாவெட்டவெளியில் வேல் வெயில் உன்னை சுட்டுக்குடைந்து உயிர்வருத்தி வதம் செய்யும் உள்ளுணர்வகளுக்குள் கடைசி ஓலம் உன் சந்ததியின் காதில்நுழைந்து ஊடுருவிஉயிரணுவரை சென்றுஉருத்தி கிரங்கடிக்கும் மடமனிதா ஒருபோதும்மறந்துவிடாதே மரங்கள்மனிதனை விட மிகவும் மகத்துவம் வாய்ந்தது நாம் ஆரோக்கிய வாழ்வைவளமாய் […]Read More

கவிதைகள்

பிறப்பொன்றே எம்தமிழ்

தனிப் பெருமையோடெம் தமிழ்தரணியாளும் தங்கத்தமிழ்உயர்வினும் உயர்த் தமிழ்உடலல்ல எம்முயிர்த் தமிழ் ஊமையும் உரக்கப் பேசசிறக்கச் செய்ததெம் தமிழ்மொழியையும் விழிகளாய்உற்றுப் பார்க்கச் செய்ததெம் தமிழ் பூமித்தாயையே சேயாய்பெற்றெடுத்ததெம் தமிழ்பூமிக்கே ஓர் உணர்வடிவம்முதலாய் தந்ததெம் தமிழ் கற்காலம் கடந்து வந்தேபொற்காலம் செய்ததெம் தமிழ்கர்ப்பினை பொற்கொடை என்றேபோற்றி பறைசாற்றியதெம் தமிழ் நரம்பினில் இரும்புக் குழம்பெனகொதித் தோடியதெம் தமிழ்புறம் கூறி புலம்பு வார்க்கெல்லாம்செம்மையை உரைத்ததெம் தமிழ் தெய்வமே திருவருளியதெம் தமிழ்அசரீரியாய் ஒலியெழுந்ததெம் தமிழ்அன்பின் ஆழமதில் அடையாளமாய்அர்த்தம் தந்ததெம் தமிழ் பிறக்கும் குழந்தையாய்பிறந்தோங்குவதும் எம்தமிழ்யாதழிந்த […]Read More

கவிதைகள்

இல்லறம் ஆளும் பெண்ணே!

இல்லறம் ஆளும் பெண்ணே!நீ உன் உறவுகளின் நல்லறம் கருதிஉன்னைத் தொலைப்பது ஏனோ? திருமணம் என்னும் தூண்டிலில் நீ சிக்காமல்,உன் சிறகுகளை விரித்துஉன் திறமையை நோக்கி நீ செல்.. வானவில் உன் வாழ்வில்வண்ணம் தூவதூயவள் நீயும் தலைநிமிர்ந்து செல்..!Read More

கவிதைகள்

அழகுத் தமிழாம்!

அன்பும் தமிழாம்!அழகும் தமிழாம்!! ஆதியும் தமிழாம்!ஆக்கமும் தமிழாம்!! இன்பமும் தமிழாம்!இயற்கையும் தமிழாம்!! ஈரமும் தமிழாம்!ஈர்ப்பும் தமிழாம்!! உண்மையும் தமிழாம்!உயர்வும் தமிழாம்!! ஊனும் தமிழாம்!ஊக்கமும் தமிழாம்!! எண்ணமும் தமிழாம்!எழுச்சியும் தமிழாம்!! ஏகனும் தமிழாம்!ஏற்றமும் தமிழாம்!! ஐயமும் தமிழாம்!ஐம்புலனும் தமிழாம்!! ஒழுக்கமும் தமிழாம்!ஒற்றுமையும் தமிழாம்!! ஓங்கும் தமிழாம்!ஓர்மையும் தமிழாம்!! ஒளதசியமும் தமிழாம்!அதுவே, ஒளவை போற்றிய அழகுத் தமிழாம்!! சனோஃபர் எழுத்தாளர் ஏகன் – இறைவன் ஓர்மை – துணிவு ஒளதசியம் – அமிர்தம்Read More

கவிதைகள்

பெண்ணியம் பேசுகிறேன்!!

நான்…பெண்ணியம் பேசுகிறேன்!! பெண்ணே,நீ கல்வி பயின்றாய்…நான் கண் விழித்தேன்!நீ சொந்த காலில் நின்றாய்…நான் வளர்ந்தேன்!நீ மேடைகள் ஏறினாய்…நான் சிறகு விரித்தேன்!நீ விண்ணில் கால் பதித்தாய்…நான் பறந்தேன்!நீ உயர உயர..நான் உயர பறந்தேன்!! ஆனால்…பெண்ணே,நீ வெண்சுருட்டு புகைத்தாய்…நான் வேகம் குறைந்தேன்!நீ மது அருந்தினாய்…நான் சிறகிழந்தேன்!நீ நாகரிகமென உடைகள் சுருக்கினாய்…நான் வீழ்ந்தேன்!நீ திசை மாறினாய்…நான் சோர்ந்துவிட்டேன்!நீ பெண்மையை மறந்தால்,நான் கூட்டினில் அடைந்துவிடுவேன்!! பெண்ணே,நீ வாழ…நான் வாழ்வேன்!நீ வீழ்ந்தால்…நான் வீழ்வேன்!நீ விழித்துக்கொள்!பெண்மையை பேணிக்கொள்!பெண்ணியத்தை பாதுகாத்துக்கொள்! பெண்…அழகு..!பெண்மை…பெண்ணுக்கு அழகு..!!பெண்ணியம்…பெண்ணுக்கும், பெண்மைக்கும் பேரழகு!!! நான்…பெண்ணியம் […]Read More

கவிதைகள்

அழகும் பேரழகும்

அழகு மெய்பேசும் விழி அழகு,கவிபாடும் குயில் அழகு,அழியாத தமிழ் அழகு,அறிவான பெண் அழகு! பேரழகு மெய்யாக வாழ வழிச்செய்வது பேரழகு,குயில் பாட மரம் வளர்தல் மெய்யாக பேரழகு,உயிராக தமிழ் காத்தல் பேரழகில் பேரழகு,அறிவான பெண்களுக்கு அனுபவமே பேரழகு! – இரா.கார்த்திகாRead More

கவிதைகள்

இறை தேடல்

பொருளைத் தேடிபுகழைத் தேடிஉறவைத் தேடிஉரிமை தேடிஇளமை தேடிஇனிமை தேடிசுகத்தைத் தேடிசிரிப்பைத் தேடிபொன்னைத் தேடிமண்ணைத் தேடிவிண்ணைத் தொட்டும்…மண்ணில் விழுந்துகண்ணை விற்றும்ஓவியம் வாங்கிமுற்றுப் பெறாததேடலில் மூழ்கிமுத்தான வாழ்வைத்தொலைத்து மருகிசத்தம் நிறைந்தஅலை மனமாகிபித்தன் என்றேபிழையுற்று நின்றேன்! தேடல் முடிவில்…அடைவொன்றும் இல்லைநிறைவென்ற நிம்மதிநிகழவும் இல்லை!குழம்பி நிற்கையில்குரலொன்று கேட்டேன்…நகைப்பின் ஊடே அதுநலம் சொலக் கேட்டேன்! “முடிவுறும் தேடலில்நிறை தனைக் கண்டிடும்இடமது மறைபொருள்இறையது தானே!அதை…அடைந்திடும் வழியெனும்விடுகதை விளங்கிடசிரம் கொடு செவி மடுஅலையுறு மனமே!மறைபொருள் இறை தனைக்காட்டிடும் நிறைமதிதடுத்திடும் தளை தனைக்களைந்திடு மனமே! உடலொடு உயிர் தனைப்பிணைந்திடும் […]Read More

கவிதைகள்

வா இப்படி வாழலாம்!

கல்லையே கரைக்கும் நமதுபேச்சால் கரைப்போம்,உன் தாய், தந்தை, அண்ணனை! காத்திருப்போம்கல்யாணம் செய்வோம்,கண்ணாடி வீடு கட்டிஅண்ணாந்து நிலா பார்ப்போம்! நாம் நிலா மூவர் மட்டும்தினம்தோறும் விழித்திருப்போம்! பைக்கில் பயணம் செய்துதாஜ்மஹாலில் இளைப்பாறுவோம்! விடுமுறைக்கு சுற்றுலா செல்வார்கள்,நாம் உலகம் சுற்றிவிட்டுவிடுமுறைக்கு மட்டும் வீடு வருவோம்! தப்பில்லாமல் சமையல் செய்ய,சில மாதம் எடுத்துக்கொள்வோம்! கதவு இல்லா வாசல் வைத்து,வந்தவர்க்கெல்லாம் உணவளிப்போம்!வாடி நிற்கும் அனைவருக்கும்தேடிச்சென்று உதவி செய்வோம்!! காலையில் இயற்கையோடு ஓட்டம் ஓடுவோம்,மாலையில் கால்பந்துஆடுவோம்! மழை பெய்தால் நனைந்துகொண்டேகாகிதக் கப்பல் விடுவோம்!கை கோர்த்து […]Read More

கவிதைகள்

துள்ளித் திரியும் தாமரை மொட்டு!

தன்னைத் தானே தேடிக்கொண்டு,துள்ளித் திரியும் தாமரை மொட்டு!காற்றில் கலையாத கனவுகள் கண்டுவானவில் வண்ணம் அள்ளிக்கொண்டு…தன் பாதையை தேடி பயணம் மேற்கொண்டுஇவ்வுலகை வென்றாள் தீயான நின்று! – இரா.கார்த்திகாRead More

கவிதைகள்

பசலை போக்கு

நீயில்லா பொழுதுகளில்தொட்டாச்சிணுங்கியாகிப் போகிறதுமனமும் நினைவும் வா… வந்தென்பசலைப் போக்குயுகங்களாகுமென்இரவுகளைசூல் கொள்பிரசவிகக் காத்திருக்கிறேன்வா… வந்தென்பசலை போக்குRead More